குவைத்
: பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை அரபு மற்றும்
முஸ்லீம் நாடுகள் தட்டி கேட்க வேண்டும் என்றும் குவைத் அதற்கு முண்ணனியில்
நின்று வழிகாட்ட வேண்டும் என்றும் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர்
கோரியுள்ளார்.
குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் முபாரக் அல்
அவ்லான் மியான்மரில் முஸ்லீம்கள் திட்டமிட்ட முறையில் கொல்லப்படுவதாகவும்
பர்மாவில் நடக்கிறதே என்று கண்டும் காணாமல் இருந்தால் இதே நிலை ஆசியாவில்
எங்கு வேண்டுமானாலும் முஸ்லீம்களுக்கு இதே நிலை ஏற்படலாம் என்று கூறிய அவர்
சர்வதேச சமூகம் இது விஷ்யத்தில் மெளனம் காப்பது குறித்து வேதனை
தெரிவித்தார்.
ஒன்றுமறியா ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்
கொல்லப்படுவது குறித்து மெளனமாக இருப்பது ஆபத்தான போக்கு என்று குறிப்பிட்ட
முபாரக் ஐ.நாவில் பர்மாவை கண்டித்து குவைத் தீர்மானம் கொண்டு வர வேண்டும்
என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும்
கோரினார்.
ஒன்றுமறியா மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டியது
ஒவ்வொருவரின் கடமை என்று கூறிய முபாரக் பர்மிய தூதரை குவைத்திலிருந்து
வெளியேற்றுவதுடன் பாசிச பர்மிய அரசுடனான அனைத்து உறவுகளையும் குவைத்
முறித்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். பர்மாவில் முஸ்லீம்களின் மீது
அங்குள்ள ராணுவமும் பவுத்தர்களும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக
அம்னெஸ்டி இன்டர்நேஷன்ல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குவைத்
: பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை அரபு மற்றும்
முஸ்லீம் நாடுகள் தட்டி கேட்க வேண்டும் என்றும் குவைத் அதற்கு முண்ணனியில்
நின்று வழிகாட்ட வேண்டும் என்றும் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர்
கோரியுள்ளார்.
குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் முபாரக் அல்
அவ்லான் மியான்மரில் முஸ்லீம்கள் திட்டமிட்ட முறையில் கொல்லப்படுவதாகவும்
பர்மாவில் நடக்கிறதே என்று கண்டும் காணாமல் இருந்தால் இதே நிலை ஆசியாவில்
எங்கு வேண்டுமானாலும் முஸ்லீம்களுக்கு இதே நிலை ஏற்படலாம் என்று கூறிய அவர்
சர்வதேச சமூகம் இது விஷ்யத்தில் மெளனம் காப்பது குறித்து வேதனை
தெரிவித்தார்.
ஒன்றுமறியா ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்
கொல்லப்படுவது குறித்து மெளனமாக இருப்பது ஆபத்தான போக்கு என்று குறிப்பிட்ட
முபாரக் ஐ.நாவில் பர்மாவை கண்டித்து குவைத் தீர்மானம் கொண்டு வர வேண்டும்
என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும்
கோரினார்.
ஒன்றுமறியா மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டியது
ஒவ்வொருவரின் கடமை என்று கூறிய முபாரக் பர்மிய தூதரை குவைத்திலிருந்து
வெளியேற்றுவதுடன் பாசிச பர்மிய அரசுடனான அனைத்து உறவுகளையும் குவைத்
முறித்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். பர்மாவில் முஸ்லீம்களின் மீது
அங்குள்ள ராணுவமும் பவுத்தர்களும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக
அம்னெஸ்டி இன்டர்நேஷன்ல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அல்
ஹலீல்: கடந்த திங்கட்கிழமை (30/07/2012) பெய்ட் உம்மார் கிராமத்தைச்
சேர்ந்த உளநலம் பாதிக்கப் பட்ட பலஸ்தீன் இளைஞனின் வீட்டுக்குள் அத்துமீறி
நுழைந்த ஆக்கிரமிப்புப் படை அவனை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளது.
முஹம்மத் அபூ தியா (வயது 23) உளநலம்
பாதிக்கப்பட்டவர். அவருடைய வீட்டுக்குள் அடாவடியாக நுழைந்த இஸ்ரேலிய
ஆக்கிரமிப்பு இராணுவம், அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. உளநலம்
பாதிக்கப்பட்ட தமது மகன் கொடூரமாக அடித்து இம்சிக்கப்படுவது பொறுக்காமல்
தடுக்க முனைந்த பெற்றோரையும் ஆக்கிரமிப்புப் படை மிகக் கடுமையாகத்
தாக்கியுள்ளது.
அபூ தியாவின் நிலைமை குறித்து விளக்கிப் புரியவைக்க
முற்பட்ட பெற்றோரின் மன்றாட்டங்கள் எவற்றையுமே பொருட்படுத்தாத இஸ்ரேலிய
ஆக்கிரமிப்புப் படை, மேற்படி இளைஞனைத் தடுப்பு முகாமுக்கு இழுத்துச்
சென்றுள்ளது என பெய்ட் உம்மார் கிராமத்தின் தேசிய இணைப்பாளர் முஹம்மத்
அவாத் குறிப்பிட்டுள்ளார்.
உளநலமற்ற ஒருவர் என்ற கருணைகூட இன்றி,
அபூ தியாவையும் அவரது வயோதிகப் பெற்றோரையும் மிருகத்தனமாகத் தாக்கிவிட்டு,
அவ் இளைஞனைத் தடுப்புமுகாமுக்கு எடுத்துச் சென்றுள்ள இஸ்ரேலிய
ஆக்கிரமிப்பாளரின் செயல் சகலவித மனிதப் பண்புகளுக்கும் அப்பாற்பட்டது என
உள்ளூர் மக்கள் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
11 பேர் கூட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனையும்
மேலும் ஒருவருக்கு ஒரு ஆண்டுத் தண்டனையும் விதித்து நீதிபதி எஸ்.சி.
ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.
2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று விஸ்நகரின் தீப்தா தர்வாஜா
என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் மற்றும் நான்கு
குழந்தைகள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
குஜராத் கவலரம் தொடர்பாக
உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற 9 வழக்குகளில் தீப்தா
தர்வாஜா கூட்டுக் கொலையும் அடங்கும். சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.
ராகவன் தலைமையிலான சிறப்புப் புலணாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து
வந்தது.
பின்னர் இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் 82 பேர்
குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
ஸ்ரீவத்சவா, 10 பேரை இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்தார். பாஜக
தலைவர்கள் இருவர் உள்ளிட்ட மேலும் 51 பேரை சந்தேகத்தின் பலன் என்ற
அடிப்படையில் விடுவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் கொலை
செய்ததாகவோ அல்லது முன்விரோதம் இருந்ததாகவோ அறிய முடியவில்லை என்று
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் கொலை முயற்சி மற்றும் கலவரத்தில்
ஈடுபட்டதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டு ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் விஸ்நகர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.
கோசா பட்டேல் என்ற பிரஹலாத்பாய் மோகன்லால் பட்டேல், விஸ்நகர் நகராட்சியின்
முன்னாள் தலைவர் தஹிபாய் பட்டேல் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் பாஜகவைச் சார்ந்தவர்கள். இக்கொலைச் சம்பவத்தின் போது
பணியில் இருந்த காவல்துறை முன்னாள் ஆய்வாளர் எம்.கே. பட்டேல் தன்னுடைய
பணியைச் செய்யவில்லை என்ற அடிப்படையில் அவருக்கு ஒரு ஆண்டு தண்டனை
விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட
காவல்துறை முன்னாள் ஆய்வாளர் உள்பட அனைவருமே பட்டேல் சமூகத்தைச்
சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
[5393] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com
இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன. இவ்விரண்டைத் தவிர வேறு
எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நாம்
தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம்.
ஆயினும் சமீபகாலமாக சிலர் விசித்திரமான வினோதமான கேள்விகளை
எழுப்பி இரண்டு மூல ஆதாரங்கள் கிடையாது. திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல
ஆதாரமே போதுமானதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்
தேவையில்லை என்று கூற ஆரம்பித்துள்ளனர்.
ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன
குர்ஆனுடன் ஹதீஸ்கள் முரண்படுகின்றன.
ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவோர் பல கூறுகளாகப் பிரிந்து விட்டனர்.
குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.
என்றெல்லாம் காரணங்கள் கூறி ஹதீஸ்களை நிராகரிக்கச்
சொல்கின்றனர். ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறும்
இந்தக் காரணங்களை குர்ஆன் விஷயத்திலும் கூற இயலும். இக்கட்டுரைத் தொடரின்
இடையே நாம் விரிவாக அதை விளக்கவுள்ளோம்.
குர்ஆன் மட்டுமே இறைவனுடைய புறத்திருந்து வழங்கப் பட்ட வஹி –
இறைச் செய்தி. ஹதீஸ்கள் என்பது வஹி அல்ல. உங்களுக்கு உங்கள்
இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மட்டுமே பின் பற்றுங்கள் என்று குர்ஆன்
கூறுகிறது. எனவே இறைவனிடமிருந்து அருளப் பட்ட குர்ஆனை மட்டுமே மூல
ஆதாரமாகக் கொள்ள வேண்டும். இது தான் இந்தக் கருத்துடையவர்களின் வாதத்தில்
உள்ள சாராம்சம்.
இறைவனிடமிருந்து வஹியாக அருளப்பட்டதைத் தான் பின் பற்ற வேண்டும்
என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. நிச்சயமாக இறைவன் புறத்திருந்து
வஹியாக அருளப்பட்டதை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்றே நாமும் கூறி
வருகிறோம்.
