Saturday 26 January 2013

முன்று காலிமனைகள் விற்பனைக்கு உள்ளது


அஸ்ஸலாமு அலைக்கும் அவசர உதவி அன்பான சகோதரர்களே அண்ணாநகர் கிளைக்காக இடம் வாங்குவது சம்மந்தமாக அதற்கான முன்தொகை கொடுக்கும் நாட்கள் குறைவாக இருப்பதால்  நமது அண்ணாநகர் கிளை  சார்பாக  முன்று காலிமனைகள்   விற்பனைக்கு  உள்ளது இதணனை அவசரமாக வாங்குவதற்கு முன்வரும் சகோதரரர்கள் சகோதரரர் கிளை தலைவர் சகோ .ஆதில் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் தொடர்பு என் 
9894269762.

மனைகளின் விவரம் :
பாருக் நகர் -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சளையிளுரிந்து 200 அடியிலே பிளாட் அமைந்து உள்ளது ,

விநாயக நகர் - அண்ணா நகர் 9 தெருவின் பக்கத்தில் உள்ளது

ஹிவே சிட்டி : கில் அன்னைகரை திருவண்ணாமலை,முருகையன் மேல்நிலை பள்ளியின் அருகமையில் அமைந்து உள்ளது ...

வாங்குவதற்கு முன்வரும் சகோதரரர்கள் சகோதரரர் கிளை தலைவர் சகோ .ஆதில் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் தொடர்பு என்
9894269762.

தவ்ஹீத் நகர் கிளை சார்பாக புரஜெக்டர் ப்ரோக்ராம்

26-01-2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத்  நகர் கிளை சார்பாக புரஜெக்டர் மூலம். பாடல்கள் வணக்கம் ஆகாது .என்ற தலைப்பில் திரையிடப்பட்டு தாவா செயப்பட்டது இதில் 100கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் அல்ல்ஹம்து லில்லாஹ் . 

Thursday 24 January 2013

திருவண்ணாமலை மாவட்டம் நக்கீரன் இதழை அழைத்து பகிரங்க அரைகுவல்


24-1-2013 அன்று திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக நக்கீரன் இதழை அழைத்து பகிரங்க அரைகுவல் போஸ்டர் ஒட்டப்பட்டது 

சமுதாய செய்தி திருவண்ணாமலை மலை மாவட்டம் அண்ணாநகர் கிளை

20-01-2013 திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை  சார்பாக புகையால் ஏற்படும் தீமை என்ற தலைப்பில் விழிபுனர்வு பேன்னர் வைக்கப்பட்டது 

”விஸ்வரூபம் படத்தை கேரளாவில் தடைசெய்ய வேண்டும்” , TNTJ கேரள மண்டல பத்திரிக்கை செய்தி!


விஸ்வரூபம் படத்திற்கு அரசு தடை விதிக்கவேண்டும் என நேற்று (23-1-2013) தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் கேரளா மண்டலம் சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது.
இந்திய வரலாற்றிலேயே இது போன்ற ஒரு திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும் என அந்த செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி கேரள பத்திரிக்கைகளில் வெளியானது.

புதுவையில் விஸ்வரூபம் படத்தை தடை செய்யக் கோரில் முதல்வரை நேரில் சந்தித்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்!


புதுவையில் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யக் கோரி நேற்று (23-1-2013) புதுவை முதல்வர் மற்றும் Senior Superintendent ஆகியோரை நேரில் சந்தித்து புதுவை TNTJ நிர்வாகிகள் புகார் கடிதம் வழங்கினர்.
Print This page

”டேம் 999” படத்தின் தடையை நீக்க முடியாது – வழக்கை டிஸ்மிஸ் செய்த சுப்ரிம் கோர்ட்!


999 படத்துக்கான தடையை நீக்க மறுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தடையை நீக்கக் கோரும் தயாரிப்பாளர் சோகன்ராயின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. படம் தயாரிக்கும் போது மக்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். முல்லைப்பெரியார் அணை உடைவது போன்ற காட்சி உள்ளதால் தமிழக அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
-தினகரன் 24-1-2013
Print This page

விஸ்வரூபம் படத்தை இந்திய அளவில் தடை செய்ய அவசர தந்தி அனுப்ப வேண்டிய வாசகம்:


To,
Primister
Soniya Gandhi
Manish thivari
Sushil kumar Shinde
Request you to take necessary action to ban Viswaropam movie which degrade Islam, hurts Muslims and disrupts communal harmony, it’s already banded by Tamil Nadu government, so please ban Viswaropam movie across the country
To
Mamtha
Mulayam
Request you to take necessary action to ban Viswaropam movie which degrade Islam, hurts Muslims and disrupts communal harmony, it’s already banded by Tamil Nadu government, so please ban Viswaropam movie in your state
To
Lalu Prasad yadav
Request you to raise your voice to ban Viswaropam movie which degrade Islam, hurts Muslims and disrupts communal harmony, it’s already banded by Tamil Nadu government, so please support to ban Viswaropam movie across the country.

Address:
The Prime Minister’s Office
South Block, Raisina Hill,
New Delhi,
India-110 101.
Telephone: 91-11-23012312.
Fax: 91-11-23019545 / 91-11-23016857
Smt. Sonia Gandhi
10, Janpath
New Delhi.
Tel. (O) : 23792263, 23019080
Tel. (R) : 23014161, 23014481
Fax : 23018651
Manish Tawary
C – I/3, Lodhi Garden,
New Delhi – 110 003
Tels. (011) 24644627, 24644628
Fax.(011) 24658384
Sushilkumar Shinde
North Block ,
New Delhi-110001
New Delhi-110003
+91 11 23092462
+91 11 23094686
+91 11 23094221 (Fax)
Mamata Banerjee
C-4, M.S. Flats, B.K.S. Marg,New Delhi-110 001
Phone    011-23722975,011-23381213,011-23386645,033-24753000
Fax 011-23319555,011-23387333,033-24540880
Mulayam
16, Ashoka Road,New Delhi – 110 001
011-23736300,0522-2235477
Lalu
25, Tughlak Road,New Delhi -110 011
Phone 0612-2203067
மற்ற அனைத்து துறை அமைச்சர்களின் முகவரி தொலைபேசி எண்களை அறிய :http://www.sarkaritel.com
Print This page

”படத்தை தயாரிப்பவர்கள் சமூக அக்கரையுடன் நடந்து கொள்ள வேண்டும்” தடையை வரவேற்றுள்ள இயக்குனர் சீமான்!


