Wednesday 30 May 2012

தவ்ஹீத் நகர் கிளை சார்பாக புரோஜெக்டர் மூலம் ஒளிபரப்பு (தாவா) செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம்,தவ்ஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 20.5.2012 அன்று மாலை 7 மணி அளவில் கோபால் தெருவில்...தொலைக்காட்சியில் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பில்
சகோதரர்.பக்கீர் முஹம்மத் அல்தாஃபீ அவர்கள் உரையாற்றிய
சொற்பொழிவை புரோஜெக்டர் மூலம் ஒளிபரப்பு (தாவா) செய்யப்பட்டது.
50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

மத்திய அரசை கண்டித்து போஸ்டர் – தவ்ஹீத் நகர் & அண்ணா நகர்

திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் & அண்ணா நகர் கிளைகளின் சார்பாக கடந்த 24-5-2012 அன்று ஹஜ் பயணிகளிடமிருந்து கொள்ளையடிப்பதை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

Tuesday 29 May 2012

விண்ணில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?

விண்ணில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?
(ஓர் ஆன்மீக அறிவியல் கண்ணோட்டம்)
உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் என்று நாளுக்கு நாள் இந்த உலகில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இந்த உலகின் வின்வெளி பற்றிய ஆய்வுகளும் அபூர்வங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வின்வெளியின் அமைப்பு அதன் செயற்பாடு பற்றியெல்லாம் பல ஆய்வுகளை அன்று தொடக்கம் இன்று வரை மனிதன் செய்தாலும் இதுவரை இந்த வின்வெளி ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கீங் கலிலியோ கலிலி போன்றவர்கள் தொடக்கம் இன்றுள்ள விஞ்ஞானிகள் வரை அனைவரையும் இந்த வின்வெளி பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துக் கொண்டுதான் இருக்கிறது.இனி விஷயத்திற்கு வருவோம்.
பறக்கும் தட்டு விளக்கம் என்ன?
பறக்கும் தட்டு என்ற பெயரில் ஒன்று இந்த உலகுக்கு அடிக்கடி வந்து போவதாகவும் அதில் ஏதோ மனிதனை ஒத்த தோற்றத்தில் உள்ளவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட வடிவத்தில் ஒரு வாகனத்தை வைத்துக் கொள்வதாகவும் அது உலகில் உள்ள வாகனங்களை விட வித்தியாசப் படுவதாகவும் சொல்லப் படுகிறது.ஆனால் இவையனைத்தும் வடி கட்டிய பொய்களாகும்.
(மேலதிக விபரங்களுக்கு பறக்கும் தட்டு பற்றிய நமது ஆய்வுக் கட்டுரையை படிக்கவும்)
மனிதன் விண்ணில் வாழ முடியுமா?
இந்த உலகைப் பொருத்தவரை மனிதன் வாழ்வதற்குறிய சிறப்பான தகுதியான இடமாக இறைவன் பூமியை மாத்திரம் தான் அமைத்திருக்கிறான் பூமியல்லாத எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாதென்பது உருதியாக்கப் பட்ட விஞ்ஞானமாக இருக்கிறது.
இதையே திருமறைக் குர்ஆனும் தெளிவாக உறுதிப் படுத்துகிறது.
பூமியில் தான் வாழ முடியும்.
மனிதன் பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் என்பதை கீழ்க்கானும் திருமறை வசனங்கள் தெளிவா எடுத்தியம்புகின்றன.
அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும் வசதியும் உள்ளன என்றும் நாம் கூறினோம்.(2:36)
(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும் வசதியும் உள்ளன  என்று (இறைவன்) கூறினான்.(7:24)’அதிலேயே(பூமியிலேயே)வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள் என்றும் கூறினான்.(7:25)
பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்(7:10)
அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்(30:25)
இவ்வசனங்களில் இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.
பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோள் சந்திரன் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக் கொள்வோம். சூரியனிலிருந்து 5 80 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது.
முதலாவது இக்கோளில் காற்று இல்லை. அடுத்து இக்கோளின் அதிகப் பட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் 180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத 40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம்.
அதே போன்று பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையே இக்கோளில் உள்ளது.
வீனஸ் எனப்படும் வெள்ளிக் கோளை எடுத்துக் கொண்டால் சூரியனிலிருந்து 10 08 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கும் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இதுவும் பூமியின் அதிகப்பட்ச வெப்பத்தைப் போல் சுமார் 10 மடங்கு ஆகும். மேலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் இங்கு இல்லை. எனவே இது கொதிக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இங்கும் மனிதர்கள் வாழ முடியாது.
மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது. சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலை விலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ள காற்றில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகித அளவுக்குத் தான் ஆக்ஸிஜன் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பம் 87 டிகிரி சென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் மைனஸ் 17 டிகிரியும் ஆகும். இதனால் இங்கும் மனிதன் வாழ முடியாது.
ஜூபிடர் எனும் வியாழன் கோள் சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது. மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கும் மனிதன் வாழ முடியாது.
சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு எப்பொருளும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே உள்ளது.
யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கி.மீ. தொலைவிலும் நெப்டிய+ன் கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவிலும் புலூட்டோ கிரகம் சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில் கற்பனை செய்ய முடியாத கடுங்குளிர் நிலவுகின்றது. எனவே இவற்றிலும் மனிதர்கள் வாழ முடியாது.
பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர் காற்று எதுவும் இங்கு இல்லை. பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும் இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும்.
சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள ப+மியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்.
சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.
மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும் குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது. சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கி விடும். சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். உயிர் வாழ அவசியமான காற்றும் ப+மியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில் அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக் கூடாது.
அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனி லிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடை குளிர் வசந்தம் மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன. வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது.
இறைவன் சொன்ன வார்த்தைகள் விஞ்ஞானமே தோற்றுப் போகும் அளவு மிகவும் உருதியானதாக உள்ளது.
ஏன் எனில் மனிதன் சுகமாக தனது வாழ்வை இந்தப் பூமியில் மாத்திரம் தான் கழிக்க முடியும் என்பது முக்காலமும் அறிந்த இறைவன் விதித்த முறையாகும்.
ஆக எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டாலும் கடைசிவரை மனிதன் இந்த பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் ஒரு சில நாட்கள் மாத்திரம் தான் எடுத்துச் செல்லும் ஆக்சிஜனைப் பயன் படுத்தி மற்ற கோள்களில் தங்க முடியும் அது தவிர பூமியில் வாழ்வதைப் போல் வாழ இயலாது என்பது தெளிவாகி விட்டது.
விண்ணில் உயிரினங்கள் வாழ்கிறதா?
பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்று திருமறை வசனம் தெரிவித்தது விஞ்ஞானமும் அதனை உருதிப்படுத்தியது.ஆனால் வின்னில் மனிதனால் வாழ முடியாதே தவிர அங்கு சில உயிரினங்கள் வாழ்கின்றன என்று விஞ்ஞானம் ஊகிப்பதை திருமறை மறுக்கவில்லை.
பூமியல்லாத மற்ற இடங்களில் மற்ற சில உயிரினங்கள் வாழத்தான் செய்கின்றன என்று திருமறையில் இறைவனே குறிப்பிடுகிறான்.
(ஆனால் பறக்கும் தட்டு தொடர்பான உயிரினங்கள் பற்றிய செய்திகள் பொய்யானவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்)
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.அவன் விரும்பும் போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்(42:29) மேற்கண்ட வசனத்தின் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும்என்ற வாசகத்தின் மூலம் பூமி அல்லாத மற்ற இடங்களில் நமது விஞ்ஞானத்தினால் இது வரை கண்டு பிடிக்காத (அறிவியல் வளர்ச்சியின் மூலம் பிற்காலத்தில் கண்டு பிடிக்கலாம்) உயிரினங்களை இறைவன் படைத்திருக்கும் செய்தியை தெளிவாக குறிப்பிடுகிறான்.
துருவப் பிரதேச ஆய்வின் போது செவ்வாயில் இருந்து விழுந்ததாக சொல்லப் பட்ட பனியைப் பற்றி ஆய்வு செய்யப் பட்டதில் அதன் உள்ளே இருந்த பாசிலைப் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்.அந்த பாசிலைப் பற்றிய செய்திகள் உண்மையானதாக இருப்பின் திருமறையின் இவ்வசனத்தை விஞ்ஞானம் உருதிப் படுத்திய பட்டியலில் முதன் முதலில் இந்தப் பாசிலைப் பற்றிய செய்தியே இடம் பிடிக்கும்.
இந்தப் பாசிலைப் பற்றிய செய்தி செவ்வாய் மற்றும் அதைப் போன்ற மற்ற கோள்களிலும் சூட்சும உயிரினங்கள் (Micro-Organism) இருப்பதாகவே கூறுகின்றன.
உதாரணமாக மனிதனாகிய நாம் கரிமம் அடிப்படையிலான உயிரினமாக (Cabom Based Organism) படைக்கப் பட்டுள்ளோம்.இதே போல இந்தப் பேரண்டத்தின் மற்றக் கோள்களில் சிலிக்கான் (Silicon) அல்லது கந்தகம் (Salphur) அல்லது அதைப் போன்ற வேறு தனிமங்களை அடிப்படையாகக் கொண்ட உயிரினங்கள் இருக்கலாம்.
ஆனால் அப்படிப் பட்ட கோள்களில் புவிவாழ் உயிரினங்களாகிய நாம் ஒரு போதும் கண்டிப்பாக வாழ முடியாது என்பது தெளிவான விஷயமாகும்.
எது எப்படியோ விஞ்ஞானம் சொல்கிறதோ இல்லையோ முக்காலமும் அறிந்த இறைவன் பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்றும் பூமியல்லாத மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்றும்  தெளிவாக சொல்லியுள்ளான் இதுவே நமது நம்பிக்கைக்கு போதுமான ஆதாரமாகும்.