ஆனால் இறைவனிடமிருந்து வஹியாக அருளப்பட்டது குர்ஆன் மட்டும்
தான். குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இறைவனிடமிருந்து வஹியாக அருளப் படவில்லை
என்று திருக்குர்ஆனின் எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை. குர்ஆன் இறைவன்
புறத்திருந்து வந்தது என்று குர்ஆன் கூறுகிறதே தவிர, குர்ஆனைத் தவிர வேறு
எதுவும் இறைச் செய்தி இல்லை என்று திருக்குர்ஆனில் கிடையாது.
திருக்குர்ஆனை பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு குர்ஆன்
ஆதாரமில்லாத வாதத்தையே இவர்கள் எழுப்புகின்றனர் என்பதை இதிருந்து அறிந்து
கொள்ளலாம்.
இன்னும் தெளிவாக சொல்வதானால் குர்ஆன் எப்படி இறைவன்
புறத்திருந்து அருளப் பட்டுள்ளதோ – குர்ஆன் எப்படி வஹியாக
அருளப்பட்டுள்ளதோ அது போல் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹியும் உள்ளது என்று
திருக்குர்ஆன் ஒரு இடத்தில் அல்ல – ஏராளமான இடங்களில் தெளிவாக பிரகடனம்
செய்கிறது.
உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும்
இல்லை. மேலும் அவர் (தனது) மனோ இச்சைப் படி பேசுவதில்லை. அது வஹியாக
அறிவிக்கப் படும் இறைச் செய்தி தவிர வேறு இல்லை. அல்குர்ஆன் (53 : 2, 3, 4)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப் படி
பேசுவதில்லை. அவர் பேசுவதெல்லாம் வஹி என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை
என்று இவ்வசனம் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது. குர்ஆன் மட்டும் போதும்
என்று கூறக்கூடியவர்கள் இவ்வசனம் குர்ஆனையே குறிக்கிறது. குர்ஆன் வஹி
என்பது தான் இதற்கு விளக்கம் என்று கூறுகின்றனர். குர்ஆன் வஹியாக உள்ளது
என்பதைக் கூறும் வகையில் இவ்வாசக அமைப்பு அமையவில்லை. ”இவர் மனோ இச்சைப்
படி பேச மாட்டார்” என்பது பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் தான்
எடுத்துக் கொள்ளும். மனோ இச்சைப் 0படி பேசமாட்டார் என்பதோடு நிறுத்திக்
கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹி தவிர வேறில்லை என்றும் அல்லாஹ்
கூறுகின்றான்.
குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் குர்ஆன் கூறுவதைத்
தான் ஆதாரமாகக் காட்ட வேண்டுமே தவிர குர்ஆன் கூறாத ஒன்றை இதற்கு விளக்கம்
என்று இவர்களாகக் கற்பனை செய்து வாதிப்பது இவர்கள் குர்ஆனைப் பின்பற்றும்
போர்வையில் தங்கள் மனோ இச்சையைத் தான் பின்பற்றுகிறார்கள் என்பது
தெளிவாகிறது.
உள்ளத்தில் எந்த அபிப்பிராயத்தையும் வைத்துக் கொள்ளாமல் –
முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல் – விளக்கம் என்ற பெயரில் நாமாக
எதையும் சேர்க்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப் பட்டவையல்ல.
மாறாக அது இறைவனால் அறிவிக்கப் பட்ட வஹி எனும் இறைச் செய்திதான் என்பதைப்
புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.
குர்ஆன் எப்படி வஹியாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள்
நாயகத்தின் பேச்சுக்களும் வஹியாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு
யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதித்தால் – அந்தப்
பேச்சுக்கள் வஹி இல்லை என வாதித்தால் அவர் மேலே நாம் எடுத்துக் காட்டிய
குர்ஆன் வசனத்தை நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.
நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று கூறுகின்ற
அந்தக் கும்பல் மேற்கண்ட வசனத்திற்கு இவர்களாக சுய விளக்கம் அளிப்பது தான்
விந்தையானது வேடிக்கையானது. நபிகள் நாயகத்தின் விளக்கமே தேவையில்லை என்றால்
இவர்களும் விளக்கம் என்ற பெயரில் எதையும் திணிக்காமல் உள்ளதை உள்ளபடி கூற
வேண்டும். அப்படி கூறினால் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் முழுவதும்
வஹிதான் இறைச் செய்திதான் என்பது சந்தேகமற நிரூபணமாகி விடும். குர்ஆன் தவிர
வேறு வஹி இல்லை என்பது குர்ஆனுக்கே முரணான வாதம் என்பதும் நிரூபணமாகி
விடும்.
குர்ஆன் அல்லாத வஹி உண்டு என்று அந்த ஒரு வசனம் மட்டும் தான்
கூறுகிறதா? இல்லை. ஏராளமான வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன. இறைவன் தனது
அடியார்களுக்குக் கூற விரும்பும் செய்திகளை ஜிப்ரீல் எனும் வானவரை அனுப்பி
அவர் வழியாக மட்டுமே கூறுவான் என்று சிலர் நினைக்கின்றனர். இது தவறான
எண்ணமாகும். ஜிப்ரீல் மூலம் செய்திகளைக் கூறி அனுப்புவது போலவே வேறு இரண்டு
வழிகளிலும் அல்லாஹ் தனது வழிகாட்டலை மக்களுக்குத் தெரிவிப்பான் என்று
திருக்குர்ஆனே கூறுகிறது.
வஹீயாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை
அனுப்பியோ தவிர வேறு வழிகளில் எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. தனது
அனுமதியுடன் தான் நாடியதை அவன் அறிவிக்கின்றான். நிச்சயமாக அவன்
உயர்ந்தவன். நுண்ணறிவாளன். (அல்குர்ஆன் 42 : 51)
மனிதரிடம் இறைவன் பேசுவதற்கு மூன்று வழிகளைக்
கடைப்பிடிக்கிறான் என்பது இவ்வசனத்திருந்து தெரிகின்றது. ஒரு தூதரை
அனுப்பி மனிதரிடம் பேசுவான் என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள
முடியும். ஜிப்ரீல் போன்ற வானவர்கள் வழியாக வேதங்களை வழங்குவதையும்,
வானவர்கள் மூலம் வேறு பல செய்திகளை சொல் அனுப்புவதையும் தான் அல்லாஹ்
இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
திரைக்கு அப்பால் இருந்து மனிதனிடம் இறைவன் பேசுவான் என்பதையும் ஓரளவுக்கு அறிந்து கொள்ள இயலும்.
மூஸா நபி அவர்கள் தமது குடும்பத்தாருடன் புறப்பட்ட போது
தீப்பிளம்பைக் கண்டு அந்த இடத்திற்குச் சென்றார்கள். இதைப் பற்றி
திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
அங்கே அவர் வந்த போது மூஸாவே என்று அழைக்கப்பட்டார்.
”நிச்சயமாக நானே உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக.
நிச்சயமாக நீர் பரிசுத்தமான இடத்தில் இருக்கிறீர்கள். மேலும் நான் உம்மைத்
தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே, (வஹீயாக) அறிவிக்கப் படுவதை செவிமடுப்பீராக.
நிச்சயமாக நானே அல்லாஹ்! என்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை.
எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை
நாட்டுவீராக.(அல்குர்ஆன் 20 : 11 – 14).
இந்த அத்தியாயத்தின் 11வது வசனம் முதல் 48வது வசனம் வரை மூஸா
நபி அவர்களுடன் அல்லாஹ் நடத்திய உரையாடல் இடம் பெற்றுள்ளது. பல கட்டளைகள்
அப்போது பிறப்பிக்கப் பட்டன. அந்தக் கட்டளைகள் யாவும் வானவர் துணையில்லாமல்
நேரடியாகவே பிறப்பிக்கப் பட்டன. ஆனாலும் மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வைக்
காணாமல் காதால் மட்டுமே கட்டளையைக் கேட்டார்கள். எனவே தான் ”திரைக்கு
அப்பால் இருந்து” என்று இறைவன் கூறுகிறான்.
இவ்விரு வகைகளும் வஹீ எனும் இறைச் செய்தியாக இருந்தாலும்
இன்னொரு வழியிலும் அல்லாஹ் பேசுவதைக் குறிப்பிட தனிப்பெயர் எதையும் கூறாமல்
வஹீயாக – வஹீ மூலம் – என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற இரண்டும் வஹீயாக
இருந்தாலும் மூன்றாவது வழியை மட்டுமே இவ்வசனத்தில் வஹீ என்கிறான். இவ்விரு
வகைகள் தவிர வேறு வழியில் இறைவன் மனிதர்களிடம் பேசுவான் என்பதை எப்படிப்
புரிந்து கொள்வது? மனித உள்ளங்களில் மனிதர்கள் என்ற முறையில் தோன்றாத
செய்திகளை இறைவன் தோன்றச் செய்வான். அவ்வாறு தோன்றச் செய்வதும் வஹீதான்.
இறைச் செய்திதான் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இதற்கு இருக்க முடியாது.
திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல கட்டளைகளை இப்படித்தான் செயல்
படுத்த வேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். அவ்வாறு
காட்டி செயல் வடிவம் கொடுத்தது அவர்கள் இதயத்தில் அல்லாஹ் உதிக்கச்
செய்ததன் அடிப்படையில் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
திருக்குர்ஆனே ஒப்புக் கொள்ளக் கூடிய – வலியுறுத்தக் கூடிய
மூன்று வகையான வஹீகளில் ஒன்றை யாரேனும் மறுத்தால் அவர்கள்
திருக்குர்ஆனைத்தான் மறுக்கிறார்கள். திருக்குர்ஆன் தான் மூன்றாவது வஹீ
இருப்பதாக சந்தேகத்துக்கு இடம் இல்லாத வகையில் கூறுகிறது.
இந்த இடத்தில் சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இந்த வசனம்
நபி (ஸல்) அவர்களுக்கு மூன்று வகையான வஹீ அருளப் பட்டதாகக் கூறவில்லை.