விஸ்வரூபம் திரைபடத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை வரவேற்றுள்ளார் நகடிரும் இயக்குனருமான சீமான். சினிமாக்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரப்பதையே ஆண்டு ஆண்டுகளாமாக வழக்கமாக்கி வருகின்றனர். இந்த போக்கை சினிமாத் துறையினர் மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சீமான் இதை தெரிவித்துள்ளார்.
படத்தை தயாரிப்பவர்கள் சமூக அக்கரையுடன் நடந்து கொள்ள வேண்டும்,துப்பாக்கி படத்திலேயே இது போன்று பிரச்சனை கிழம்பியது , பிரச்சனை வரும் என்று தெரிந்தே கமல் இதை செய்திருக்கின்றார் எனவும் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
திரைத்துறையில் உள்ள சக இயக்குனரே தமிழக அரசின் தடையை வரவேற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Print This page

விஸ்வரூபம் படம் துபையில் வெளியாகவில்லை!


முஸ்லிம்களையும் , இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள கமல் இயக்கி தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று (24-1-2013) துபையில் வெளியாக இருந்து விஸ்வரூபம் படத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. National Media Council அதிகாரிகள் இது குறித்து கூறுகையில்
”இந்த படத்தில் முஸ்லிம்கள் கொலை செய்வது போன்றும் குண்டு வைப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது இது மிகவும் சென்சிடிவ் ஆன விசயம், இந்த படத்தை நாங்கள் இன்னும் review செய்து முடிக்கவில்லை இது குறித்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்யப்படும்”
எனக் கூறியுள்ளனர்.
படத்தை தயாரித்தவனுக்கு இது பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணம் தின்னி பிணங்களான கூத்தாடிகள் தங்களது கல்லாவை நிறப்புவதற்கு முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் போக்கை வழக்கமாக்கி வருகின்றனர்.
இறைவனது கிருபையால் அது போன்ற கூத்தாடிகளுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டு விட்டது!..
இதில் ஒரு வருத்தமான விசயம் என்வெனில் ஜனநாயக நாட்டில் உள்ள நமது தமிழ்நாட்டிலேயே இந்த படத்தை தடை செய்விட்டனர். ஆனால் இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லப்படும் துபையில் அதை இன்னும் review செய்து கொண்டிருக்கின்றார்களாம்…


Print This page

Wednesday 23 January 2013

”விஸ்வரூபம் படம் எங்கும் ஓடாது..!” சென்னை முழுவதும் கண்டன போஸ்டர்!


இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கேவலமான முறையில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து ”விஸ்வரூபம் படம் எங்கும் ஓடாது..!” என்ற கண்ட போஸ்டர் இன்று (23-1-2013) சென்னை முழுவதும் ஒட்டப்பட்டது.

விஸ்வரூபம் படத்தை தடை செய்த தமிழக அரசிற்கு நன்றி – பத்திரிக்கை செய்தி!


பத்திரிக்கை செய்தி
தமிழக அரசுக்கு நன்றி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை ஏற்று சிறுபான்மையினரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்த தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியையும், நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துக் கொள்கின்றது.
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
பொதுச் செயலாளர்
23.01.2013
Print This page

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை!


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை!
தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலி! அல்ஹம்துலி்ல்லாஹ்!
சற்றுமுன்பு விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலியாக இந்த அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இன்று மதியம் 1.30 மணியளவில் டிஎன்டிஜேவின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் யூசுப், மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோரை நேரில் சந்தித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யக்கோரி நேரில் வலியுறுத்தினர்.
இந்த திரைப்படம் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது என்று வந்த செய்திகளைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுக்கு கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினார்.
இந்திய வரலாற்றிலேயே இது போன்ற ஒரு திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால், அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்தது.
சிலர் இந்த திரைப்படம் வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் கெடும் என்று சொல்லி வந்தனர். ஆனால் இந்த திரைப்படத்தை வெளியிடுவதால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் சமூக நல்லிணக்கம் கெடும் என்பதைவிட சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதுதான் பிரதான விஷயம் என்பதையும், எவ்வளவுதான் ஜனநாய ரீதியாக போராட்டங்களை நடத்தினாலும் சிலர் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதைத்தான் அராசங்கம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நமது நிர்வாகிகள் உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரிடரித்தில் விளக்கினர்.
உள்துறைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் மற்றும் உயர்அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் நமது வாதங்களைக் கேட்டனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகளுக்கு அதிக அக்கரை இருந்ததை இந்த சந்திப்பின்போது உணர முடிந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு நன்றி!
சிறுபான்மையினரது கோரிக்கையை ஏற்று அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்த தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியையும், நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துக் கொள்கின்றது.
உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து TNTJ கொடுத்த கடிதம்: http://www.tntj.net/128361.html
திரைப்படத்தை கண்டித்து சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்:http://www.tntj.net/128369.html
Print This page

விஸ்வரூபம் திரைப்படத்தை தடைசெய்யக்கோரி உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரிடம் டிஎன்டிஜே நேரில் வலியுறுத்தல்!


முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதை தடைசெய்யக்கோரி இன்று டிஎன்டிஜேவின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் யூசுப், மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கேவலமான முறையில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படுமேயானால் தமிழகத்தில் மிகப்பெரிய அளவிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதையும் உள்துறைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோரிடத்தில் 1மணிநேரத்திற்கும் மேலாக விளக்கி கூறப்பட்டது.
உள்துறைச் செயலாளர் மற்றும் உயர்அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் நமது வாதங்களைக் கேட்டனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகளுக்கு அதிக அக்கரை இருந்ததை இந்த சந்திப்பின்போது உணர முடிந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
கீழ்க்கண்ட மனு கொடுக்கப்பட்டது
தடை செய்யப்படவில்லை எனில் 25-1-2013 அன்று அனைத்து திரையரங்கு முன்பும் தவ்ஹீத் ஜமாஅத் முற்றுகைப் போராட்டம் நடத்த கமிஷனரிடம் அனுமதி கேட்டு வழங்கப்பட்ட கடிதம்:
Print This page

Tuesday 22 January 2013

“விஸ்வரூபம் திரைப்படம்” – போஸ்டர் வாசகம்


விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில்

எங்கும் ஓடாது!


