Sunday 25 December 2011

எழுதி படிக்கும் குழந்தை அறிவாற்றல் மிக்க மாணவனாக வளரும்!! – ஆராய்ச்சி தகவல்


Children Writingநார்வே நாட்டின் ஸ்தவஞ்சர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆன்னி மான்ஜென் மற்றும் பிரான்சின் மார்செல்லி பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் ஜீன் லக் வேலே இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். இதற்காக இரு குழுக்களாக குழந்தைகள் பயன்படுத்தப்பட்டனர்.
புதிய வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. ஒரு குழு கையால் எழுதி படிக்கவும், மற்றொரு குழு கம்ப்யூட்டரில் டைப் செய்து படிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
ஒரு வார கால ஆய்வுக்கு பின், கையால் எழுதி படித்த மாணவர்கள் சிறந்த ஞாபக சக்தியுடன் வார்த்தைகளை நினைவு கூர்ந்தனர். ஆனால், கம்ப்யூட்டரில் டைப் செய்தவர்களால் வார்த்தைகளை ஞாபகத்திற்கு கொண்டு வர முடியவில்லை.
“எழுதும் போது மூளையின் உணரும் பகுதியில் எழுத்துக்களின் உருவம் படிந்து விடுகிறது. ஆனால், டைப் செய்யும் போது அவ்வாறு படிவதில்லை. டைப் செய்வது படிப்பதற்கு வலு சேர்ப்பதில்லை.”
இதேபோல், உடல் அசைவுகளுடன் கூடிய பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிந்து விடுகின்றன. உடல் அசைவுகள் இல்லாத பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிவதில்லை.
மற்றொருவர் உடல் அசைவுகளுடன் பேசும் போது எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். அதையே நாம் நம் உடல் அசைவுகளுடன் செய்யும் போது பதிவதில்லை போன்றவை ஆய்வில் தெரிய வந்துள்ளன.
                                                                                                                                                                    நன்றி:கல்விகளஞ்சியம்(www.kalvikalanjiam.com

இரண்டு சூரியன்களைச் சுற்றி வரும் புறக்கோள் கண்டுபிடிப்பு


Kepler-16இரண்டு சூரியன்களைச் சுற்றி வரும் புறக்கோள் ஒன்று முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் கெப்லர் தொலைநோக்கி இதனைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.
கெப்லர்-16 என்ற இரட்டைச் சூரியன்களைச் சுற்றி வரும் கெப்லர்-16பி
கெப்லர் 16பி (Kepler-16b) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புறக்கோள் சனிக் கோளைப் போன்று உயிரினங்கள் வாழமுடியாத குளிர்ந்த வளிமப் பெருங்கோள் எனக் கருதப்படுகிறது. இது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 200 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது.
For more information visit www.kalvikalanjiam.com
கெப்லர்-16பி பற்றிய தகவல்கள் இன்றைய சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இரட்டைச் சூரியன்களைச் சுற்றும் கோள்கள் அண்டத்தில் காணப்படலாம் என முன்னர் வானியலாலர்கள் எதிர்வு கூறியிருந்தாலும், முதற்தடவையாக இப்போது தான் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. கெப்லர்-16பி கோளின் ஒரு நாள் நிறைவடையும் போது அதற்கு இரண்டு சூரிய மறைவுகள் காணப்படும். ஸ்டார் வோர்ஸ் திரைப்படத்தில் டாட்டூயின் என்ற கோள் ஒன்றில் இருந்து லூக் ஸ்கைவாக்கர் என்ற பாத்திரம் இரட்டைச் சூரியன் மறையும் காட்சியைக் காண்பது காண்பிக்கப்பட்டது. இது இப்போது உண்மையாகியுள்ளது.
இக்கோளின் இரண்டு சூரியன்களும் எமது சூரியனை விடச் சிறியதாகும். இரண்டு சூரியன்களையும் அது 229 நாட்களுக்கு ஒரு முறை 104 மில். கிமீ தூரத்தில் சுற்றுகிறது. இது கிட்டத்தட்ட வெள்ளியின் சுற்று வட்டத்தைப் போன்றதாகும்.
கெப்லர் தொலைநோக்கி 2009 ஆம் ஆண்டில் பூமிக்கு ஒத்த கோள்களைக் கண்டுபிடிப்பதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. கெப்லர் தொலைநோக்கி “கடக்கும்” தொழில்நுட்பத்தில் தங்கியுள்ளது. அதாவது, தனது சூரியனுக்கும் (அல்லது விண்மீன்) புவிக்கும் இடையில் கடக்கும் புறக்கோள்களை இது கண்டுபிடிக்கிறது. விண்மீனில் இருந்து வரும் ஒரு மிகச்சிறிய ஒளி காலமுறை தோறும் தடுக்கப்படுவது, கோள் ஒன்று அதனைச் சுற்றி வருவதாகக் கருதப்படுகிறது.
நன்றி
விக்கிபீடியா
சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். 241(திருக்குர்ரான் 36:38)
அவன் இரவைப் பகலில் நுழைக் கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. 241  அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.(திருக்குர்ரான் 35:13)
அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப் பதையும், பகலை இரவில் நுழைப்பதையும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறிய வில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும். 241  நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.(திருக்குர்ரான் 31:29)
தக்க காரணத்துடனேயே வானங்களையும், பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால கட்டம் வரை ஓடும். 241 கவனத்தில் கொள்க! அவனே மிகைத்தவன்; மன்னிப்பவன்.(திருக்குர்ரான் 39:5)