அல்லது நபிமார்களுடன் மூன்று வகைகளில் இறைவன் பேசுவதாகவும் கூறவில்லை.
பொதுவாக மனிதர்களிடம் பேசுவதாகத்தான் கூறப்பட்டுள்ளது.
மரியம் (அலை), மூஸா நபியின் தாயார் போன்றவர்களிடம் இறைவன்
பேசியுள்ளான். எனவே நபிமார்கள் அல்லாதவர்களுடன் இறைவன் பேசுவதைத் தான்
மூன்றாவது வஹீ குறிப்பிடுகின்றது என்று கருதலாம் அல்லவா? என்பதே அந்தச்
சந்தேகம்.
மனிதர்களுடன் பேசுவதாக இந்த வசனம் கூறினாலும் மற்ற இரண்டு
அம்சங்கள் எப்படி மனிதர்களில் உள்ள இறைத்தூதர்களிடம் பேசுவதைக்
குறிப்பிடுகின்றதோ அப்படித் தான் மூன்றாவதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது வஹீ என்பதை முதல் இரண்டு வஹீயிருந்து வேறுபடுத்திக் காட்ட எந்த
ஆதாரமும் இல்லை.
மேலும் இந்த வாதம் அர்த்தமற்றது தவறானது என்பதை இதற்கு அடுத்த வசனம் மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்து விடுகின்றது.
இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை வஹீ மூலமாக
உமக்கு அறிவித்து இருக்கிறோம். (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ
என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி நம்
அடியார்களில் நாம் விரும்புவோர்க்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம்.
நிச்சயமாக நீர் நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர். (அல்குர்ஆன் 42: 52)
”இவ்வாறு தான் உமக்கும் நாம் வஹீ அறிவித்தோம்” என்று இவ்வசனம்
குறிப்பிடுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மேற்கண்ட மூன்று
வஹீயும் வந்துள்ளன என்பதை இவ்விரு வசனங்களும் மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.
அதாவது நபிகள் நாயகத்துடன்….
திரைக்கப்பாருந்தும் அல்லாஹ் பேசியிருக்கின்றான்.
ஜிப்ரீலை அனுப்பி குர்ஆன் மூலமும் பேசியுள்ளான்.
ஏனைய வானவர்களை அனுப்பி குர்ஆன் அல்லாத பல செய்திகளையும் சொல் அனுப்பியுள்ளான்.
இவை தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்திலும் இறைவன் தனது கட்டளைகளைப் பதியச் செய்துள்ளான்
என்பது திட்டவட்டமாக நிரூபணமாகின்றது.
திருக்குர்ஆன் மட்டும் போதும் என்று யாரேனும் கூறினால் இறைவன்
திரைக்கப்பாருந்து பேசினானே அந்தப் பேச்சுக்கள் எங்கே? இதயத்தில் போட்ட
வழிகாட்டுதல் எங்கே? அவையும் இறைவனின் கட்டளைகள் எனும்போது அவற்றைக்
கடைப்பிடிக்காமல் இருக்க முடியுமா! அவற்றை மறுப்பது மேற்கண்ட இரு
வசனங்களையும் மறுத்ததாக ஆகாதா?
குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உள்ளன என்பதற்கு இன்னும் பல வசனங்கள் சான்றுகளாக உள்ளன.
திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாக அமைந்துள்ளதோ
அது போலவே ஆதராரப்பூர்வமான ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மூலாதாரங்களாக
அமைந்துள்ளன. இந்த உண்மையை திருக்குர்ஆனிருந்தே நாம் அறிந்து கொள்ள
இயலும்.
கடந்த இரண்டு தொடர்களில் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ
இருக்கிறது என்பதையும், அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதையும்
திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை ஆதாரமாகக் கொண்டு அறிந்து
கொண்டோம்.அல்லாஹ்வின் தூதர்களாக அனுப்பப்படும் நபிமார்களுக்கு அல்லாஹ்
வேதத்தை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை. இன்னொன்றையும் சேர்த்துக்
கொடுத்து அனுப்பி இருக்கிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இவ்வாறே
அல்லாஹ் கொடுத்து அனுப்பியுள்ளான்.
அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையையும் உங்கள் மீது அவன்
இறக்கிய கிதாபையும் ஹிக்மத்தையும் நீங்கள் நினைவு கூருங்கள்! இதன் மூலம்
அல்லாஹ் உங்களுக்குப் போதனை செய்கிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!
மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அறிந்தவன் எனபதை நீங்கள்
அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2 : 231)
மேலும் அல்லாஹ் உம்மீது கிதாபையும் ஹிக்மத்தையும்
இறக்கியுள்ளான். மேலும் நீர் அறியாதவற்றை உமக்குக் கற்றுத் தந்தான். உமக்கு
அல்லாஹ் செய்திருக்கும் அருள் மகத்தானதாக உள்ளது. (அல்குர்ஆன் 4 : 113)
இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது
கிதாபையும், ஹிக்மத்தையும் அருளியதாக அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின்
வேதத்தில் தேவையற்ற வீணான ஒரு வார்த்தையும் இருக்காது. இருக்க முடியாது.
இருக்கக் கூடாது. அல்லாஹ் தனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு
அருளியது வேதம் மட்டுமே, அதாவது அல்குர்ஆன் மட்டுமே என்றிருந்தால் கிதாபை
உம்மீது இறக்கினான் என்று கூறுவதே போதுமானதாகும். ஆனால் கிதாபையும்
ஹிக்மத்தையும் உம்மீது இறக்கியுள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்
இரண்டு வகையான செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளியதாகக்
கூறும் போது கிதாபை மட்டும் தான் அல்லாஹ் அருளினான் என்று வாதிடுவது
இவ்விரு வசனங்களையும் மறுப்பதாகத் தான் அமையும்.
குர்ஆன் மட்டும் போதும் என்ற கருத்துடையவர்கள் இதற்குப் பதிலளிக்கும் போது எள்ளி நகைக்கும் விதமாக உளற ஆரம்பித்து விடுகின்றனர்.
”ஹிக்மத் என்பதன் பொருள் ஞானம். பொதுவாக எல்லா
மனிதர்களுக்கும் அல்லாஹ் ஞானத்தைக் கொடுக்கிறான். அதைத் தான் இங்கே
குறிப்பிடுகிறான்” என்பது இவர்களது விளக்கம்.
ஹிக்மத் என்ற வார்த்தையின் நேரடிப் பொருள் ஞானம், அறிவு
என்பது தான். இதில் சந்தேகம் இல்லை. ஹிக்மத் என்ற வார்த்தைக்கு நேரடிப்
பொருள் கொண்டவர்கள் கிதாப் என்ற வார்த்தைக்கும் நேரடிப் பொருள் தான் கொள்ள
வேண்டும். கிதாப் என்ற வார்த்தைக்கு எழுதப்பட்டது – தபால் என்பது பொருள்.
அகராதியில் வேதம் என்று பொருள் கிடையாது.
யாரோ எழுதிய துண்டுச் சீட்டைக் கூட கிதாப் எனலாம். ஒரே
வசனத்தில் இடம் பெற்ற இரண்டு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கு மட்டும்
அகராதியில் உள்ள பொருளைக் கொடுத்து விட்டு மற்றொரு வார்த்தைக்கு வேறு
பொருள் கொடுக்க எந்த நியாயமும் இல்லை.
கிதாப் என்ற வார்த்தையின் பொருள் எழுதப்பட்டது என்று
இருந்தாலும் அல்லாஹ் இறக்கியருளியதாகக் கூறும் போது அதன் பொருள் வேதம்
என்று ஆகி விடுகிறது. அது போலவே ஹிக்மத் என்பதன் நேரடிப் பொருள் ஞானம்
என்றாலும், இங்கே ஹிக்மத்தை இறக்கியருளியதாக அல்லாஹ் கூறுகிறான். அதாவது
கிதாபை எவ்வாறு இறக்கியருளி இருக்கிறானோ அது போலவே ஹிக்மத்தையும்
இறக்கியருளியிருக்கிறான்.
பொதுவாக மனிதர்களுக்கு ஞானம் வழங்கியது பற்றிக் குறிப்பிடும்
போது ஞானத்தைக் கொடுத்ததாகவும், நபிகள் நாயத்துக்கு ஞானத்தை வழங்கியது
பற்றிக் கூறும் போது ஞானத்தை இறக்கியருளியதாகவும் அல்லாஹ் கூறுகிறான். எனவே
குர்ஆன் போன்ற மற்றொரு வஹீயை அல்லாஹ் இறக்கியுள்ளான் என்பதே இதன்
பொருளாகும். இவ்வாறு பொருள் கொள்ளும் போது ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டிய
இருவசனங்களுடன் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
மிகத்தெளிவான இவ்விரு வசனங்களுக்கும் முன்னால் இவர்களின்
புரட்டு வாதம் நொறுங்கிப் போவதைக் கண்டவுடன் வேறு விதமாகவும்
சமாளிப்பார்கள், சமாளிக்கிறார்கள். அதாவது கிதாப் தான் ஹிக்மத், ஹிக்மத்
தான் கிதாப். இரண்டும் ஒன்று தான். கிதாபு என்றும் ஹிக்மத் என்றும்
குர்ஆனையே இங்கே குறிப்பிடுகிறான் என்று பிதற்றுகிறார்கள்.
அல்லாஹ்வின் வசனங்களை எப்படியெல்லாம் கேக்
கூத்தாக்குகிறார்கள் என்பதற்கு இந்த உளறல் சரியான ஆதாரமாகவுள்ளது. அதுவும்
இதுவும், அவனும் இவனும் என்று ”உம்”மைப் பயன்படுத்தினால் இரண்டு தனித்தனி
பொருட்களுக்கிடையே தான் பயன்படுத்த முடியும்.