இவன் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – மாவட்டம்
Print This page

“விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு


இது குறித்து தமிழகம் முழுவதும் ஒட்ட வேண்டிய போஸ்டர் வாசகத்திற்கு  Click Here
நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.
அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)
இது குறித்து தமிழகம் முழுவதும் ஒட்ட வேண்டிய போஸ்டர் வாசகத்திற்கு  Click Here
Print This page

காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு மாவட்டம் சார்பாக குர் ஆன் மற்றும் மாமனிதர் நபிகள்நாயகம் புத்தகங்கள்

21-01-2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசி அவர்களை சந்தித்து இறைவேதம் ;குர்  ஆன்  மற்றும் மாமனிதர் நபிகள்நாயகம் புத்தகங்கள் மாவட்ட தலைவர் ஹயாத் பாஷா வழங்கினர் 

அண்ணாநகர் கிளை சார்பாக புரஜெக்டர் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்

20-01-2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக புரஜெக்டர் மூலம் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் திரையிடப்பட்டது   உரை :அல்தாபி 

Sunday 20 January 2013

பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன?


பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன?

இஸ்லாமிய தேசம், பல நபிமார்களின் பிறப்பிடம், புனிதமிக்க மஸ்ஜிதுல் அக்ஸாவின் அமைவிடம் போன்ற பல சிறப்புகளைப் பெற்ற தேசம் தான் பாலஸ்தீனம். ஆனால் இன்று யுத்த தேசம், பயங்கரவாத பூமி, தீவிரவாதிகளின் அமைவிடம் என்று பலரும் பலவிதமான பெயர்கள் மூலம் பாலஸ்தீனத்தை அழைத்து வருகின்றார்கள்.
இஸ்ரேல் என்ற மனநோயாளியின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து பாலஸ்தீனம் என்ற நாட்டின் கால்வாசிப் பகுதிதான் இன்று முஸ்லிம்களின் வசம் இருக்கின்றது. ஆக்கிரமிக்க வந்தவன் நாட்டை பிடித்து தான் ஒரு நாடு என்று அறிவித்திருக்கின்றான். ஆனால் புனித பூமியின் சொந்தக்காரர்களோ சொந்த பூமியில் அகதி வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் அங்கு நடப்பது என்னவென்பது பெரும்பாலும் சரியான தகவலாக வெளியுலகுக்கு தெரியவருவதில்லை. தெரியவரும் செய்திகள் கூட பரிபூரணமானதா இல்லை.
வரலாற்றின் பின்னனி.
பாலஸ்தீனம் என்று இன்று நாம் அழைக்கும் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று யூதர்கள் உரிமை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் வரலாற்றைப் புரட்டிப் படிக்கும் போது பாலஸ்தீனம் பல தலைமுறையைக் கடந்து வந்திருந்தாலும் நபிமார்களின் பூமி, இஸ்லாம் வளர்ந்த இடம் என்ற அடிப்படையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இடமாக இருக்கிறது.
பாலஸ்தீன வரலாற்றை பின்னோக்கி சென்று ஆய்வு செய்தால் அதன் முதல் குடிமக்களாக ‘ஸாபியீன்கள்” என்ற குழுவினர்தான் அங்கு முதலாவது குடியினராக வாழ்ததாக வரலாறு சொல்கின்றது. அவர்களுக்குப் பின் ‘யபூசிய்யூன்கள்” வாழ்கின்றார்கள். யபூசிய்யூன்களைத் தொடர்ந்து எகிப்திய ஆட்சியாளர்கள் பாலஸ்தீனத்தை கைப்பற்றி ஆட்சி செய்கின்றார்கள். இதன் பின்னர் தான் ‘பாலஸ்தீனிய்யூன்கள்” என்றொரு கூட்டத்தினர் அங்கு வசிக்க ஆரம்பிக்கின்றார்கள் இவர்களின் பெயர் மூலம் தான் பாலஸ்தீனம் என்ற நாடு அழைக்கப்படுகின்றது.
பாலஸ்தீனிய்யூன்களுக்கு பின் பனூ இஸ்ரவேலர்களும் அவர்களைத் தொடர்ந்து பாபிலோனியர்கள் (ஈராக்கியர்கள்), இவர்களைத் தொடர்ந்து கிரேக்கர்கள் பாலஸ்தீனத்தை ஆட்சி செய்தார்கள். இவர்களுக்கு பின் உரோமர்கள் பாலஸ்தீன ஆட்சியை கைப்பற்றுகின்றார்கள். இவர்களின் ஆட்சி கி.மு 63ல் ஆரம்பித்தது. இந்த ஆட்சி உமர் (ரலி) அவர்கள் பாலஸ்தீனத்தை கைப்பற்றும் வரை தொடர்ந்தது.
சுமார் 3000ம் படை வீரர்களை கொண்டு பாலஸ்தீனத்தை கைப்பற்றிய உமர் (ரலி) அவர்களுக்குப் பின் சுமார் 1000 வருடங்கள் முஸ்லிம்களின் ஆட்சி (1917 வரை) பாலஸ்தீனில் நிலைபெற்றிருந்தது. இந்த ஆயிரம் வருட முஸ்லிம்களின் ஆட்சியில் ஒரு யூதனுக்குக் கூட இஸ்லாமியர்கள் அநியாயம் செய்தார்கள் என்ற தகவல் வரலாற்றில் கிடையாது.  இதன் பின் 1ம் உலக மகா யுத்தத்தின் பின் கமால் அப்துந் நாசரின் இஸ்ரேல் ஆதரவுப் போக்கினால் பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி யூதர்களுக்கு செல்கின்றது. இப்படியாக பல ஆட்சி மாற்றங்களுக்குற்பட்டு வந்த பாலஸ்தீனம் இறுதியாக தனது பெரும்பகுதியை இஸ்ரேல் வசம் இழந்து நின்கின்றது.
இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் அவர்களின் புரட்சி.