ஆயிரங்களில் இஸ்லாத்தில் நுழைந்தவா்கள், தற்போது லட்சத்தில் நுழைகிறார்கள்.


ஆயிரங்களில் இஸ்லாத்தில் நுழைந்தவா்கள், தற்போது லட்சத்தில் நுழைகிறார்கள்.

 நவீன உலகின் பலம்மிக்க சக்தி இஸ்லாமே!

                                                            Thnk 2 Rasminmisc 
இன்றைய நவீன உலகை ஆளும் தகுதி படைத்த ஒரே வார்த்தை இஸ்லாம் மாத்திரமே!
எந்தவொரு மதத்தினாலும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை உலக வரலாற்றில் ஏற்படுத்திய பெருமை இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு.
இஸ்லாத்தை அழிக்க நினைத்தவர்களை கூட தன் தூய கருத்தினால்,உண்மை செய்திகளினால் உள்ளிழுத்து நேர்வழியின் பக்கம் அவா்களை கொண்டு வந்த சத்திய மார்க்கம் தான் இந்த இஸ்லாம்.
நபியவா்களின் காலத்திலிருந்து இன்று வரை இஸ்லாத்தை எத்தனையோ சக்திகள் அழிக்க நினைத்த போதும்,இறுதியில் இஸ்லாமே வெற்றிவாகை சூடியுள்ளது.
இன்று வல்லரசுகள் என்று தங்களை மார் தட்டிக் கொள்ளக் கூடிய எத்தனையோ நாடுகள் இஸ்லாத்திற்கு எதிராக காய் நகர்த்தினாலும் அந்த நாடுகளில் இஸ்லாம் கிளை விடுவதை அவா்களால் தடுக்க முடியவில்லை.
இஸ்லாத்தில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு. 
கடந்த காலங்களை விட தற்போது இஸ்லாத்தின் பக்கம் வருபவா்களின் எண்ணிக்கை பண்மடங்காக உயர்ந்துள்ளது.
அதே போல இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவா்களை தட்டிக் கேட்கும் மனப்பாங்கும் மக்கள் மத்தியில் துளிர் விட்டுள்ளது.
பிரித்தானியா போன்ற நாடுகளில் இதுவரை எந்த மதமும் பெறாத அபார வளர்ச்சியையும் வரவேற்பையும் இஸ்லாம் கண்டுள்ளது.
கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கில் இஸ்லாத்தில் நுழைந்த மேற்கத்தைய மக்கள் தற்போது லட்சத்தில் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.
கிருத்தவர்களின் தலைமை பீடமான வத்திக்கானிலிருந்து வெளிவரும் லோசேர் வேடோர் ரோம்மானோ ( LOSSERVATOR ROMMANO ) என்ற பிரபல பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு கருத்துக் கணிப்பில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கிறது என்றும், உலக சனத்தொகையில் 4ல் ஒருவா் முஸ்லிமாக வாழ்வதோடு, விகிதாசாரத்தின் அடிப்படையில் 28 சதவீதம் முஸ்லீம்களும் 24 சதவீதம் கத்தோலிக்கர்களும் காணப்படுவதுடன் மொத்த மக்கள் தொகையில் 130 கோடிப் பேர் முஸ்லீம்கள் என்றும் 112 கோடிப் பேர்தான் கிருத்தவா்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள் ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். (CNN) குறிப்பிடுகிறது.
அதேபோல் வல்லரவு நாடுகளில் பொதுவாக வருடத்திற்கு 15 புதிய பள்ளிவாயல்கள் கட்டப்படுவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கருப்பின மக்களை அதிகம் கவரும் இஸ்லாம்.
ஜாதி,மொழி,நிறம் என்று பாகுபாடு காட்டும் மதங்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு பலா் இன்று தூய கொள்கையின் பால் வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளி்ல் கருப்பினத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்றத் தாழ்வு காட்டப் படுவதின் மூலம் மனதுடைந்து , வாழ்கையையே வெருக்கும் அளவுக்கு தள்ளப் பட்ட மக்களுக்கு உண்மையான தெளிவை இஸ்லாம் கொடுத்து மனிதனை மனிதனாக வாழ வைப்பதே இதற்கான காரணமாகும்.
ஐரோப்பா மற்றும் ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் அதிகமாக இளம் வயதினரே இஸ்லாத்தை தழுகிறார்கள் என்ற செய்தி அந்நாட்டு கிருத்தவத் தலைவர்களின் வயிறுகளில் புளியைக் கரைத்துள்ளது.
ஹிஜாபுக்காக போராடும் இளம் வயது சகோதரிகள்.
இளம் வயதிலேயே இஸ்லாத்தினால் ஈர்க்கப் படும் பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பெண்கள் தாங்கள் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப் பட்டதற்கான காரணமாக ஹிஜாபைத் தான் தெரிவிக்கிறார்கள்.
பிரான்ஸ்ஸில் ஹிஜாபுக்காக போராடும் காட்சி.
பிரான்ஸ், ஜேர்மன் போன்ற நாடுகளில் கல்லூரிகளில் கல்வி கற்கும் இஸ்லாமியப் பெண்களுக்கு ஹிஜாப் அணிய தடை விதித்து சட்டம் இயற்றியதும் அதை எதிர்த்து அவா்கள் குரல் கொடுத்ததும் அணைவரும் அறிந்ததே!