அல்லாஹ்வையும் ரசூலையும் நம்புங்கள் என்று கூறினால் அல்லாஹ்
தான் ரசூல், ரசூல் தான் அல்லாஹ் என்று வியாக்கியானம் அளிப்பது போன்ற
பைத்தியக்காரத்தனமாக இவர்களது கூற்று அமைந்துள்ளது.
சோறும் குழம்பும் தந்தான் என்றால் இரண்டு பொருட்கள்
தரப்பட்டதாகத்தான் பொருள்.இன்னும் தங்களின் அறியாமையை வெளிச்சம் போட்டுக்
காட்டும் வகையில் மேலும் உளறுகிறார்கள்.குர்ஆனில் ஹிக்மத் (ஞானம்) இல்லையா?
ஹிக்மத்துடைய குர்ஆன் என்று யாசீன் அத்தியாயத்தின் துவக்கத்தில்
கூறப்படவில்லையா என்று கேட்டு இரண்டையும் ஒன்றாக்க முயல்கின்றனர்.இவர்களின்
வாதம் உண்மையாக இருந்தால் யாசீன் அத்தியாயத்தில் கூறியது போல் ஏன் இங்கே
கூறவில்லை. ஹிக்மத்தான கிதாப் என்று கூறாமல் ஹிக்மத்தையும் கிதாபையும்
என்று ஏன் கூற வேண்டும்? யாசீன் அத்தியாயத்தில் பயன் படுத்தப்பட்ட
வார்த்தைகளுக்கு அவ்வார்த்தையின் அமைப்பை வைத்துப் பொருள் கொள்வது போல்
இங்கே பயன் படுத்தப் பட்ட வார்த்தைக்கு பொருள் கொள்ளும் போது இங்கே
பயன்படுத்தப்பட்ட வாசக அமைப்பை வைத்துத் தான் பொருள் கொள்ள வேண்டும். இங்கே
கிதாப் என்ற ஒரு பொருளும் ஹிக்மத் என்ற இன்னொரு பொருளும் வழங்கியதாகத்
தெளிவாகக் கூறப்படுகின்றது.
இவர்களது அறியாமையைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தை இங்கே
குறிப்பிடுவது பொருத்தமாகும். பொறுமை மிகுந்த சுலைமான் என்று ஒரு நாள் நான்
கூறுவதாக வைத்துக் கொள்வோம். மறுநாள் மக்களிடம் ”பொறுமையைப் பிடித்துக்
கொள்ளுங்கள்” என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். பொறுமை மிகுந்த சுலைமான்
என்று நீங்கள் தானே கூறினீர்கள். எனவே சுலைமானை நான் பிடிக்கப் போகிறேன்.
சுலைமானிடமும் பொறுமை இருக்கத் தானே செய்கிறது என்று ஒருவன் வாதிட்டால்
அவனை நாம் என்ன வென்போம்? அவனுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும்
இல்லை.
சுலைமானிடம் பொறுமை இருப்பது தனி விஷயம். இந்த இடத்தில்
பொறுமை எந்தக் கருத்தில் பயன் படுத்தப் பட்டது என்பது தனி விஷயம். எனவே
அல்லாஹ் வேதத்தை எவ்வாறு தன் புறத்திருந்து அருளினானோ அவ்வாறே
ஹிக்மத்தையும் தன் புறத்திருந்து வஹியாக அருளியிருக்கிறான். அதை நாம்
ஹதீஸ்கள் என்கிறோம்.குர்ஆன் மட்டும் போதும் என்போர் அல்லாஹ் இறக்கியருளிய
ஹிக்மத் எது என்பதை குர்ஆனிருந்து கண்டு பிடித்துக் காட்டட்டும்!
ஹிக்மத் என்பதற்கு இவர்கள் கூறுகின்ற விளக்கம் கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனே சான்று கூறுகிறது.
(நபியின் மனைவியரே!) உங்கள் வீடுகளில் ஓதிக் காட்டப்படும்
அல்லாஹ்வின் வசனங்களையும் ஹிக்மத்தையும் நினைவு கூருங்கள். (அல்குர்ஆன் 33 :
34)
ஹிக்மத் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப் பட்ட ஞானம்
தான் என்பது முற்றிலும் தவறானது என்பதை இவ்வசனம் விளக்குகிறது.
இவ்வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்கள் எவ்வாறு ஓதிக் காட்டப்படுகிறதோ அதுபோலவே
ஹிக்மத்தும் ஓதிக் காட்டப்படுவதாக அல்லாஹ் கூறுகிறான். நபியின் மனைவியர்
வீட்டில் ஓதிக் காட்டப்படுகிறது என்றால் ஓதிக் காட்டியவர் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் தான். நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின்
வசனங்களையும் ஓதிக் காட்டியுள்ளார்கள். மேலும் ஹிக்மத்தையும் ஓதிக்
காட்டியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
திலாவத் – ‘ஓதிக் காட்டுதல்’ என்பது பிறரது வார்த்தையை ஒருவர்
எடுத்துக் கூறுவதைக் குறிக்கும் சொல்லாகும். எனவே அல்லாஹ்வின் வசனங்கள்
எப்படி நபியின் சொந்த வார்த்தை இல்லையோ அது போலவே ஹிக்மத்தும் அவரது
சொந்தக் கருத்தல்ல. இரண்டுமே அல்லாஹ்வுக்குச் சொந்தமாகவுள்ளதால் தான்
இரண்டையும் நபி (ஸல்) ஓதிக் காட்டியுள்ளார்கள் என்று அல்லாஹ் இங்கே
கூறுகிறான்.
குர்ஆன் அல்லாத வஹீ உள்ளது என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனிலேயே உள்ளன. அவற்றை மேலும் பார்ப்போம்.
அல்லாஹ் எந்த நபியை அனுப்பினாலும் அவருக்கு வேதப்புத்தகத்தை
மட்டும் கொடுத்து இதை மட்டும் மக்களுக்குப் படித்துக் காட்டுங்கள் என்று
கூறி அனுப்புவதில்லை. மாறாக வேதத்தில் எழுகின்ற சந்தேகங்களுக்கு
விளக்கமளிக்கவும், கூடுதல் விளக்கம் தேவைப்படும் இடங்களில் அதை அளிக்கவும்
தேவையான ஞானத்தையும் சேர்த்தே கொடுத்து அனுப்பியுள்ளான்.
உங்களுக்கு கிதாபையும் ஹிக்மத்தையும் நான் வழங்கியபின்
உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை
நிச்சயமாக நம்புவீர்களா? நிச்சயமாக அவருக்கு உதவுவீர்களா? என்று அல்லாஹ்
நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்ததை நினைவு கூர்வீராக! (அல்குர்ஆன் 3 : 81)
எல்லா நபிமார்களிடமும் அல்லாஹ் ஓர் உறுதிமொழி எடுத்ததை இங்கே
நினைவு படுத்துகிறான். (நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர் யாரும்
வரமுடியுமா? என்பதைக் கூறும் இவ்வசனத்துக்குத் தலைகீழாக விளக்கம் கூறி
நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர் வர முடியும் என்று ஒரு மன நோயாளி
உளறியிருப்பதைப் பின்னர் நாம் விளக்குவோம்)
அவ்வுறுதி மொழியைக் குறிப்பிடும் போது ”நபிமார்களே!
உங்களுக்கு வேதத்தையும் ஹிக்மத்தையும் நான் வழங்கிய பின்” என்று இறைவன்
குறிப்பிடுகிறான். நபிமார்களுக்கு வேதம் எவ்வாறு வழங்கப்பட்டதோ அவ்வாறே
ஹிக்மத்தும் வழங்கப்பட்டது. இரண்டுமே இறைவனால் தான் வழங்கப்பட்டது என்பதை
இவ்வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்)
கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர் வழியில் செலுத்தினோம்.
இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிருந்து தாவூது, ஸுலைமான்,
அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்.
இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூ வழங்குகிறோம். இன்னும், ஜகரிய்யா,
யஹ்யா, ஈஸா, இல்யாஸ் – இவர்கள் யாவரும் (நேர் வழி சார்ந்த) ஸாஹானவர்களில்
நின்றுமுள்ளவர்களே. இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் – இவர்கள்
யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம். இவர்களுடைய
மூதாதையர்களிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிருந்தும், இவர்களுடைய
சகோதரர்களிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில்
செலுத்தினோம். இதுவே அல்லாஹ்வின் நேர் வழியகும். தன் அடியார்களில் அவன்
யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன் மூலம் நேர்வழி காட்டுகிறான்
(பின்னர்) அவர்கள் இணை வைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம்,
அவர்களை விட்டு அழிந்து விடும். இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும்,
அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம். ஆகவே இவற்றை இவர்கள்
நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக
பொறுப்பாக்குவோம். (அல்குர்ஆன் 6 : 84 – 89)
இவ்வசனங்களில் 1. இப்றாஹீம் 2. இஸ்ஹாக் 3. யஃகூப் 4. நூஹ் 5.
தாவூத் 6. சுலைமான் 7. அய்யூப் 8. யூசுப் 9. மூஸா 10. ஹாரூன் 11.
ஸக்கரிய்யா 12. யஹ்யா 13. ஈஸா 14. இல்யாஸ் 15. இஸ்மாயீல் 16. அல்யஸவு 17.
யூனுஸ் 18. லூத் ஆகிய நபிமார்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விட்டு 87 ஆம்
வசனத்தில் இவர்களது முன்னோர்கள், இவர்களின் சந்ததிகள் இவர்களது
சகோதரர்களில் தோன்றிய நபிமார்களைப் பொதுவாகவும் கூறுகிறான்.