இந்த காலப் பகுதியில் தான் ‘இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம்” அவர்கள் பாலஸ்தீன மண்னை யூதர்களிடம் இருந்து மீட்டெடுப்பதற்காக புரட்சிப் படையொன்றை ஆரம்பித்து போராட்டங்களையும் முன்னெடுத்தார். இந்தக் காலப்பகுதியில் தான் யூதர்கள் தங்கள் திட்டப்படி மீதமுள்ள பாலஸ்தீனத்திற்குள்ளும் இஸ்ரேலியர்களை நுழைப்பதற்கு பாலஸ்தீனில் இடம் வாங்கும் படலம் ஆரம்பிக்கின்றது. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் யூதர்கள் பெருமளவு பணம் செலவு செய்து இடங்களை வாங்கியதின் மூலம் முஸ்லிம் குடியிருப்புகளுக்குள் தங்கள் மக்களை அதிகளவில் நுழைத்தார்கள்.
யூதர்களின் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த நேரமே முஸ்லிம் போராட்டக் குழுக்கள் இது தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்தன ஆனால் அவற்றை யாரும் பெருமளவில் செவிமடுக்காததின் விளைவு இஸ்லாமியர்களுக்குள் யூதர்கள் சாதாரணமாக கலந்துவிட்டார்கள்.
இந்த நடவடிக்கைகளின் வெற்றி காரணமாக 1948 ல் முஸ்லிம் நாடுகளின் பலத்த எதிர்பையும் மீறி இஸ்ரேல் ஒரு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் பக்க துணையாக இருந்தன.
1948 வரை போராட்டக் குழுக்களாக இயங்கிய இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டவுடன் தனது போராட்டக் குழுக்களை ஒன்றிணைத்து ஒரு இராணுவத்தை ஏற்படுத்தியது. இராணுவ பலம் மூலமாக பாலஸ்தீனர்கள் மீது தனது மிலேச்சத் தனமாக தாக்குதல்களை தொடர்ந்தும் முன்னெடுத்தது.
ஹமாஸ் உருவாக்கம்.
1967 காலப்பகுதியில் பாலஸ்தீனத்தின் பெரும்பகுதி இஸ்ரேல் வசமானது. இஸ்ரேலின் தொடர் ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக அஹ்மத் யாசீன் அவர்கள் ஹமாஸ் என்ற போராட்டக் குழுவை ஆரம்பித்தார்.(தற்போதைய பாலஸ்தீனத்தின் ஆட்சி ஹமாசின் வசம் தான் இருக்கின்றது).
ஹமாஸ் மூலமாக பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்த அஹமத் யாசீன் அவர்கள் ஹமாஸை பாலஸ்தீனத்தின் ஒரு அரசியல் கட்சியாகவும், இராணுவ மயப்படுத்தப்பட்ட சிறப்பான ஒரு போராட்ட படையணியாகவும் தயார் படுத்தினார். ஹமாஸ் தவிர பத்தாஹ் என்ற அரசியல் கட்சியும், இன்னும் பல போராட்டக் குழுக்களும் பாலஸ்தீனத்திற்குள் இஸ்ரேலுக்கு எதிராக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் ஐ.நா சபை உள்ளிட்ட மேற்கு ஆதரவாளர்களின் கருத்துப்படி சொந்த நாட்டுக்காக போராடும் இவர்கள் தீவிரவாதிகளாகவும். முஸ்லிம்களின் நிலத்தை அபகரித்த யூதர்கள் உலக பாதுகாவல்களாகவும் பார்க்கப்படுகின்றார்கள்.
மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு எதிரான போர்.
பாலஸ்தீன் மீதான யூதர்களின் தொடர் தாக்குதல்களின் ஒரு அங்கம் தான் மஸ்ஜிதுல் அக்ஸாவை உடைக்க வேண்டும் என்பதும் அக்ஸா அமைந்திருக்கும் இடத்தில் ‘ஹைக்கல் சுலைமான்” என்ற பெயரில் ஒரு சிலையை நிறுவ வேண்டும் என்பதுமாகும்.
முஸ்லிம்களின் புனித பூமியில் அமைந்திருக்கும் புனிதத் தளமான அக்ஸாவை அழிப்பதற்கு இவர்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால் அல்லாஹ்வினால் பரக்கத் செய்யப்பட்ட பகுதியாக திருமறைக் குர்ஆன் அக்ஸா அமைந்துள்ள பகுதியைப் பற்றி பேசும் போது தெளிவாக அறிவிக்கின்றது.
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப் புறத்தை பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளை காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். (அல் குர்ஆன் 17:01)
மஸ்ஜிதுல் அக்ஸாவுக்குள்ள சிறப்புகளில் ஒன்று உலக வரலாற்றில் இரண்டாவதாக கட்டப்பட்ட பள்ளியாக இது இருப்பதாகும். (புகாரி :3366)
புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட பள்ளிகளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா என்று பாலஸ்தீன மண்ணில் அமைந்திருக்கும் அக்ஸாவையும் சேர்த்தே குறிப்பிட்டார்கள். (புகாரி : 1189)
பொதுவாகவே முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் எல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக பலவிதமான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது. அந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்காகவும் நாம் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்க வேண்டும். ஆனால் பாலஸ்தீன மக்களைப் பொருத்த வரை அவர்களுக்காக நாம் குரல் கொடுப்பதற்கு என்பது ஒன்று முஸ்லிம் சகோதரர்கள் என்பதற்காக மற்றொன்று பாலஸ்தீனம் இஸ்லாமிய மார்க்கத்துடன் ஒன்றிய ஒரு பகுதியாகும். ஆதலால் மற்ற பகுதிகளை விட பாலஸ்தீனத்திற்காக முஸ்லிம்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
தற்போது நடந்தது என்ன?
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இதற்கு முன்பும் பல தடவைகள் இஸ்ரேல் மீறியதைப் போல இம்முறையும் ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை ஆரம்பித்தது. இதற்கு பதிலடியாக பாலஸ்தீன போராட்டக் குழுக்களும் தங்கள் தாக்குதல்களை முன்னெடுத்தார்கள். இதில் ஹமாஸ் நடத்திய போராட்டம் பல தரப்பினராலும் வெகுவாகக் கவணிக்கப்பட்டு பேசப்பட்டது.