ஹிஜாப் அணிய வேண்டி நீதிமன்றம் சென்று வழக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முஸ்லீம் சகோதரி சபீனா
ஹிஜாப் அணிய தடை விதித்தற்காக நீதி மன்றங்கள் வரை சென்று வழக்கில் வெற்றி பெற்று கொண்ட கொள்கையை நிலை நிறுத்திய சகோதரிகளும் இந்நாடுகளில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இத்தாலி போன்ற நாடுகளில் பல சகோதரர்கள் குடும்பமாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதும் அங்குள்ள அரச குடும்பத்தை சேர்ந்தவர்களே இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளதும் அந்நாட்டு ஆளும் வர்க்கத்தை சிந்திக்க வைத்துள்ளது.
இஸ்லாத்திற்கு எதிராக எத்தனையோ தடைகளை விதித்தும், அந்தத் தடைகளையெல்லாம் தாண்டி இஸ்லாம் வீறு நடை போடுவது தமக்கு வியப்பை ஏற்படுத்துவதாக ரோமன் கத்தோலிக்க முன்னனி அறிஞரான விக்டோரியா பார்மன்டி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மூடப்படும் தேவாலயங்களும், திறக்கப் படும் பள்ளிவாயல்களும்.
வட அமேரிக்கா , இங்கிலாந்து , ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் நாளாந்தம் பல தேவாலங்கள் மூடப்படுகின்றன.
அதில் அநேகமானவைகள் இரவு நேர கலியாட்ட நிலையங்களாகவும், பார்களாகவும் மாற்றப் பட்டுள்ளன.
சில தேவாலயங்களை முஸ்லீம்களே முழு நேர வாடகைக்கு வாங்கி பள்ளிகளாக அவற்றை பயன்படுத்தி வருகின்றனா். இங்கிலாந்தின் மின் செஸ்டர் ஜும்மா பள்ளியும் ஏற்கனவே தேவாலயமாக இயங்கிய கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து உருவாக்கப்பட்டதே.
கடந்தாண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மிக முக்கியமானவர்கள்.
இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்து பள்ளிவாயல்களின் மினாராக்களுக்கெதிராக பிரச்சாரம் செய்தவருமான சுவிஸ் நாட்டை சேர்ந்த டேனியல் ஸ்ட்ரீக் கடந்தாண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் முழு சுவிஸ் மக்களை மட்டுமன்றி உலக மக்கள் அணைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இதே நேரம் நான்கு பள்ளிகள் மாத்திரமே இருந்த சுவிஸ் நாட்டில் ஐந்தாவது பள்ளியாக தனது சொந்த செலவில் ஒரு பள்ளியை நிர்மானிக்க ஆரம்பித்தார்.ஐரோப்பாவிலேயே மிகவும் அழகான பள்ளியாக அதனை கட்டி முடிப்பதே அவரின் லட்சியம் என்றும் அவா் தெரிவித்திருந்தார்.
அதே போன்று பிரித்தானியாவின் முன்னால் பிரதமர் டோனி பிலேயரின் மணைவியின் தங்கையான இன்லா அவா்கள் இஸ்லாத்தை தழுவியது பலரை ஆச்சரியத்தைில் ஆழ்த்தியது
லண்டனில் 1967 ஆம் ஆண்டு பிறந்த லாஉரன் பூத் ( Lauren Booth) பிறப்பில் கிறிஸ்துவ மதத்தின் கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர். இவர் லண்டனில் நடைபெற்ற உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான பேரணியில் வைத்து தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டதாக செய்தியாளர்களிடம் பிரகடனப்படுத்தினார்.
தூய இஸ்லாமிய மார்க்கத்தில் தம்மை இணைத்துக் கொண்ட இன்னும் பலரைப் பற்றிய தகவல்களையும் அவா்களின் வாக்கு மூலங்களின் வீடியோக்களையும் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

Sunday 27 May 2012

350 ஆண்டுகளுக்கு முந்திய நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்டறிந்து மாணவன் சாதனை(படங்கள் இணைப்பு)

கடந்த 350 ஆண்டுகளாக தீர்வு காண முடியாமல் இருந்த எண் கணிதத்திற்கு இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவன் தீர்வு கண்டறிந்து சாதனை படைத்துள்ளான்.
இங்கிலாந்தின் டிரெஸ்டென் பகுதியில் வசிக்கும் சௌர்யா ரேய் என்ற அந்த மாணவன், விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் வகுத்த எண் கணிதத்திற்கு தீர்வு கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் விஞ்ஞானிகள் சக்திவாய்ந்த கணிப்பொறி மூலம் தீர்வுக்கு முயற்சித்த அடிப்படை துகள் இயக்கவியல் கொள்கை தொடர்பானவற்றிற்கும் ரேய் தீர்வு கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பந்தை சுவற்றில் எரியும் போது, பந்தின் திசை, சுவற்றில் பந்து எவ்வாறு பட்டு திரும்பும் என்பதை உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆராய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி அதிர்ச்சி .காம் 