அதாவது நபிமார்கள் எனப்படும் அனைவரையும் பொதுவாகவும் சிலரைக்
குறிப்பாகவும் கூறிவிட்டு ”இவர்களுக்கு கிதாபையும் வழங்கினோம். ஹுக்மையும்
வழங்கினோம். நுவுவ்வத்தையும் வழங்கினோம்” என்று அல்லாஹ் 89வது வசனத்தில்
கூறுகிறான்.கிதாபு என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது. நுபுவ்வத் என்பதன்
(நபி எனும் தகுதி) பொருளும் விளங்குகிறது. இவ்விரண்டை மட்டுமின்றி
மூன்றாவதாக ‘ஹுக்மை’ வழங்கியதாகக் கூறுகிறானே அது என்ன?
ஹுக்மு என்பதற்கு அதிகாரம் என்பது பொருள். இவர்களில் தாவூத்,
சுலைமான், யூசுப், மூஸா போன்ற சிலருக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது
என்றாலும் அனைத்து நபிமார்களும் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டவர்களாக
இருக்கவில்லை. எனவே ஹுக்மு என்பதற்கு ஆட்சியதிகாரம் என்று பொருள் கொள்ள
முடியாது. மாறாக மார்க்க ரீதியிலான சட்ட திட்டங்கள் குறித்த அதிகாரமே இங்கே
குறிப்பிடப்படுகிறது.
அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஹிக்மத் என்னும் ஞானத்தின்
மூலம் ஹுக்மு எனும் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நபிமார்கள் பெற்றார்கள்.
அல்லாஹ்வே அதை நபிமார்களுக்கு வழங்கியிருந்தான் என்பதை இதிருந்து தெளிவாக
அறிந்து கொள்ளலாம்.வேதம் தவிர வேறு எதுவும் நபிமார்களுக்கு வழங்கப்
படவில்லை என்றிருந்தால் வேதத்தையும் நுவுவ்வத்தையும் ஹுக்மையும் என்று
அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.
இறுதியாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் செய்தி முக்கியமாகக்
கவனிக்கப் படவேண்டியதாகும். ”இந்த நபிமார்கள் இம்மூன்றையும்
மறுப்பார்களானால் மறுக்காத – காஃபிர்களாக இல்லாத – ஒரு கூட்டத்தாரிடம்
இவற்றை ஒப்படைப்போம்” என்பது தான் அந்தப் பகுதி. வேதம் மட்டும் தான் நமக்கு
அருளப்பட்டது. ஹுக்மு என்ற அதிகாரமோ, ஹிக்மத் என்ற ஞானமோ தமக்குத்
தேவையில்லை என்று அந்த நபிமார்கள் கருதுவார்களானால் இம்மூன்றையும் ஏற்கக்
கூடிய மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து அனுப்புவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை
செய்கிறான்.
”இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத
(காபிராக இல்லாத) வேறு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்பேன்” என்று அல்லாஹ்
கூறுவது மூன்றுமே சமமானவை என்பதற்கும் மூன்றில் எதையும் நபிமார்களே
மறுக்கக் கூடாது என்பதற்கும் மிகத் தெளிவான சான்றாக உள்ளது. மூன்றையும்
சேர்த்து வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். மூன்றில் ஒன்றோ
இரண்டோ தான் வேண்டும் எனக் கூறினால் வேறு யாருக்காவது மூன்றையும் தந்து
விடுவேன் என்ற தோரணையில் இவ்வசனம் அமைந்துள்ளது.
குர்ஆன் மட்டும் போதும் என்போர் காபிர்கள் தான் என்று திட்டவட்டமாக குர்ஆனே அறிவிக்கிறது.
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது
இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின்
சந்ததியினருக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும் கொடுத்தோம். அத்துடன் மாபெரும்
அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (அல்குர்ஆன் 4 : 54)
இவ்வசனத்தில் இப்றாஹீம் நபிக்கும் அவரது வழித் தோன்றல்களாக
வந்த நபிமார்களுக்கும் கிதாபையும் ஹிக்மத்தையும் வழங்கியிருப்பதாக அல்லாஹ்
கூறுகிறான். பொதுவாக எல்லா நபிமார்களுக்கும் குர்ஆனுடன் ஹிக்மத்தும்
அருளப்பட்டதாகக் கூறும் இறைவன் இதே முறையில் தான் இதே மாதிரியாகத் தான்
நபிகள் நாயகத்துக்கும் வஹீ அருளியிருப்பதாகக் கூறுகிறான்.
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர)
நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ
அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும்,
யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும்,
யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்.
இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (அல்குர்ஆன் 4 :
163)
இந்த நபிமார்களுக்கு எவ்வாறு வஹீ அருளப்பட்டதோ அந்த வழி
முறைக்கு மாற்றமாக புது முறையில் குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக குர்ஆனுடன்
ஹிக்மத்தும் சேர்த்தே அருளப்பட்டது என்பதை இவ்வசனத்திருந்து புரிந்து
கொள்ளலாம். எனவே நபிமார்கள் புத்தகத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும்
தபால்காரர் போல் அனுப்பப் படவே இல்லை. மாறாக அதற்கு விளக்கம் சொல், செய்து
காட்டும் அதிகாரம் படைத்தவர்களாகவே அனுப்பப்பட்டனர். அதே அதிகாரத்துடன்
தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுப்பப்பட்டனர்.
குர்ஆனைத் தவிர வேறு வஹீ இல்லை என்போர் உண்மையில் அவர்கள்
மறுப்பது மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனங்களையும் கடந்த மூன்று
தொடர்களாகச் சுட்டிக் காட்டிய குர்ஆன் வசனங்களையும் தான் மறுக்கிறார்கள்.
இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
குர்ஆன் மட்டுமின்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மார்க்கத்தின் மூலஆதாரமே என்பதற்கான சான்றுகள் இவ்வளவு தானா! இன்னும் உள்ளன.
எல்லா இறைத் தூதர்களுக்கும் இறைவனிடமிருந்து வேதத்தைப் பெற்று
மக்களுக்குச் சேர்ப்பிக்கும் பணியுடன் அவ்வேதத்துக்கு விளக்கவுரை
அளிக்கும் பணியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டன. இறைத் தூதர்களின் விளக்கவுரை
தேவைப்படாத எந்த வேதமும் இறைவனால் அருளப்படவில்லை என்பதைத் திருக்குர்ஆனே
தெளிவாக அறிவிக்கின்றது.
இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது வழித் தோன்றல்களில் ஒரு
இறைத்தூதரை அனுப்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.
அந்தப் பிரார்த்தனை திருக்குர்ஆனிலும் இறைவனால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
எங்கள் இறைவா! இவர்களுக்கு உன் வசனங்களை ஓதிக் காட்டி
இவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து இவர்களைத் தூய்மை
படுத்தக் கூடியவராக இவர்களுக்கு இவர்களிருந்தே ஒரு தூதரை அனுப்புவாயாக!
நிச்சயமாக நீ மிகைத்தவன். ஞானமிக்கவன் (அல்குர்ஆன் 2 : 129)
இப்ராஹீம் நபியவர்களின் இப்பிரார்த்தனை வேதம் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது.
”உனது வசனங்களை அந்தத் தூதர் அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்”
”அவர்களுக்கு வேதத்தைக் கற்றுத் தருவார்”
என்று இப்ராஹீம் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். வசனங்களை
ஓதிக் காட்டியவுடன் மக்களுக்கு விளங்கி விடும் என்றிருந்தால் – வசனங்களை
ஓதிக் காட்டுவது மட்டுமே இறைத்தூதர்களின் பணியாக இருந்திருந்தால் –
இப்றாஹீம் (அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்திருக்க மாட்டார்கள்.
உனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார் என்று மட்டும்
கூறியிருப்பார்கள் அல்லது வேதத்தை அவர்களுக்கு கற்றுத் தருவார் என்று
மட்டும் கூறியிருப்பார்கள். இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கூறாமல்
இரண்டையும் சேர்த்துக் கூறியதிருந்து வசனங்களை ஓதிக் காட்டுவது வேறு.
ஓதிக் காட்டிய பின் வேதத்தைக் கற்றுக் கொடுப்பது வேறு என்பதைப் புரிந்து
கொள்ளலாம்.
இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை எப்படி ஆதாரமாகக் கொள்ள
முடியும்? அல்லாஹ் இவ்வாறு கூறவில்லையே என்று யாரும் நினைத்து விடக்கூடாது.
ஏனெனில் அல்லாஹ்வும் இப்படித் தான் கூறியுள்ளான்.
உங்களுக்கு உங்களிருந்தே ஒரு தூதரை நாம் அனுப்பினோம். அவர்
உங்களுக்கு நமது வசனங்களை ஓதிக் காட்டுவார். மேலும் உங்களைத் தூய்மை
படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுத் தருவார். மேலும்
நீங்கள் அறியாதிருந்தவற்றையும் உங்களுக்குக் கற்றுத் தருவார். (அல்குர்ஆன் 2
: 151)
இது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப் பட்டது குறித்து
கூறுகின்ற வசனமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட
பொறுப்பையும் அதிகாரத்தையும் தெளிவாகப் பறைசாற்றும் வகையில் இவ்வசனம்
அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசுகின்ற சமுதாய
மக்களுக்கே தூதராக முதல் அனுப்பப் பட்டார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட
வேதமும் தெளிவான அரபு மொழியிலேயே அருளப் பட்டது. அரபு மொழியைத் தாய்
மொழியாகக் கொண்ட மக்களுக்கு அரபு மொழி வேதத்தை ஓதிக் காட்டியவுடன் அதன்
பொருள் நிச்சயம் விளங்கி விடும். ஆனால் மேலே கண்ட வசனம் என்ன சொல்கிறது
என்று பாருங்கள்.
1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை ஓதிக் காட்டுவார்களாம்.
2. பின்னர் வேதத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பார்களாம்!
3. ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்களாம்.
4. பின்னர் அம்மக்கள் அறியாமல் இருந்த பல விஷயங்களை கற்றுக் கொடுப்பார்களாம்.
5. அவர்களைப் பரிசுத்தம் செய்யும் பணியையும் செய்வார்களாம்.