ஹமாஸின் இராணுவத் தளபதி அஹமத் ஜபாரி பயணம் செய்த காரின் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஜபாரி ஸ்தளத்திலேயே கொல்லப்பட்டார். ஜபாரியின் படுகொலையைத் தொடர்ந்து ஆரம்பித்த இரண்டு பக்க தாக்குதல்கள் சுமார் எட்டு நாட்கள் நீடித்தது. 36 மஸ்ஜிதுகள், 25 பாடசாலைகள், ஒரு வைத்தியசாலை, 2 விளையாட்டு அரங்குகள், 2 பாலங்கள், 100 வீடுகள் உட்பட கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பாலஸ்தீன அரசாங்கத்தின் கட்டிடங்கள் பலதும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளதுடன், ஹமாஸின் தலைமையகமும் தாக்குதலுக்கு உள்ளானது. அனைத்தையும் தாண்டி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 200 க்கு மேற்பட்ட அப்பாவிகளது உயிர்கள் அரக்கத்தனமாய் காவுகொள்ளப்பட்டுள்ளதோடு, 1500 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கின்றனர். இவை யாவும் உத்தியோக பூர்வ அறிக்கைகள் மாத்திரமே! உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகளின் பிரகாரம் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்களும், சொத்துக்களுக்கான சேதங்களும் இதனைவிட பன்மடங்கு அதிகமாகும்.
1948 வரைக்கும் உலக வரை படத்தில் இல்லாத இஸ்ரேல் என்ற நாடு, 1948 க்குப்பின்னர் உலகின் ஜனநாயகவாதிகள் நாம் தாம் என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கூட்டினைவால் கருத்தரித்து, தப்பான வழியில் பெற்றெடுக்கப்பட்ட ஒரு விபச்சாரக் குழந்தை என்பதை வரலாற்று ஆய்வாளர்களால் மறுதலிக்க முடியாது.
முஸ்லிம்களுக்கு உரித்தான பாலஸ்தீன மண்ணில் பலவந்தமாய் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது மட்டுமன்றி, எஞ்சியுள்ள காஸா நிலப்பரப்பையும் கபளீகரம் செய்து, முழுமையான இனச்சுத்திகரிப்பொன்றை அரங்கேற்றுவதோடு, மத்திய கிழக்கின் விரிந்த நிலப்பரப்பில் யூதர்களின் கனவு இராச்சியமான ‘அகன்ற இஸ்ரேலை’ நிறுவுவதற்கான முயற்சிகளில் ஒன்றே அண்மைய தாக்குதலும் ஆகும்.
ஹமாஸின் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவது என்பது இஸ்ரேலின் வழமையான ஒரு பணியாகவே இருக்கிறது. இதற்கு முன்பும் பல முறை ஹமாஸின் தளபதிகள் கொல்லப்பட்டார்கள்.
1996ல் பாலஸ்தீன போராளி யஹ்யா அய்யாஷ் கொலை செய்யப்பட்டார். அதற்குப் பின் சில நாட்கள் சிறு சிறு தாக்குதல்களுடன் நடை பெற்ற பாலஸ்தீன போராட்டம் 2002 ஜுலை ஸலாஹ் ஷஹாதா என்ற ஹமாஸின் இராணுவ தளபதியின் மரணத்தில் இருந்து போராட்டம் மீண்டும் சூடுபிடித்தது.
இஸ்ரேலிய இரானுவம் பாலஸ்தீனத்திற்குள் அத்துமீறுவதும், படுகொலைகளை நடத்துவதும், அதற்கு பதிலடியாக ஹமாஸ் தாக்குதல் நடத்துவதும் தொடர்;ந்த நடந்து கொண்டிருந்தது. இஸ்ரேலின் படுகொலைகளின் அடுத்த கட்டமாக ஹமாஸின் தலைவரும் நிறுவனருமான ஷேக் அஹ்மத் யாசின் 2004 மார்ச் மாதம் பஜ்ர் தொழுகை முடித்து வெளியில் வரும் போது ராக்கட் தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார்.
சிறு வயதில் இருந்து பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஷேக் அஹ்மத் யாசின் உடல் ஊனமுற்றவராக இருந்தாலும் மனதளவில் பலம் பெற்றவராகவே காணப்பட்டார். தன மனபலத்தினாலும், உள உறுதியினாலும் ஹமாஸை ஒரு வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். ஷேக் அஹ்மத் யாசின் கொலை செய்யப்பட்ட பின் ஹமாஸின் புதிய தலைவராக அப்துல் அஸீஸ் ரன்திஸி தெரிவு செய்யப்பட்டார்.
அப்துல் அஸீஸ் ரன்திஸி தலைவராக தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குள் 2004 ஏப்ரல் மாதம் இஸ்ரேலின் ராக்கட் தாக்குதலில் அவரும் கொல்லப்பட்டார்.
2009 ஜனவரி மாதம் ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான நிஸார் ரய்யான் கொலை செய்யப்பட்டார். அதே மாதம் உள்துறை அமைச்சராக இருந்த ரியாம் படுகொலை செய்யப்பட்டார். இதற்குப் பின் தளபதிகள் மீதான தாக்குதல்கள் ஓரளவுக்கு நிறுத்தப்பட்டு பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இறுதியாக இராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரி 2012 நவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
இறுதியாக எகிப்தின் உதவியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இம்முறையும் நிரந்தர போர் நிறுத்தம் அமலுக்கு வரவில்லை. மாறாக தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சொந்த பூமியை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக துன்பப்படும் நமது பாலஸ்தீன உறவுகளுக்காக நமது இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போமாக என்று அனைத்து மக்களிடமும் வேண்டிக் கொள்கின்றோம்.
நன்றி rasmin  misc