யேசு சிலுவையில் அறையப்படவில்லை அதிர்ச்சி தகவல்(படங்கள் இணைப்பு)


யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது. 
 மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர்களில் ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான நற்செய்தி என துருக்கி நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
 இந்நிலையிலேயே இப்புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணச் செய்யுமென ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது. 
 சிரியக் (Syriac) மொழியில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. 
 இது 5 ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டுக்குரியதெனவும் இதில் முஹம்மது நபி அவர்களின் வருகை தொடர்பிலும் எதிர்வுகூறப்பட்டுள்ளதாக அவ்வூடகம் தெரிவித்துள்ளது. 
 எனினும் கிறிஸ்தவ உலகம் இத்தகைய நற்செய்தி நூல் இருப்பதனையே மறுத்து வருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந் நற்செய்தியின் 41 அத்தியாயத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகம் தெரிவிக்கின்றது. 
 ’God has hidden himself as Archangel Michael ran them (Adam and Eve) out of heaven, (and) when Adam turned, he noticed that at top of the gateway to heaven, it was written “La elah ela Allah, Mohamad rasool Allah,”‘ meaning Allah is the only God and Mohammad his prophet. 
 மேலும் யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையென அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவ்வூடகம் தெரிவித்துள்ளது.
 துருக்கிய அதிகாரிகள் இப்புத்தகத்தினை 2000 ஆம் ஆண்டிலேயே கைப்பற்றினர். 
 இவ்வருடம் பெப்ரவரி மாதம் வத்திக்கான் இப்புத்தகத்தினைப் பார்வையிட அனுமதி வழங்குமாறு துருக்கியிடம் கேட்டுக்கொண்டமையை அடுத்தே இது தொடர்பில் சர்ச்சை எழுந்தது.
 இந்நிலையில் இச்செய்தி தொடர்பில் கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. 
 இப்புத்தகத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதோடு, இது நகைப்புக்குரிய செய்தியெனவும் தெரிவித்துள்ளன. 
 கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியில் ஈரான் பயம் கொண்டுள்ளதாகவும்,எனவே தான் இத்தகைய போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 நன்றி அதிர்ச்சி .காம் 

அரபு தேசத்தை பிளவு படுத்திய ஐரோபிய காலனித்துவம். ஓர் அரசியல் நோக்கு!

அரபு தேசத்தை பிளவு படுத்திய ஐரோபிய காலனித்துவம். ஓர் அரசியல் நோக்கு!
RASMIN M.I.Sc
முஸ்லீம் உலகை நீண்ட கால பின்னடைவுக்கு கொண்டு சென்று இஸ்லாமியநாடுகளின் வளங்கள் மற்றும் காலாசாரத்தை நூற்றாண்டுகளுக்கும் மேலாக காயப்படுத்தியவரலாறு காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு உண்டு.

இன்றைய 21ம் நூற்றாண்டிலும் அதன் தாக்கத்தை முஸ்லீம் உலகு உணர்ந்து கொண்டிருக்கிறது.

காலனித்துவம் என்றால் என்ன?

காலனித்துவம் (Colonialism) என்பது Colonia என்ற ரோம வார்த்தையில் இருந்து பிரிந்த்து. குடியமர்த்தல், பண்ணை வளர்த்தல் போன்ற பொருள்களை இவ்வார்த்தை தருகின்றது. காலனித்துவம் என்பது கிட்டத்தட்ட ஏகாதிபத்தியம் (Imperialism) எனும் வார்த்தைக்கு ஒப்பானதாகும். ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் அதிகாரத்தின் மூலம் தமது விருப்பத்திற்கேற்ப மக்களை குடியமர்த்துவது தான் இந்த வார்த்தை தரும் தெளிவான கருத்தாக்கமாகும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் காலா காலமாக ஒரு இடத்தில் வாழ்ந்து வரும் மக்களை தங்கள் ஆயுத மற்றும் ஆள் பலத்தைக் கொண்டு அடக்கி ஒடுக்கி அவர்கள் வாழும் இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தை குடியமர்த்தும் வேலைக்குப் பெயர் தான் இந்த காலனித்துவம் என்பது.

காலனித்துவம் என்பது ஐரோப்பாவின் மையவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். கடந்த காலங்களில் காலனித்துவம் வெற்றி பெருவதற்கு அல்லது முஸ்லீம் ஆட்சியாளர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஐரோப்பாவின் ஆட்சி மேலோங்குவதற்குறிய அடிப்படைக் காரணம் முஸ்லீம் சாம்ராஜ்யத்தின் வெளிப்படையான இயலாமை தான் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குள் ஊடுருவி முஸ்லீம்களின் வளங்களை சூரையாடி, இஸ்லாமிய காலாசாரத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற ஐரோப்பாவின் திருச்சபைகளின் ஆழ்ந்த ஆசையை இந்த காலனித்துவ மரபு சாத்தியப்படுத்தியது. 19ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் திருச்சபைகளின் உந்துதலுடன் இஸ்லாமிய நாடுகளை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன.

Geodfry Jesin என்ற ஆய்வாளர் தனது The Militent Islam என்ற நூலில் காலனித்துவ சுரண்டலின் முதல் கட்டத்தை இவ்வாறு விளக்குகின்றார். மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளை ஒல்லாந்தும், துனீஷியா, மொரோக்கோ, அல்ஜீரியா போன்ற நாடுகளை பிரான்சும், சூடான், எகிப்து போன்ற நாடுகளை பிரிட்டனும் தன் வசப்படுத்தின.

வெறும் அரசியல் காரணங்களுக்காக மட்டுமன்றி காலாசாரத்திலும் மாற்றத்தை உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காகவும் சேர்த்தே ஐரோப்பிய நாடுகள் முஸ்லீம் நாடுகளின் மீது தனது படையெடுப்பை நகர்த்தின.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக முஸ்லிம் நாடுகளை தனது ஆக்கிரமிப்பில் வைத்திருந்த ஐரோப்பிய நாடுகளின் தாக்கத்தினால் பல விதமான கலாசார சீர்கேடுகளுக்கும் சிந்தனா ரீதியிலான பிரச்சினைகளுக்கும் முஸ்லீம் நாடுகள் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

அது மட்டுமன்றி காலனித்துவத்தில் இருந்து மீண்ட நாடுகள் மீண்டும் ஸ்திரத் தன்மையை அடைய முடியாத அளவுக்கு பின்விளைவுகளை விட்டுச் சென்றதுடன், பொருளாதாரத்தையும் தேவைக்கும் அதிகமாகவே மேற்கு நாடுகள் சூரையாடிச் சென்றன.