இப்படி ஐந்து பொறுப்புக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக இவ்வசனம் கூறுகிறது.
அல்லாஹ்வுடைய வார்த்தையில் வீணான ஒரு சொல்லும் இருக்காது,
இருக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் குர்ஆன் அல்லாத
இன்னொரு வஹீ இருப்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.வசனங்களை ஓதிக்
காட்டியவுடன் பெரும்பாலான வசனங்களின் பொருள் புரிந்து விடும் என்றாலும்
நபிகள் நாயகம் விளக்கம் சொன்னபிறகு விளங்கக் கூடிய வசனங்களும் குர்ஆனில்
உள்ளன. அவ்வாறு இருப்பதால் தான் வசனங்களை ஓதிக் காட்டுவார். மேலும்
வேதத்தைக் கற்றுத் தருவார் என்று இறைவன் கூறுகிறான்.
ஹஜ் செய்யுங்கள் என்பதன் பொருள் விளங்கலாம். ஹஜ் என்றால்
எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் விளக்கினால் தான் புரியும்.
உம்ராச் செய்யுங்கள் என்று குர்ஆன் கூறுவதன் பொருள் விளங்கலாம். அதை
எவ்வாறு செய்வது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் விளக்க வேண்டும்.
இப்படி ஏராளமான வசனங்களுக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது
என்பதை விளக்கும் அதிகாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்
வழங்கியிருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் தெளிவாக்குகிறது.
அவனது வசனங்களை ஓதிக் காட்டி மேலும் அவர்களைத் தூய்மைப்
படுத்தி மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கக்
கூடிய ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அல்லாஹ் மூமின்களுக்கு பேரருள் புரிந்து
விட்டான் (3 : 164)
வெறும் வேதத்தை மட்டும் அருளியதை அருட்கொடையாக அல்லாஹ்
கூறவில்லை. மாறாக தூதரை அனுப்பியது தான் அருட் கொடை என்கிறான். அதுவும்
அந்தத் தூதர் வேதத்தை வாசித்துக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு
விளக்கம் கூறும் அதிகாரமும் பெற்றவராக இருப்பதையும் கூறி விட்டு இதைத் தனது
அருட்கொடை என அல்லாஹ் சொல்க் காட்டுகிறான். இதே போன்று ஜும்ஆ
அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாசித்துக் காட்டிய குர்ஆன்
எங்கே என்றால் இதோ என்று கூறி விடுவோம். அந்த வேதத்துக்கு விளக்கம்
அளித்தார்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே அந்த விளக்கம் எங்கே? அறியாதவற்றை
எல்லாம் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறானே அவையெல்லாம் எங்கே? இறைவன் அந்தப்
பணிகளைச் செய்வதற்காகவே அனுப்பியுள்ளான் என்பதிருந்து அவர்களின் விளக்கம்
இன்றியமையாத ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அந்த இன்றி அமையாத
விளக்கம் எங்கே? குர்ஆன் மட்டும் போதும் என்போர் அதை ஒருக்காலும் எடுத்துக்
காட்ட முடியாது.
வேதத்தைக் கற்றுக் கொடுப்பதும் வசனங்களை ஓதிக் காட்டுவதும்
ஹிக்மத்தைக் கற்றுக் கொடுப்பதும் எல்லாம் ஒன்றுதான் என்று உளறுவதைத் தவிர
அவர்களிடம் இதற்கு பதில் கிடையாது. அல்லாஹ் தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்
படுத்தியிருக்கிறான் என்று அல்லாஹ்வின் தகுதியைக் குறைத்தாவது தங்கள் மனோ
இச்சையை நிலை நாட்டப் பார்க்கிறார்கள். பயனற்ற தேவையற்ற ஒரே ஒரு சொல்லும்
அல்லாஹ்வின் வேதத்தில் இருக்காது என்ற நம்பிக்கையுடன் வேதத்தை ஆராய்ந்தால்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை வெறுமனே வாசித்துக் காட்ட
மட்டும் வரவில்லை. வாசித்துக் காட்டும் போது ஏற்படும் சந்தேகங்களைத்
தீர்த்து வைக்கும் அதிகாரம் பெற்றவர்களாகவும் நடைமுறைப்படுத்திக் காட்டும்
அதிகாரம் பெற்றவர்களாகவுமே வந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ – இறைச் செய்தி உள்ளது என்பதற்கான சான்றுகள் இத்துடன் முடியவில்லை. இன்னும் பல வசனங்கள் உள்ளன.
பர்மாவில் ரமழானிலும் நடக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகள்.
அன்பின் இஸ்லாமிய உள்ளங்களே! மியன்மர் (பர்மா) ல் கொலை செய்யப்படும் நமது தொப்புல் கொடி உறவுகளுக்காக அல்லாஹ்விடம் கையேந்துங்கள். புனிதமிக்க ரமழானில் பர்மா வாழ் நமது சொந்தங்களுக்கான நமது பங்களிப்பு இதுவாகவாவது இருக்கட்டும்.
23 - 07 - 2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கிளையின் சார்பாக கிளையின் தலைவர் முன்னிலையில் ஒரு கிருத்துவ சகோதரருக்கு இஸ்லாத்தை அதன் துய வடிவில் அறிந்து கொள்ள திருக்குர்ஆன் தமிழாக்கமும் மற்றும் பைபிள் இறைவேதமா? திருக்குர்ஆன்
இறைவேதமா ? DVD க்களும் வழங்கப்பட்டன.
24-07-2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அணைத்து கிளைகள் சார்பாக மெகா டிவியில் ஒலிபரபாகி கொண்டிருக்கும் மனகுழப்பதிற்கான மகத்தான தீர்வு என்ற தலைப்பில் சுமார் 600 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
22-07-2012 அன்று கிருத்துவ சகோதரர் சுரேஷ் அவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் முன்னிலையில் இறைவேதம் எது என்ற தலைப்பில் குறுந்தகடுகள் வழங்கப்பட்டது
தாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல்கள்தான் சரியான தீர்வு என்பதை உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆட்சியாளர்களும், அனைத்து மக்களும் உணர்ந்து கொண்டு இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களை தங்களது நாடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு கோரிக்கை விடுப்பது மட்டுமின்றி பல நாடுகளில் இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தத் துவங்கியும் விட்டனர். இப்படி உலகமே இஸ்லாத்தை நோக்கியும், இஸ்லாம் சொல்லக்கூடிய சட்ட திட்டங்களை நோக்கியும் திரும்பிப்பார்த்து அவற்றை ஏற்றுக் கொண்டு வரும் இந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் பாசிசவாதிகள் இஸ்லாம் காட்டித் தந்த சட்டதிட்டங்கள் கொடூரமானவை என்று கூறி இஸ்லாம் சொல்லக்கூடிய சட்டதிட்டங்களை அப்புறப்படுத்த கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்களது ஊது குழலாக மாறி வரும் ம.ம.கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ் அந்த சங்பரிவாரத்தின் கோரிக்கையை தனது கோரிக்கையாக வாந்தி எடுத்து வருகின்றார். சமீபத்தில் பிஜேபி தலைவர் இல.கணேசனுடன் ஒரே மேடையில் உற்சாகத்தோடு கைகோர்த்து நின்று போஸ் கொடுத்து தனது பாசிச முகத்தை வெளிப்படுத்தினார். அதற்கு விளக்கம் சொல்கின்றேன் என்று அவர் விட்ட அறிக்கையைப் பார்த்துவிட்டு அதன் பிறகு பல சகோதரர்கள் அவரைக் காரித்துப்பி விட்டு, ம.ம.கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். இப்படி நிலைமை மோசமாகி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ம.ம.கட்சியின் ஜால்ரா மன்னன் கலந்து கொண்டு மரண தண்டனையை ஒழிப்பதுதான் தனது தலையாய பணி என்று சூளுரைத்துள்ளார். மரண தண்டனை சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வாறு, “மரண தண்டனை சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தமிழனுடைய உணர்வாக இருக்க முடியும்” என்று கூறி தனது மொழி வெறியை வெளிக்காட்டியுள்ளார். இஸ்லாமிய சட்டதிட்டத்தைவிட தனது இனவெறிதான் முக்கியம் என்பதை தனது சூளுரையின் வாயிலாக நிரூபித்துள்ளார். “மரணதண்டனை வழங்குவது என்பது மிகப்பெரும் கொடூரம்” என்று கூறி திருவாய் மலர்ந்துள்ளார். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான் : நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை,பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள் அல்குர்-ஆன் 2 : 178, 179 மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கொலைக்குப் பகரமாக கொலை என்ற சட்டத்தின் மூலம் நமக்கு வாழ்வு உள்ளதாக சொல்லிக்காட்டுகின்றான். மேலும்,
உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள் அல்குர்-ஆன் 5 : 45 மேற்கண்ட வசனத்தில் உயிருக்கு உயிர் என்பதுதான் சரியானது என்று அல்லாஹ் சொல்லிக்கட்டுகின்றான். இந்த நாட்டில் உள்ள உருப்படியான சட்டம் ஒன்று உள்ளதென்றால் அது இந்த மரணதண்டனை வழங்கும் சட்டம்தான். மற்ற குற்றவியல் சட்டங்கள் எல்லாம் பல வருடங்கள் குற்றம் செய்தவனுக்கு சோறு போட்டு, அவனை படிக்க வைத்து, அவனுக்கு பாதுகாப்பளித்து, மருத்துவம் பார்த்து, அவனுக்குத் தேவையான அனைத்து சுக போகங்களையும் வழங்கக் கூடிய மானங்கெட்ட சட்டமாகத்தான் உள்ளன. அல்லாஹ் சொல்லக்கூடிய இந்த மரணதண்டனை வழங்கும் சட்டத்தை ஒரு முஸ்லிம் வரவேற்க வேண்டுமா? அல்லது அதை ஒழித்துக்கட்ட களம் காண வேண்டுமா? அல்லாஹ்வுடைய இந்த சட்டத்தை யார் எதிர்ப்பார்கள்? இஸ்லாத்தை ஒழித்துக்கட்டத்துடிக்கும் பாசிசவாதிகள்தான் இந்த சட்டத்தை ஒழித்துக்கட்டத் துடிப்பார்கள். அந்த பாசிசவாதிகளின் ஏஜெண்டாக செயல்படும் ம.ம.கட்சியின் தலைவரோ அல்லாஹ் எந்த ஒரு சட்டத்தில் வாழ்வு இருப்பதாக சொல்லிக்காட்டுகின்றானோ அந்த சட்டத்தை மவுத் ஆக்கப்பார்க்கின்றார். அல்லாஹ் சொல்லிக்காட்டக்கூடிய சட்டம் கொடூரமானது என்று சொல்லி சங்பரிவாரத்தின் கூற்றை, குற்றச்சாட்டை அப்படியே வாந்தி எடுத்து, தான் தமிழகத்து ஏஜெண்ட்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றார். அதற்காக நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொண்டு, “நான் இஸ்லாத்தை ஒழித்துக்கட்டத்துடிக்கும் இஸ்லாமிய துரோகிதான்” என்று நிரூபித்துள்ளார்.