வந்தவாசி கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாசி கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்
11.1.2013(வெள்ளிகிழமை) அன்று மாலை(6.30)மணியளவில்  நடைபெற்றது.
இதில் இமாம் முஸ்தாக் உரையாற்றினர்.

தக்லீத் (தனி மனித வழிபாடு) ஓர் ஆய்வு.

நமது வாழ்வும், நபித் தோழியர் வாழ்வும். – ஓர் ஒப்பீடு.

ஆணாயினும், பெண்ணாயினும் எவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு முறையான வாழ்கை வாழ்கின்றாரோ அவரே ஈருலகிலும் வெற்றியாளர். இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டதிட்டங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானவை என்றாலும், இன்றைய பெண்கள் தனக்கும் மார்க்கத்திற்கும் அறவே தொடர்பில்லை என்றளவுக்கு வாழ்ந்து வருகின்றார்கள். அநேகமான பெண்கள் தமது குழந்தைகளையும், வீட்டையும் பராமரிப்பதனால் தம்மால் தொழக் கூட முடியவில்லை என மாயக் கவலையுடன் செய்யும் பாவத்திற்கு நியாயம் கற்பிக்க முயல்கின்றனர்.
கணவனின் குதிரைக்காக வெகு தொலைவில் இருந்து தன் தலையிலேயே தீனியை சுமந்து கொண்டு வந்த கொள்கைப் பெண் அஸ்மா (ரலி) அவர்களும், தானும் இஸ்லாத்தை தழுவி தன் மகனுக்கும் போதித்த தியாகத் தாய் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் பெண் இனத்தை சார்ந்தவர்களே என்பதை நாம் மனதில் ஆழமாக பதித்துக் கொள்ள வேண்டும்.
ஸஹாபியப் பெண்மணிகள் மார்கத்திற்காக பல்வேறுபட்ட யுத்தங்களில் தாமும் களமிறங்கி போராடியது மட்டமல்லாது தனிப்பட்ட வாழ்க்கையில் இறையச்சத்துடன் வாழ மேற்கொண்ட முயற்சிகள் பொடு போக்கான பெண்களின், சாக்குப் போக்கான வார்த்தைகளுக்கு முற்றுப் முற்றுப்புள்ளி வைக்கின்றன.
குர்ஆனைப் பற்றி கேள்வியெழுப்பிய உம்மு ஸலமா (ரலி).
“ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?” என்று உம்மு ஸலமா (ரலி) கேட்ட போதுஇ திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது.
(நூல்: அஹ்மத் 25363)
குர்ஆனில் அதிகமான கட்டளைகள் ஆண்பாலில் இடம் பெற்றிருப்பதைக் கண்டு உம்மு ஸலமா (ரலி) அவர்கள் பெண்களுக்கு எவ்வித கட்டளைகளையும் இறைவன் இடமாட்டானா? என்று அல்லாஹ்வின் தூதரிடம் ஆர்வமாக கேட்ட செய்தியை மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகின்றது.
உம்மு ஸலமா (ரலி) அவர்களின் கோரிக்கைக்கு இணங்க அல்லாஹ் 33:35 வது வசனத்தையே இறக்கினான். தனக்கு குர்ஆன், சுன்னா தெரிய வந்தால் தானும் அது போல் வாழ வேண்டுமே என்பதற்காக மார்க்க பிரச்சாரங்களில் கூட கலந்து கொள்ளாத நம் பெண்மணிகளின் மத்தியில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் கேள்வி வியப்பை ஏற்படுத்துகின்றது. மார்க்கத்தில் கேள்வி கேட்டு அறிந்து பின்பற்ற வேண்டும் என்று ஸஹாபியப் பெண்மணிகள் கொண்ட கொள்கை ஆச்சரியமளிக்கின்றது.
வஹி நின்றதற்காக அழுத உம்மு அய்மன் (ரலி) அவர்கள்.
வாராந்தம் ஒரு முறை வீட்டில் யாசீன் சூராவை மாத்திரம் ஓதி, குர்ஆனுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்புள்ளது எனக் கருதும் பெண்களுக்கு இதோ உம்மு அய்மன் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரும் படிப்பினையிருக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் அபூ பக்கர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் ‘நம்மை உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்’ என்று கூறினார்கள். அவ்வாரே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாம் சென்ற போது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும் ‘ஏன் அழுகின்றீர்கள்? (நம்மிடம் இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு சிறந்ததாயிற்றே’ என்று கேட்டார்கள்.
அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள் ‘ அல்லாஹ்விடம் இருப்பதே அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹி) வருவது நின்று விட்டதே! (அதற்காகத் தான் அழுகின்றேன்)’ என்று கூறி அவர்கள் இருவரையும் அழச் செய்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்.
நூல் : (முஸ்லிம் – 4839)
அல்லாஹ்வின் தூதரின் தோழர்களையே அழ வைத்த சிறப்பு உம்மு அய்மன் (ரலி) அவர்களையே சாறுகின்றது. ஆகவே குர்ஆனைப் படித்து அதன்படி செயல்பட நாமும் முயற்சிப்போமாக!
நபியின் கட்டளையை மீறாத ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள்.
பிரிவு எனும் துன்பத்தை மனிதனால் தாங்கிக் கொள்வது கடினம். அதிலும் குறிப்பாக பெண்கள் அந்தத் துன்பத்திலிருந்து மீண்டுவர அவர்களுக்கு நெடுங்காலம் தேவை. மரண வீட்டில் கூட மூன்று நாள் பிந்தியும் ஒப்பாரி வைத்து அழுபவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். மையத்தின் உறவுக்கார ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் குறைந்தது பத்து நாட்களுக்காவது தாங்கள் புத்தாடை அணிவதையோ, நறுமணம் பூசுவதையோ அபத்தமாக கருதுகின்றார்கள்.
தமது சகோதரனை இழந்திருந்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர் நறுமணம் பூசிக் கொண்டு ‘இது எனக்குத் தேவையில்லை. ஆயினும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக் கூடிய பெண் தமது கணவரைத் தவிர வேறு எவரது மரணத்திற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. தனது கணவன் இழந்து விட்டால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் கூற நான் கேட்டுள்ளேன்’.
அறிவிப்பவர் : ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரலி)
(புகாரி – 1282)
தன் சகோதரனை இழந்துவிட்ட கவலை தன் மனதை ஆக்ரோஷித்தாலும் மூன்று நாட்களுக்கு மேல் கணவனைத் தவிர எந்த உறவுக்கும் துக்கம் அனுஷ்டிக்கக் தகாது என்ற நபியின் கட்டளைக்கு தான் மாற்றமாக நடக்கக் கூடாது என்ற காரணத்திற்காக  ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் நறுமணம் பூசிக் கொள்கின்றார்கள். மார்க்கம் முக்கியம் என்ற காரணத்தினால் தன் உறவின் மரணத்தைக் கூட பொறுமையுடன் ஏற்றுக் கொள்கின்றார்கள். ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள்.
இது போன்ற தூய பொருமையை இன்றைய பெண்களிடம் நம்மால் பார்க்க முடியுமா?
கொள்கைக்காக நாடு துறந்த பெண்மணிகள்.
அபூ ஸலமா (ரலி) அவர்கள் மற்றும் உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவினார்கள். எனவே எதிரிகளின் பல்வேறு தொல்லைகளினால் அல்லாஹ்வை நிம்மதியாக திருப்தியோடு வணங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளத்பட்ட உம்மு ஸலமா (ரலி) மற்றும் அவருடைய கணவரும் இஸ்லாத்திற்காகவே சொந்த ஊர், உறவு, செல்வம் அனைத்தையும் விட்டுவிட்டு ஆரம்பத்தில் அபீசீனியாவுக்கும், பின்னர் மதினாவுக்கும் ஹிஜ்ரத் செய்தார்கள். (அல் இஸாபா – 12061)