இஸ்லாமிய அறிஞர்கள் அறிவியல் தொடர்பாக எழுதிய ஆய்வுகள் அடங்கிய நூல்களும், தொகுப்புகளும் மேற்குலகுக்கு நகர்த்தப்பட்டு அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு மேற்கு நாடுகளின் அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக்கப்பட்டது.

உதாரணமாக அலி இப்னு ஸீனா மருத்துவ மேதையின் புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு மருத்துவத் துறையில் சாதனைப் பக்கத்தை திறக்க வைத்தன. அலி இப்னு ஸீனா என்ற மருத்துவ அறிஞரை அவி சென்னா என்ற மாற்றப் பட்ட புதுப் பெயரில் மேற்குலகு உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
முஸ்லீம் உலகின் அறிவியல் பொக்கிஷங்களை திருடியர்கள் கிருத்துவத்தின் திரித்துவ சிந்தனையை முஸ்லீம் நாடுகளில் விதைப்பதற்கு முயன்று தேவாலங்களையும் அமைத்துவிட்டு சென்றார்கள்.
19ம் நூற்றாண்டு காலப்பகுதியில் நடை பெற்ற காலனித்துவ படையெடுப்புகள் கிருத்தவ மதத்தை பரப்புவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. மட்டுமன்றி ஐரோப்பிய கலை, கலாசார தினிப்புகளையும் இதன் மூலம் கட்டவிழ்த்துவிட்டார்கள்.

ஐரோப்பாவின் அனைத்து கிருத்தவ மிஷனரிகளிலும் அல்ஜீரியா மீதான பிரான்சின் படையெடுப்பு பேசு பொருளாகவே மாறியது என்றால்அது மிகையல்ல. பிரான்ஸ் அல்ஜீரியாவை தன் வசப்படுத்திய போது திருச் சபைத் தலைவர் “அல்ஜீரிய மக்களை கிருத்தவர்களாக மாற்றுவதற்கு பிரான்சின் படையெடுப்பின் மூலம் கர்த்தர் நமக்கு வாய்ப்பளித்துள்ளார்என்று வெளிப்படையாகவெ அறிவித்தார்.

ஐரோப்பிய  நாடுகள் முஸ்லீம் நாடுகளை காலனித்துவப்படுத்தியதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு.

1.   படையெடுப்பின் பெயரால் கிருத்தவ மத மாற்றம் செய்வது.

2.   பிரித்தாளும் கொள்கை.

3.   சிந்தனா ரீதியிலான மாற்றம் உண்டாக்குதல்.
   
  கல்விக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்துதல்.

4.   அரசியல் சுதந்திரத்தின் பேரால் முஸ்லீம் நாடுகளை துண்டாடுதல்.

போன்றவையே அவற்றில் மிக முக்கியமானவையாகும்.

படையெடுப்பின் பெயரால் கிருத்தவ மத மாற்றம் செய்வது.

1920களில் லெபனானை ஆக்கிரமித்த பிரான்ஸ் படைகள் அங்கிருந்த மொரனைட்கிருத்தவர்களை பலப்படுத்தியது. லெபானான் மக்கள் தொகையில் வெறும் 3 சதவீதத்தினர் மாத்திரம் தான் கிருத்தவர்கள். பிரான்ஸின் படையெடுப்பினால் பலம் பெற்ற இவர்களை ஆதிக்க சக்தியாக பிரான்ஸ் உருவாக்கியது. பிரான்ஸின் படையெடுப்பின் பின்னர் லெபனானில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பின் படி லெபனால் நாட்டில் சிறுபான்மையாக வாழும் மொரனைட்கிருத்தவர்கள் மாத்திரம் தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

பிரான்ஸின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் லெபனானில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் தான் இன்று வரை அங்கு நடை முறையில் இருக்கிறது. இதன் படி இன்றைக்கும் மொரனைட்கிருத்தவர்களை தவிர லெபனான் ஜனாதிபதியாக வேறு யாரும் தேர்வாக முடிவதில்லை.

இதே பாணியில் “கோடன் என்ற கிருத்தவ தலபதி தனது படையினரை சிலுவை யுத்த வீரர்கள் போல் ஆடை அணிவித்து தென் சூடானை கிருத்தவ மயமாக்குவதில் வெளிப்படையாக ஈடுபட்டான். அல்ஜீரியா, மொரோக்கோ ஆகிய நாடுகளிலும் காலனித்துவ ஆட்சியாளர்கள் மத மாற்ற செயல்பாட்டில் வேகமாகவே ஈடுபட்டார்கள். சூடானின் மஹ்தி என்ற இயக்கத்தை யுத்தத்தின் மூலம் தோற்கடித்த “கோடன்அதன் தொடரில் சூடானில் கிருத்தவ மதத்தை பரப்புவதில் அதிக ஆர்வம் காட்டினான்.

சிந்தனா ரீதியிலான மாற்றம் உண்டாக்குதல் மற்றும் கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருதல்.

1980 களில் பிரித்தானியா எகிப்தை ஆக்கிரமிக்கும் போது அங்கு சுமார் 5000 க்கும் அதிகமான அறபு மற்றும் இஸ்லாமிய கல்லூரிகள் காணப்பட்டன. 1922 ல் எகிப்தை விட்டு பிரித்தானியப் படையினர் வெளியேறிய நேரத்தில் வெறும் 10 உயர் கல்வி நிலையங்களே அங்கு காணப்பட்டன.

உஸ்மானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்த சிரியாவில் இஸ்லாமிய கருத்தாக்கத்துடன் தொடர்புடைய கல்வி முறை நடை முறையில் இருந்தது. ஆனால் பிரான்ஸ் சிரியாவை ஆக்கிரமித்து அதில் ஐரோப்பிய கிருத்தவ சிந்தனையை புகுத்தும் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது.

இஸ்லாமிய ஆட்சியின் முதல் பல்கலைக் கழகமாக விளங்கும் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக் கழகம் சுமார் 1000ம் ஆண்டுகள் பழமையானது. இதுவே முஸ்லீம்களின் உயிராக மதிக்கப்பட்டது. காலனித்துவத்தின் மூலம் எகிப்தை கைப்பற்றிய பிரித்தானிய ஆட்சியாளர்கள் அல் அஸ்ஹருக்கு பதிலாக “கெய்ரொபல்கலைக் கழகத்தை ஸ்தாபித்தார்கள்.