ஜால்ரா மன்னனிடம் சில கேள்விகள்: இந்த ஜால்ரா மன்னனிடம் நாம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம். மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சொல்லி பிரச்சாரம் செய்கின்றாரே! இவரது நெருக்கமான உறவினரையோ அல்லது குடும்பத்தாரையோ யாராவது கொன்றுவிட்டால் அவனுக்கு 28 ஆண்டுகள் இவர் தனது சொந்த செலவில் சோறு போட்டு, வாரம் ஒரு முறை சிக்கன் வாங்கிக் கொடுத்து அழகு பார்ப்பாரா? மரணதண்டனை என்பது கொடூரமான சட்டம் என்றால், கற்பழிப்பு, கொலை, போன்ற செயல்களை செய்யக்கூடியவர்களை என்ன செய்யச் சொல்லுகிறது இந்த சட்டமன்ற ஜனாஸா? அதுமட்டுமல்லாமல் கடந்த பெருநாள் தினத்தன்று ராஜிவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களது மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் போட்டது முஸ்லிம்களுக்கு பெருநாள் பரிசு என்று நாக்கூசாமல் பேட்டி கொடுத்தார். அது போல இந்தப் பெருநாள் தினத்தன்று, இந்திய அரசாங்கம், மரணதண்டனை என்ற கொடூரமான சட்டத்தை ரத்து செய்து முஸ்லிம்களுக்கு பெருநாள் பரிசளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த ஜால்ரா மன்னன் தற்போது வசூல் மன்னனாக மாறி, சவூதி அரேபியாவில் சரணாகதி அடைந்து, அங்கு சென்று வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளன. மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்ட இந்தக் கொள்கை குன்று(?), மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சென்னையில் கூட்டத்தில் முழங்கிய தனது வீரமுழக்கத்தை சவூதி அரசாங்கத்திடம் முழங்க திராணி உண்டா? என்று இந்த ஜால்ரா மன்னனுக்கு சவால் விடுகின்றோம். அப்படி சவூதியில் மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று இவர் வீர முழக்கமிட்டால் இவருக்கு அங்கு “முர்தத்” என்ற பட்டம் கொடுத்து மரண தண்டனை கொடுத்து விடுவார்கள் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும்? இந்த சட்டமன்ற ஜனாஸா இதே கோரிக்கையை வலியுறுத்தி சவூதியில் ரகசியக் கூட்டம் போட்டதாகவும் கேள்வி. பிஜேபியின் பிரச்சாரத்தை சவூதியிலும் சென்று செய்யும் இந்த ஜால்ரா மன்னனை இஸ்லாமிய சமுதாயம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
Saturday 21 July 2012
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த பார்வையாளர்களே உங்கள் கருத்துகளை கண்டிப்பாக இங்கு பதிவு செய்யவும்tvmtntj@gmail.com
உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் என்று நாளுக்கு நாள் இந்த உலகில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இந்த உலகின் வின்வெளி பற்றிய ஆய்வுகளும் அபூர்வங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.வின்வெளியின் அமைப்பு அதன் செயற்பாடு பற்றியெல்லாம் பல ஆய்வுகளை அன்று தொடக்கம் இன்று வரை மனிதன் செய்தாலும் இதுவரை இந்த வின்வெளி ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கீங் கலிலியோ கலிலி போன்றவர்கள் தொடக்கம் இன்றுள்ள விஞ்ஞானிகள் வரை அனைவரையும் இந்த வின்வெளி பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துக் கொண்டுதான் இருக்கிறது.இனி விஷயத்திற்கு வருவோம்.
வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? அப்படி வாழ்ந்தால் அவற்றின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?அவைகளும் மனிதர்களைப் போன்றனவா?அல்லது வித்தியாச குணங்கள் கொண்டவையா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஒவ்வொருவருடைய மனதிலும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்க்குத்தான் யார் இருக்கிறார்கள் என்று பலர் நினைக்கிறார்கள்.
முதலில் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாக சொல்லப் படும் கதைகள் என்ன?கற்பனைகள் என்ன?விஞ்ஞானத் தகவல்கள் என்ன? என்பவற்றைப் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொண்டால் இதன் உண்மை நிலையை புரிந்து கொள்வது மிக எழிதானதாகி விடும்.
பூமியில் இறங்குவதாக சித்தரிக்கப்பட்ட பறக்கும் தட்டு (வரைபடம்)
வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான கதைகள்.
இது தொடர்பாக நிறையக் கதைகள் இருந்தாலும் மக்கள் பெறுமளவுக்கு நம்பக் கூடிய கிட்டத்தட்ட 5அல்லது 6 கதைகள் உள்ளன.அதில் முதலாவது: 1254ம் ஆண்டு இங்கிலாந்தின் எல்பன்ஸ் தேவாலயத்திற்கு மேலால் புதுமையான பறக்கும் பொருள் ஒன்று காணப்பட்டதாகவும்,அது வேற்றுக்கிரக வாசிகள் வருகை தரக்கூடிய பறக்கும் தட்டாக இருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது.
Aliens எனப்படும் வேற்று கிரகவாசிகள் (கிராபிக்ஸ் படம்)
அதே போல் 1741ம் ஆண்டு இங்கிலாந்தின் ஒரு பகுதிக்கு மேலாக வட்ட வடிவத்தை விட சற்று சரிவான மர்மப் பொருள் ஒன்று பறந்து வின்னில் மறைந்ததாக போசெப் பிரபு என்பவர் கூறியிருந்தார்.அதுபோன்றே மின்குமிழ் வடிவத்தில் பறக்கும் பொருள் ஒன்று சுவிற்ச்சர்லாந்திற்கு மேலால் பறந்ததாக 1762ம் ஆண்டு கூறப்பட்டது.பிரான்சின் எம்பிரம் பகுதிக்கு மேலாக வட்ட வடிவில் பறக்கும் தட்டுக்கள் பல பறந்ததாக 1820ம் ஆண்டு தெரிவிக்கப் பட்டது.
Aliens எனப்படும் வேற்று கிரகவாசி (கிராபிக்ஸ் படம்)
1947ம் ஆண்டு பறக்கும் தட்டொன்ரைப் பார்த்ததாக விமான ஓட்டி ஒருவர் கூறிய தகவலும் இருக்கிறது.தாம் பறக்கும் தட்டுக்களால் கடத்திச் செல்லப் பட்டதாக 1971ம் ஆண்டு இரண்டு அமெரிக்கர்கள் கூறியிருந்தனர்.அதில் இருந்த உயிரினங்கள் அதிக உயரமும்,மெல்லிய உடம்பையும் கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.இவ்வாரான ஏராலமான கதைகள் காணப்படுகின்றன.எல்லாம் கதைகள்தானே தவிர நிஜங்கள் அல்ல.
பறக்கும் தட்டுகள் பற்றிய விளக்கம் என்ன?
பறக்கும் தட்டு என்ற பெயரில் ஒன்று இந்த உலகுக்கு அடிக்கடி வந்துபோவதாகவும் அதில் ஏதோ மனிதனை ஒத்த தோற்றத்தில் உள்ளவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட வடிவத்தில் ஒரு வாகனத்தை வைத்துக் கொள்வதாகவும் அது உலகில் உள்ள வாகனங்களை விட வித்தியாசப் படுவதாகவும் சொல்லப் படுகிறது.ஆனால் இவையனைத்தும் வடி கட்டிய பொய்களாகும்.
மில்லியன் கணக்கில் பறக்கும் தட்டுக்கள்(?)
கடந்த 40 வருட காலப் பகுதிக்குள் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வேற்றுக் கிரகங்களில் இருந்து வருவதாக நம்பப் படும் மர்மப் பொருட்களை,பறக்கும் தட்டுக்களை தாம் கண்டதாக கூறியுள்ளனர்.1974ம் ஆண்டு அமெரிக்காவில் இது தொடர்பாக கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப் பட்டது.அதில் அநேகர் இத்தகைய மர்மப் பொருட்களை கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.(இதுவும் இதுவரைக்கும் நிரூபிக்கப் படவில்லை)
1952ம் ஆண்டில் மாத்திரம் இவ்வாரான 1500 பறக்கும் தட்டுக்கள் வரை தெரிந்ததாக உலகின் பல பாகங்களில் இருந்தும் தகவல்கள் தெரிவிக்கப் பட்டன.அநேகமானோர் பறக்கும் தட்டுக்களாகக் கருதியவை வித்தியாசமான உரு அமைப்பை உடைய விமானங்கள்,முகிற்கூட்டங்கள்,நட்சத்திரங்கள்,செய்மதிகள் ஆகியவை தாம் என்று பின்பு புலனாகியது.