அதே போல் அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள் தன் கொள்கையை காப்பாற்றிக் கொள்ள இரண்டாவதாக அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்ற குழுவினருடன் அவர்களும் நாடு துறந்து சென்றார்கள். பிறந்து வளர்ந்த சொந்த பூமியை விட்டுவிட்டு ஹிஜ்ரத் செய்யக் காரணம் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு மாத்திரம் முழுமையாக செய்ய வேண்டும் என்பதேயாகும்.
அடுத்தவர்களைப் போன்று ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற பேராசையினால் தன் கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பி சீரழிவுக்குள்ளாகும் பெண்களுக்கு இந்த நபித் தோழியர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது.
நபிளான வணக்கங்களுக்கு ஆர்வம் காட்டிய பெண்மணிகள்.
அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை ஜானுக்கு ஜான் பின்பற்றக் கூடிய பெண்மணியாக அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.
‘யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்துக்கள் (உபரியான தொழுகை) தொழுவாரோ அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டதிலிருந்து அதை நான் ஒரு போதும் விட்டதில்லை.
அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி) அவர்கள்.
நூல் : முஸ்லிம் – 1319
மேலும் ஸைனப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் அதிக கரிசனை காட்டக் கூடியவர்களாக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்த போது இரண்டு தூண்களுக்கு இடையே நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருந்தது. ‘இந்த கயிறு எதற்கு?’ எனறு நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள் இது ஸைனபுக்கு உரியதாகும். அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்த கயிற்றில் சாய்ந்து கொள்வார்’ என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் ‘கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். ‘உங்களில் ஒருவர் உட்சாகத்துடன் இருக்கும் பொது தொழ வேண்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து விட வேண்டும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்.
நூல் : புகாரி 1150
சுன்னத்தான தொழுகைகளை மட்டுமல்லாது, சுன்னத்தான நோன்புகளையும் இப்பெண்கள் நோற்றுள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.
நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்த போது நபியவர்கள் என்னிடம் வந்தார்கள். ‘நேற்று நீ நோன்பு வைத்திருந்தாயா?’ என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். ‘நாளை நோன்பு நோற்க விரும்புகின்றாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு இல்லை என்றேன். இதை கேட்ட நபியவர்கள், ‘அப்படியானால் நோன்பை முறித்து விடு’ என்று சொன்னார்கள். நபியவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்துவிட்டேன்.
அறிவிப்பவர் : ஜுவைரிய்யா (ரலி) அவர்கள்.
நூல் : புகாரி 1986
ஹப்ஸா (ரலி) அவர்கள் நோன்பை விட்ட நிலையில் இறக்கவில்லை. (அதாவது கடைசி காலத்திலும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள்).
அறிவிப்பவர் : நாபிவு.
நூல் : தபகாத் இப்னு ஸஅத் : பாகம் 02 பக்கம் 86
இபாதத்களைப் பேணுகின்ற விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டி, அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றுவதில் கரிசனை காட்டிய ஸஹாபியப் பெண்மணிகளின் வாழ்க்கையில் நாம் பெற வேண்டிய படிப்பினைகள் அதிகமாகவே இருக்கின்றன.
அதிகம் அல்லாஹ்வை நினைவு கூர்ந்த அன்னை ஜுவைரிய்யா (ரலி) அவர்கள்.
ஆண்கள் உட்பட பெண்கள் பெரும்பாலானவர்கள் சுப்ஹ{த் தொழுகையை அலட்சியம் செய்பவர்களாகவே காணப்படுகின்றார்கள். இரவெல்லாம் வீனாக நேரத்தைக் கழிப்பதினால் பெண்களுக்க விடியும் நேரம் காலை 10 மணியையும் தாண்டுகின்றது. காலை நேரத்தில் தன் உம்மத்திற்கு பரக்கத்தை ஏற்படுத்து என பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனை காலைப் பொழுதின் சிறப்பைப் காட்டுகின்றது. அந்த நேரத்தை பயனுள்ள விதமாக கழித்த ஒரு பெண்மணிதான் அன்னை ஜுவைரிய்யா (ரலி) அவர்கள்.
நான் தொழும் பாயில் இருந்த போது நபியவர்கள் வெளியே சென்றார்கள். திரும்ப வந்த போது நான் அங்கேயே இருந்தததைப் பார்த்த நபியவர்கள் ‘நான் வெளியேறியதில் இருந்து இங்கேயே இருக்கின்றாயா?’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ‘நான்கு வார்த்தைகளை மூன்று முறை கூறினால் அது அந்த நன்மையைப் பெற்றுத் தரும்’. அவை சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அதத கல்க்கிஹி வரிழா நப்சிஹி வ ஸினத அர்ஷிஹி வ மிதாத கலிமாதிஹி (பொருள் : அல்லாஹ் தூய்மையானவன், அவனது படைப்புகளின் எண்ணிக்கையளவு, அவன் பொருந்திக் கொண்ட அளவு, அவனது அர்ஷின் தராசு அளவு, அவனது வார்த்தைகளின் அளவுக்கு அவனைப் புகழ்கின்றேன்). என்றார்கள்.
அறிவிப்பவர் : ஜுவைரிய்யா (ரலி) அவர்கள்.
நூல் : ஸஹீஹ் இப்னு ஹ{ஸைமா. – 753
அன்னை ஜுவைரிய்யா (ரலி) அவர்களின் வாழ்வில் கிடைக்கும் இந்தப் படிப்பினையை நமது பெண்களும் கடைப்பிடிக்குமிடத்து அதில் அதிக நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொள்ள முடியும்.
மார்க்கமுள்ள பெண்ணே தனது கணவனின் வெற்றிக்கு காரணமாக இருப்பாள்.
இதை நபியவர்களின் ஹதீஸில் இருந்து நாம் அறிய முடியும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
 1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவேஇ மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!  (புகாரி –5090)
மேற்கண்ட நபி மொழியில் திருமணம் முடிக்கத் தகுதியான பெண்ணைப் பற்றி நபியவர்கள் குறிப்பிடும் போது மார்க்கம் உள்ள பெண்ணை மணமுடிக்கும் படி ஏவுகின்றார்கள். காரணம் மார்க்கத்துடன் வாழும் ஒரு பெண்மணிதான் சுவர்க்க வாழ்வை நேசித்து அதற்காக தனது வாழ்வை அமைத்துக் கொள்வாள். அப்படிப் பட்ட பெண்களாக நாமும் வாழ்வதுடன், நமது பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும். அவள் தான் ஆணின் உண்மை வெற்றிக்கு காரணமாக அமைய முடியும். ஆதலால் இஸ்லாத்தை தெளிவாகவும் பிடிப்பாகவும் பின்பற்றும் மக்களாக அல்லாஹ் நம்மனைவரையும் ஆக்கிஅ ருள் புரிவானாக!
ஆக்கம் : ஷப்னா கலீல்
நேயர்களே உங்கள் கருத்துக்களை தயவு செய்து பதிவு செய்யுங்கள் 