கெய்ரொ பல்கலைக் கழகத்தில் படித்து வெளியேறும் மாணவர்களுக்குத் தான் வேலை வாய்ப்பு தரப்படும் என்று அறிவித்தல் விடுத்து அஸ்ஹர் பல்கலைக் கழகத்திற்கு இருந்த மரியாதையை மக்கள் மனங்களில் இருந்து துடைத்தெரிய முற்பட்டார்கள். நவீன கல்வி முறையை அறிமுகம் செய்வதாகக் கூறி கெய்ரோ பல்கலைக் கழகத்தின் பக்கம் மக்களின் பார்வையைத் திருப்பினார்கள்.

இத்தாலியும் லிப்யாவில் இதே வழிமுறையைத் தான் கையாண்டது. லிப்யாவை இத்தாலிய மயப்படுத்த வேண்டிய அனைத்து முயற்சிகளையும் இத்தாலி மேற்கொண்டது.

இந்தோனேசியாவில் இருந்த அறபு- இஸ்லாமிய பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டு கிருத்தவ திருச்சபையுடன் இணைந்த கல்விக் கூடங்கள் உருவாக்கப்பட்டன. நெதர்லாந்தின் மதப் பிரச்சாரத்தின் வெற்றியா இதனை திருச்சபை கூறிக் கொண்டது.
 
 
காலனித்துவத்தின் திட்டமிட்ட செயல்பாடுகளின் படி சிந்தனைக் குழப்பத்தை உண்டாக்கும் கருத்து முகாம்கள் (School Of Thought) உருவாக்கப்பட்டன.  அதே போல் பிரித்தானியாவின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்தியாவில் முஸ்லீம்களின் ஈமானை நேரடியாக ஆட்டம் காண வைப்பதற்காக பஹாயிசத்தையும், காதியானிசத்தையும் மேற்குலகு திட்டமிட்டு வளர்த்தது.

இறைவனால் உலகுக்கு அனுப்பப்பட்ட இறுதி நபியாகிய முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் மிர்சா குலாம் காதியானி என்பவன் நபியாகியுள்ளான் என்று பொய் நபியை கற்பனையாக ஈன்ரெடுத்த பிரிட்டன் இதன் மூலம் முஸ்லீம்களுக்கு மத்தியில் பெரும் பிளவை உண்டாக்க முனைந்தது.

யுத, பாரசீக மற்றும் கிரேக்க தத்துவங்களின் கூட்டுத் தயாரிப்பான பஹாய் சிந்தனையோ பிரித்தானியாவிற்கு எதிராக யாரும் ஆயுதம் ஏந்தக் கூடாது. ஜிஹாத் என்பது இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களுக்கு உரியது இப்போதைக்கு அது பொருந்தாதது என்று பிரித்தானியாவைக் காப்பாற்றும் செயலில் ஈடுபட்டது.

சுதந்திரத்தின் பெயரால் முஸ்லிம் நாடுகளை பிரித்தாளும் கொள்கை.

கருத்தியல் ரீதியிலும், புவியியல் ரீதியிலும் ஒன்றுபட்டிருந்த முஸ்லீம் சாம்ராஜ்யத்தை துண்டு துண்டாக்கி சிதைக்க நினைத்த மேற்குலகுக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம் “பிரித்தாளும் சூழ்ச்சி”  அரபுலகம் 22 பகுதிகளாக பிரிக்கப்பட்டது மட்டுமன்றி, முழு இஸ்லாமிய சாம்ராஜ்யமும் 55 நாடுகளாக பிளவுபடுத்தப்பட்டது.

முஸ்லீம் உலகை துண்டாடிய West Phalia ஒப்பந்தம்.

ஐரோப்பாவை பாதுகாத்து முஸ்லீம் நாடுகளை பிரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் West Phalia வில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஒன்றாக இருந்த முஸ்லீம் நாடுகள் தனியான வான் எல்லைகள், நில, நீர் எல்லைகளை தங்களுக்குள் அமைத்துக் கொண்டது. இதன் மூலம் சிறியளவிலான தேச அரசுகளாக (Nation States) முஸ்லீம் நாடுகள் பிரிக்கப்பட்டது.

மொத்த தேசமாக இருந்த வட ஆபிரிக்கா லிபியா, அல்ஜீரியா, மொரோக்கோ, டியுனிஷியா என்று நான்கு நாடுகளாக பிரிக்கப்பட்டது. ஆசியாவின் நஜ்த் பகுதி 10 நாடுகளாக பிளவுபடுத்தப்பட்டது. ஷாம் என்ற தனிப் பகுதி சிரியா, லெபனான் என்று இரண்டாக்கப்பட்டது.

இப்படி படிப்படியாக காலனித்துவத்தின் மூலம் முஸ்லீம் அரசுகளை தன் வசப்படுத்தி இஸ்லாமிய கலாசாரத்தை இல்லாமலாக்க முனைந்த மேற்கின் சதித்திட்டங்கள் படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு முஸ்லீம் நாடுகள் பல போராட்டங்களுக்குப் பின் மீண்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தன. அதையும் தாண்டி முஸ்லீம் பெயரில் மக்களை அடக்கியொடுக்கிய நவீன காலனித்துவ வாதிகளான லிப்யாவின் அதிபர் முஅம்மர் கடாபி, டியுனிசிய அதிபர் ஸைனுலாப்தீன் பின் அலி, எகிப்தின் முபாரக் போன்றவர்கள் மக்கள் புரட்சியின் மூலம் தூக்கியெறியப்பட்டார்கள்.

ஐரோப்பிய காலனித்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மிக முக்கிய முஸ்லீம் நாடுகளில் சில.

1.  1820 ஓமான் மற்றும் கத்தார் ஆகியன ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில்    வந்தது.

         
   1820 அல்ஜீரியாவை பிரான்ஸ் ஆக்கிரமித்தது.


      1834 கவ்காஸ் பிராந்தியத்தை ரஷ்யப் படை கட்டுப்பாட்டுக்குள்       கொண்டு வந்தது.


   1839 பிரிட்டன் ஏடன் துறை முகத்தைக் கைப்பற்றியது.


  1842 முஸ்லீம்களின் சிந்துப் பகுதி பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.


   1853 ரஷ்யா தாஷ்கந்தை கைப்பற்றியது.


   1857 முகலாய மன்னர்களின் 600 வருட கால ஆட்சியை காலனித்துவ ஆட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது.


   1873 ரஷ்யா உஸ்பகிஸ்தானை கைப்பற்றியது.