ராடார் எனும் கருவியில் சிக்காத நவீனரக போர் விமானம் (இதைத்தான் பறக்கும் தட்டு என நினைத்து விட்டார்களோ)
அதே போன்றுதான் 1964ம் ஆண்டு சுவீடனுக்கு மேலாக பறக்கும் தட்டுக்களை அவதானித்ததாக கிட்டத்தட்ட 1000க்கும் மேற்ப்பட்டவர்கள் தெரிவித்தனர்.ஆனால் அத்தனை பேரும் அதை ஒரு ராக்கட் வடிவத்திற்குத்தான் ஒப்புக் காட்டினார்கள்.இதுவும் இது வரைக்கும் உண்மையென்று யாராலும் நிரூபிக்கப் படவில்லை.
அது போன்றே ஈஸ்டர் தினத்தின் முக்கியத்துவம் மிக்க மோய் உருவச்சிலை வேற்றுக்கிரக வாசிகளின் உதவியுடனேயே நிர்மானிக்கப் பட்டதாக சிலர் நம்புகின்றனர்.ஆனாலும் இவைகள் பொய்யான தகவல்கள் என விஞ்ஞானிகள் உருதியாக கூறிவிட்டனர்.
மனிதன் விண்ணில் வாழ முடியுமா?
இந்த உலகைப் பொருத்தவரை மனிதன் வாழ்வதற்குறிய சிறப்பான தகுதியான இடமாக இறைவன் பூமியை மாத்திரம் தான் அமைத்திருக்கிறான் பூமியல்லாத எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாதென்பது உருதியாக்கப் பட்ட விஞ்ஞானமாக இருக்கிறது.
இதையே திருமறைக் குர்ஆனும் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.
பூமியில் தான் வாழ முடியும்.
மனிதன் பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் என்பதை கீழ்க்கானும் திருமறை வசனங்கள் தெளிவா எடுத்தியம்புகின்றன. அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள்இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும் வசதியும் உள்ளனஎன்றும் நாம்கூறினோம்.(2:36)
(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும் வசதியும் உள்ளன என்று (இறைவன்) கூறினான்.(7:24)
'அதிலேயே(பூமியிலேயே)வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள் என்றும் கூறினான்.(7:25)
பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்(7:10)
அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்(30:25)
இவ்வசனங்களில் இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும் என்ற கருத்துகூறப்பட்டுள்ளது.
பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோள் சந்திரன் உள்ளது. சூரியக்குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் பூமியின்துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது என்பதுநிரூபிக்கப்பட்டுள்ளது.
மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக் கொள்வோம். சூரியனிலிருந்து 5 80 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது.
முதலாவது இக்கோளில் காற்று இல்லை. அடுத்து இக்கோளின் அதிகப் பட்ச வெப்பம் 480டிகிரி சென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் 180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத 40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம்.
அதே போன்று பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையே இக்கோளில் உள்ளது.
வீனஸ் எனப்படும் வெள்ளிக் கோளை எடுத்துக் கொண்டால் சூரியனிலிருந்து 10 08 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கும் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம்நிலவுகிறது. இதுவும் பூமியின் அதிகப்பட்ச வெப்பத்தைப் போல் சுமார் 10மடங்கு ஆகும். மேலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் இங்கு இல்லை. எனவே இது கொதிக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இங்கும் மனிதர்கள் வாழ முடியாது.
மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது.சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலை விலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ளகாற்றில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகிதஅளவுக்குத் தான் ஆக்ஸிஜன் உள்ளது.
இங்கே அதிகபட்ச வெப்பம் 87 டிகிரிசென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் மைனஸ் 17டிகிரியும் ஆகும். இதனால்இங்கும் மனிதன் வாழ முடியாது.
ஜூபிடர் எனும் வியாழன் கோள் சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ. தொலைவில்உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது.
மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கும் மனிதன் வாழ முடியாது.
பறக்கும் தட்டு (கிராபிக்ஸ் படம்)
சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ. தொலைவில்உள்ளது. இங்கு எப்பொருளும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரிசென்டிகிரேட் வெப்பமே உள்ளது.
யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கி.மீ. தொலைவிலும் நெப்டிய+ன்கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவிலும் புலூட்டோ கிரகம்சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில்கற்பனை செய்ய முடியாத கடுங்குளிர் நிலவுகின்றது. எனவே இவற்றிலும் மனிதர்கள் வாழ முடியாது.
பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர் காற்று எதுவும் இங்கு இல்லை. பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும் இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும்.சூரியனிலிருந்து 15கோடி கி.மீ. தொலைவிலுள்ள ப+மியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்.
சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.
மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும் குளிரும் பூமியில் மட்டுமேஉள்ளது. சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கிவிடும்.
சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். உயிர் வாழ அவசியமான காற்றும் ப+மியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில் அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக் கூடாது.
அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனி லிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடைகுளிர் வசந்தம் மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன. வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது.
நவீனரக போர் விமானம் - இதர போர் விமானங்களுடன்
இறைவன் சொன்ன வார்த்தைகள் விஞ்ஞானமே தோற்றுப் போகும் அளவு மிகவும் உருதியானதாக உள்ளது.ஏன் எனில் மனிதன் சுகமாக தனது வாழ்வை இந்தப் பூமியில் மாத்திரம் தான்கழிக்க முடியும் என்பது முக்காலமும் அறிந்த இறைவன் விதித்த முறையாகும்.
ஆக எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டாலும் கடைசிவரை மனிதன் இந்த பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் ஒரு சில நாட்கள் மாத்திரம் தான் எடுத்துச் செல்லும் ஆக்சிஜனைப் பயன் படுத்தி மற்ற கோள்களில் தங்க முடியும் (இவ்வுலக படைப்பை ஆராயவும்,இதிலிருந்து படிப்பினை பெறவும்)அது தவிர பூமியில் வாழ்வதைப் போல் வாழ இயலாது என்பது தெளிவாகி விட்டது.
விண்ணில் உயிரினங்கள் வாழ்கிறதா?
பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்று திருமறை வசனம்தெரிவித்தது விஞ்ஞானமும் அதனை உருதிப்படுத்தியது.ஆனால் வின்னில் மனிதனால் வாழ முடியாதே தவிர அங்கு சில உயிரினங்கள் வாழ்கின்றன என்று விஞ்ஞானம் ஊகிப்பதை திருமறை மறுக்கவில்லை.
பூமியல்லாத மற்ற இடங்களில் மற்ற சில உயிரினங்கள் வாழத்தான் செய்கின்றன என்று திருமறையில் இறைவனே குறிப்பிடுகிறான்.(ஆனால் பறக்கும் தட்டு தொடர்பான உயிரினங்கள் பற்றிய செய்திகள் பொய்யானவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்)
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும் போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்(42:29)
மேற்கண்ட வசனத்தின் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் என்ற வாசகத்தின் மூலம் பூமி அல்லாத மற்ற இடங்களில் நமது விஞ்ஞானத்தினால் இது வரை கண்டு பிடிக்காத (அறிவியல் வளர்ச்சியின் மூலம் பிற்காலத்தில் கண்டு பிடிக்கலாம்) உயிரினங்களை இறைவன் படைத்திருக்கும் செய்தியை தெளிவாக குறிப்பிடுகிறான்.
துருவப் பிரதேச ஆய்வின் போது செவ்வாயில் இருந்து விழுந்ததாக சொல்லப் பட்ட பனியைப் பற்றி ஆய்வு செய்யப் பட்டதில் அதன் உள்ளே இருந்த பாசிலைப் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்.அந்த பாசிலைப் பற்றிய செய்திகள் உண்மையானதாக இருப்பின் திருமறையின் இவ்வசனத்தை விஞ்ஞானம் உருதிப் படுத்திய பட்டியலில் முதன் முதலில் இந்தப் பாசிலைப் பற்றிய செய்தியே இடம் பிடிக்கும்.
இந்தப் பாசிலைப் பற்றிய செய்தி செவ்வாய் மற்றும் அதைப் போன்ற மற்ற கோள்களிலும் சூட்சும உயிரினங்கள் (Micro-Organism) இருப்பதாகவே கூறுகின்றன.
உதாரணமாக மனிதனாகிய நாம் கரிமம் அடிப்படையிலான உயிரினமாக (Cabom Based Organism)படைக்கப் பட்டுள்ளோம்.இதே போல இந்தப் பேரண்டத்தின் மற்றக் கோள்களில் சிலிக்கான் (Silicon) அல்லது கந்தகம் (Salphur) அல்லது அதைப் போன்ற வேறு தனிமங்களை அடிப்படையாகக் கொண்ட உயிரினங்கள் இருக்கலாம்.ஆனால் அப்படிப் பட்ட கோள்களில் புவிவாழ் உயிரினங்களாகிய நாம் ஒரு போதும் கண்டிப்பாக வாழ முடியாது என்பது தெளிவான விஷயமாகும்.
எது எப்படியோ விஞ்ஞானம் சொல்கிறதோ இல்லையோ முக்காலமும் அறிந்த இறைவன் பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்றும் பூமியல்லாத மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்றும் தெளிவாக சொல்லியுள்ளான் இதுவே நமது நம்பிக்கைக்கு போதுமான ஆதாரமாகும்.
விண்வெளியில் ஆயிரகணக்கான செயற்கைகோள்கள் உலாவந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏற்படும் மாற்றங்களை பூமிக்கு அனுப்பிகொண்டிருகிறது. எதிலுமே இதுவரை வேற்று கிரகவாசிகளின் புகைப்படமோ , அவர்கள் பயன்படுத்தும் வாகனமோ சிக்கவில்லை(!)
இந்த வெள்ளை நிறத்தில் வந்து போவதை வேற்றுகிரக வாசி என்று எப்படி சொல்கிறீர்கள் ?