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)

நபிவழி தொழுகை
நபி வழி தொழுகை வீடியோ
  • தொழுகை மற்றும் உளு செய்யும் முறை
  • செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ்
  • வீடியோ - TNTJ

பகிரங்க அறைகூவல் போஸ்டர் வாசகம்

பகிரங்க அறைகூவல் :
குற்றச் செயல்களுக்கு இஸ்லாம் வழங்கக்கூடிய தண்டனைகள் பிற்போக்கானவை என்று உளறும்
அதிமேதாவிகளே! அரைவேக்காடுகளே!
ஆனந்த விகடன் மற்றும் நக்கீரன் கும்பல்களே! மிருக புத்திரன்களே!
நீங்கள் சொல்வதில் உண்மையாளர்களாக இருந்தால், முஸ்லிம்களுடன் பகிரங்க விவாதம் செய்ய நீங்கள் தாயாரா?
அறைகூவல் விடுக்கின்றது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தமிழகத்தில் இன்று (20-1-2013) போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகத்தில் இன்று (20-1-2013)  அனைத்து பகுதிகளிலும் போலியோ சொட்டு முகாம் நடைபெற்று கொண்டிருக்கின்றது.. உங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து பொட்டுக் கொண்டு உங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்…

”இரவில் தனியாக ஒரு இளம் பெண்ணுடன் சுற்றிய பாய் பிரண்டை தான் முதலில் தூக்கிலட வேண்டும்” சுப்ரீம் கோர்ட் வக்கீல் மனோஹர்

டெல்லி மாணவியுடன் இரவில் தனியாக சுற்றிய பாய் பிரண்ட்
டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட வந்துள்ள 56 வயதுள்ள சுப்ரீம் கோர்ட் வக்கீல் மனோஹர் என்பவர் ”மாணவியை இரவு நேரத்தில் தனியாக அழைத்து சென்ற பாய் பிரண்டை தான் முதலில் துக்கிலிட வேண்டும் என பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்ததுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வக்கீல் மனோர் கூறுகையில் ”கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் எந்த பெண்ணும் நமது நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நான் கேள்வி பட்டதில்லை, கொள்ளை கூட்ட தலைவன் கூட கண்ணியத்துடன் இருக்கும் பெண்ணை தொடமாட்டான்” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாணவியின் பாய் பிரண்டின் காம உணர்ச்சியினால் தான் இந்த சம்பவமே நடந்துள்ளது. அவன் தான் அனைத்திற்கும் காரணம் அவனை தான் முதலில் தண்டிக்க வேண்டும் என வக்கீல் மனோஹர் கூறியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரெயில் பணியில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு

மத்திய மாநில அரசுடன் இணைந்து செயல்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணம் பல்வேறு துறைகளுக்கு ஆட்களை பணியில் சேர்க்க உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இதற்கு ஆன்லைன் பதிவு 19-1-2013 லிருந்து துவங்குகின்றது. chennaimetrorail.gov.in என்ற இணையதள முகவரில் விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 20-2-2013.
இது குறித்து முழு விபரம் அறிய Click Here to download Advt PDF
Print This page