   1879 பிரிட்டன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க தொடங்கியது.


   1881 பிரான்ஸ் துனீசியாவை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது.


        1882 சூடானில் நடை பெற்று வந்த மஹ்தி இயக்கத்தின் ஆட்சியை பிரிட்டன் கவித்தது.


   1885 இத்தாலி எரிட்ரியாவை ஆக்கிரமித்தது
1890 பிரான்ஸ் செனகலை ஆக்கிரமித்தது.

   1891 மஸ்கட்டும், ஓமானும் பிரிட்டன் வசமாகியது.


   1898 சூடானை பிரிட்டன் முழுமையாக ஆக்கிரமித்தது.


   1900 பிரான்ஸ் ஷாட் நாட்டை கைப்பற்றியது.


   1912 லிபியாவை இத்தாலி தன் வசப்படுத்தியது.


   1920 பிரிட்டன் ஈராக்கை ஆக்கிரமித்தது.


   1920 பிரான்ஸ் லெபனான் மற்றும் சிரியாவை ஆக்கிரமித்தது.


   1926 சோமாலியாவை இத்தாலி தன் வசப்படுத்தியது.

    
  1948 யுதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இஸ்ரேல் என்றொரு புதிய நாட்டை உருவாக்கி அதனை பிரகடனப்படுத்தினார்கள்.

இன்னும் சில நாடுகளில் மக்கள் புரட்சிகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்களை நசுக்கி நாட்டு சொத்தை சூரையாடி அதன் மூலம் இலாபமடைய நினைக்கும் சர்வதிகாரிகளின் அரச வீழ்ச்சியும் தூரத்தில் இல்லை என்பதைத் தான் இந்த போராட்டங்கள் நமக்கு தெளிவாக உணர்த்தி நிற்கின்றன.
 
Rasminmisc...
 

அமெரிக்காவின் "டைம்" இதழின் டாப் 100 மனிதர்கள்

அமெரிக்காவின் "டைம்" இதழின் டாப் 100 மனிதர்கள் 
மூன்றாம் இடத்தில் (?) நரேந்திரமோடி.


இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மூன்றாவது இடம் என்று அதன் தற்போதைய நிகழ்வுகள் சொல்கின்றன. ஆம் இது வரைக்கும் டாப் 100 மனிதர்கள் பட்டியலில் மோடிக்கு ஆதரவாக பதியப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை  256003 மோடிக்கு எதிராக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 265664 ஆதரவாக கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இவர் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்று வாக்குப் பதிவாகியுள்ளது.

மோடி பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று வாக்களித்தவர்களை விட இவர் பட்டியலில் இடம் பெறக் கூடாது என்று சுமார் பத்தாயிரம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளார்கள்.

இவரைப் பற்றி டைம் இதழின் வாக்களிக்கும் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியில் இந்தியாவை வழிநடத்திச் செல்ல சிறந்த பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் பல்லாயிரக் கணக்கான முஸ்லீம்களை இவர் கொலை செய்த காரணத்தினால் இவர் முஸ்லீம்களுக்கு எதிரி என்ற பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுவரைக்கும் (இந்தச் செய்தி எழுதப்படும் வரை) மோடிக்குக் கிடைத்திருக்கும் வாக்கின் அடிப்படையில் டாப் 100 மனிதர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.


மோடி தவிர்த்து டாப் 100 மனிதர்கள் பட்டியலில் இந்தியாவின் சார்பாக 22வது இடத்தில் அன்னா ஹசாரேயும், சச்சின் டென்டுல்கர் 30வது இடத்திலும் 45வது இடத்தில் நிதிஷ் குமாரும் சல்மான்கான் 71 வது இடத்தையும் பிடித்துள்ளார்கள்.

ஹமீத் கர்சாயி யும் பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்பட்டாலும் இவர் இன்னும் 100 க்குள் நுழையவே இல்லை.

பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கட் வீரரும் தற்போதைய முக்கிய எதிர்கட்சியின் தலைவருமான இம்ரான் கான் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற முஸ்லீம் பெண்மணி தவக்குல் கர்மான் இதுவரை 71 வது இடத்தில் இருக்கிறார்.

ஈரானின் ஷீயா மத தலைவர் ஆயதுல்லாஹ் அலி காமனி 79 வது இடத்தில் இருக்கிறார். 21 வது இடத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பிடித்துள்ளார். ஒபாமாவி மணைவி மிச்சல் ஒபாமா 41வது இடத்திலும் 44வது இடத்தை பேஸ்புக் சமூக வலை தளத்தின் உரிமையாளர் மார்க் ஷுக்கர் பேக்கும் பெற்றுள்ளனர்.

டைம் இதழின் அட்டைப் படமாக மோடியின் புகைப்படம்.

டைம்' இதழின் மார்ச் 26 தேதியிட்ட அட்டைப்படம் தாங்கிவந்த சொற்றொடர் இதுதான்: "Modi means business but can he lead India?"

"Boy from the backyard" என்ற தலைப்பிட்ட கவர் ஸ்டோரியில், 'சர்ச்சைக்குரிய, லட்சிய நோக்குடைய, கூர்மதிமிக்க அரசியல்வாதி' என வருணிக்கிறது 'டைம்'. 

இந்தியாவின் பின்னடைவுக்குக் காரணமான ஊழலையும் பற்றாக்குறையையும் அப்புறப்படுத்தக் கூடிய திறன்படைத்த தலைவர் என நரேந்திர மோடியைக் அந்தக் கட்டுரை குறிப்பிடுகின்றது.

டைம் பத்திரிக்கையின் டாப் 100 மனிதர்கள் பட்டியல் தொடர்பாக வாக்களிக்கும் இறுதி நாளாக ஏப்ரல் 06 (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. மொத்த முடிவு ஏப்ரல் 17ல் வெளியிடப்படும் என்று டைம் பத்திரிக்கை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா காட்டம்.

டைம் இதழ் தற்போது நடத்தி வரும் உலகின் 100 சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் தனது பெயரும் இடம் பெறுவதற்காக மோசடி வேலைகளை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செய்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா கூறுகையில்,

குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பியுள்ளார். அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆம் பட்டனை அழுத்துமாறு பொதுமக்களை மோடியின் மக்கள் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உலகில் எந்த தலைவரும் மோடியைப் போன்று செய்ததில்லை. இதெல்லாம் டைம் இதழின் பட்டியலில் வரவேண்டும் என்ற சாதாரண காரணத்துக்காகத்தான்.

மோடிக்கு ஆதரவு பெருகுவது போலத் தெரிந்தாலும், அவருக்கு நோ சொன்னவர்களும் கணிசமான அளவில் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 56,859 ஆகும்.

மோடியைப் போல ஒரு மோசடிக்காரர் யாருமே இருக்க முடியாது. குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்க் கிடக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட்டிலிருந்து 16,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.

மோடி விழாக்களுக்கு எப்படிக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள், பாஜகவுக்காக எப்படி நிதி வசூலிக்கிறார்கள் என்பதைப் பார்த்துத்தான் போலீஸாருக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றை வழங்குகிறார்கள் என்றார் அவர்.

உலகின் முதலிடம் பிடிக்க வேண்டிய கொலைகாரன்.

குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மோடி பல்லாயிரக் கணக்கான முஸ்லீம்களை அநியாயமாக கொலை செய்த படு பாவி. ஆனால் உலக அளவில் இவருக்கு டாப் 100 மனிதர்கள் பட்டியலில் முதலிடம் வேண்டுமாம். 


ஹிட்லரை விட கொடூர குணம் கொண்ட கொலைகாரன் நர மோடிக்கு உலகின் டாப் 100 கொலைகாரர்கள் பட்டியல் என்றொன்றை உருவாக்கி அதில் முதலிடம் கொடுத்தால் வரவேற்கக் கூடியதாக அது அமையும்.

RASMIN M.I.Sc

பி.பி.சி தமிழ் ஓசை நிருபர்களிடம் தமிழக முஸ்லிம்களின் நிலைகுறித்து பேட்டி – கடையநல்லூர் டவுண் கிளை




நெலலை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளையில் கடந்த 19.05.2012 அன்று பி.பி.சி தமிழ் ஓசை நிருபர்கள் தமிழக முஸ்லிம்களின் நிலைகுறித்து பேட்டி கண்டார்கள். இதில் மௌலவி அப்துன் நாஸர் அவர்கள். இந்தியாவில் முஸ்லிம்களின் நிலைகுறித்து விளக்கி இடஒதிக்கீடு அவசியம் பற்றியும், பெண்களின் ஒழுக்கம் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பது பற்றியும்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விரிவான பணிகள் பற்றியும் விளக்கினார்கள்.

+2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் இடம் பிடித்த முஸ்லிம் மாணவி




 22-5-2012 அன்று வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் தேர்வில் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம், கொல்லம்பட்டறை தெருவைச்சேர்ந்த E.N.S ஜாஹீர் ஹுஸைன் அவர்களின் புதல்வி பைஃசூன் நிஷா அவர்கள் 1169/1200 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தையும், முஸ்லிம் மாணவ, மாணவிகளில் மாவட்டத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். மேலும் மேற்படிப்பாக மருத்தவ துறையில் தன்னை இணைத்துக் கொண்டு பொதுச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
இவரை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 23:05:2012) மாவட்ட மற்றும் TNTJ வெளிப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் நேரில் சந்தித்து திருக்குர்ஆன் தமிழாக்கம், இஸ்லாம் பெண்களின் உரிமையை பரிக்கின்றதா? மற்றும் பெண்கள் குறித்த மார்க்க சம்பந்தமான புத்தகங்கி பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday 23 May 2012

பெயிலான மாணவர்களுக்கு உடனடியாக சிறப்பு துணைத் தேர்வு!

பிளஸ் டூ தேர்வில் தோல்வியைச் சந்தித்துள்ள மாணவர்கள் இந்த வருடமே கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் உடனடி சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இதற்கான விண்ணப்பங்கள் 23ம் தேதி முதல் வழங்கப்படும்.
அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஒரு பாடத்திற்கு கட்டணம் ரூ.85, 2 பாடங்களுக்கு ரூ.135, 3 பாடங்களுக்கு ரூ.185, 4 பாடங்களுக்கு ரூ.235, 5 பாடங்களுக்கு ரூ.285, 6 பாடங்களுக்கு ரூ.335 கட்டணமாகும்.
2012 மார்ச் மாதம் தேர்வு எழுதி பெயிலான பள்ளிக்கூட மாணவர்கள் எஸ்.எச். என குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்களை 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை அவர்கள் படித்த பள்ளியில் பெற்று பூர்த்தி செய்து 28ம் தேதிக்குள் பள்ளியில் ஒப்படைக்க வேண்டும்.
2012-ம் ஆண்டு தனித் தேர்வர்களாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழுத விரும்பினால் அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றில் 23 முதல் 28ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பெற்று அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேடித் தந்தவர் – எஸ். சித்தீக் எம்.டெக்

பிறசமய சகோதரருக்கு ருபாய் ஆயிரம் மருத்துவ உதவி – ரிஷிவந்தியம் கிளை


விழுப்புரம் மேற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் கிளையில் கடந்த 16-05-2012 அன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறசமய சகோதரருக்கு ஆயிரம் ருபாய் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் பத்திரிக்கை செய்திகள்




திட்டச்சேரியில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற மூர்த்தி


நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளையில் கடந்த 18-05-2012 அன்று மூர்த்தி என்ற சகோதரர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு : ரஜப் மாதம் ஆரம்பம்

பிறை தேட வேண்டியநாளான மே 21 ஆம் தேதி திங்கள் கிழமை மக்ரிபிற்கு பிறகு மேகமூட்டத்தின் காரணமாக தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.
எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபி வழியின் அடிப்படையில் ஜமாஅத்துல் ஆகிர் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, மே 22ஆம் தேதி செவ்வாய் கிழமை மக்ரிபிலிருந்து ரஜப் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

Monday 21 May 2012

மாநாடாக மாறிய கூத்தாநல்லூர் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 20-5-2012 அன்று மாபெரும் வரதட்சனை ஒழிப்பு பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் அபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பொதுக் கூட்டம் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும் மாநாட்டை மிஞ்சும் அளிவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பியது.
சகோதரர்கள் அமர்வதற்கு கூட இடமில்லா நின்று கொண்டும் சுவர்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சொற்பொழிவை கேட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. மேலும் இரண்டு சகோதரர்களும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தங்களை வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்லாஹம் லில்லாஹ்
உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை எப்படியாது தடுத்தி நிறுத்திட வேண்டும் என சுன்னத் ஜமாஅத் உள்பட பல்வேறு அமைப்பினர் இரவு பகலாக  பெருமளவு பணத்தை செலவு செய்து சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவைகளை முறியடிக்கம் வண்ணம் பொதுக் கூட்டம் மாநாடாக மாறியது குறிப்பிடதக்கது. எல்லா புகழும் இறைவனுக்கே.

விரிவான செய்திகள் பின்னர் வெளியிடப்படும்.