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். 240 பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. 241 காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.(திருக்குர்ரான் 13:2)

பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழமுடியும் என்ற 

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். 'இறங்குங் கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன'  175  என்றும் நாம் கூறினோம்.(திருக்குர்ரான் 2:36)

''(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர் களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன'' 175 என்று (இறைவன்) கூறினான்.(திருக்குர்ரான் 7:24)

'அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்'' என்றும் கூறினான். 175 (திருக்குர்ரான் 7:25)


முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்! ஏன்? ஏதற்கு!!


கண்ணியமும் மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்த தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன். (அல்குர்ஆன் 3:1-20)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி)

இடஒதுக்கீடு! பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தில் வாழும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடிப்படையான வாழ்வாதார உரிமை தான் இடஒதுக்கீடு. நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டிய நன்நோக்கில் அரசியலமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட்டதுதான் இடஒதுக்கீடு. செல்வாக்கு மிக்க தங்கள் தலைவர்களால் சில சமுதாயத்தினரும் கடுமையான போராட்டங்களால் சில சமுதாயத்தினரும் இந்த உரிமையை பெற்று நிலைநாட்டி வருகின்றனர்.

உரிமைகளையும் கடமைகளையும் மார்க்கரீதியாக பெற்றுக் கொண்ட முஸ்லிம் சமுதாயமோ- தங்களின் இடஒதுக்கீடு உரிமையை பெறுவதில் அலட்சிய போக்குடன் இருந்து வருகின்றனர். ஆரம்ப காலங்களிலிருந்தே உரிமைகள் விஷயத்தில் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை கண்டு கொள்ளாமல் இருந்து, பிறகு ஓரங்கட்டி பிறகு தீவிரவாதி முத்திரை குத்தி வருகின்றனர்.

அடிமை இந்தியாவில் போராட்ட வீரர்களாகவும், சுதந்திர இந்தியாவில் அடிமைகளை போலவும் நடத்தப்படும் இந்த இஸ்லாமிய சமுதாயம் தன் நிலையை உணர்ந்து தனக்கு உண்டான வலிமையை கேட்டுப் பெற்று தானும் மண்ணின் மைந்தன் என்ற உரிமையை நிலைநாட்ட கிடைக்கவிருக்கும் களமே இந்த பிப்ரவரி 14 ல் நடைபெறவிருக்கும் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்.

நமது நாடு விடுதலை அடைந்த பிறகு மாபெரும் வல்லரசு நாடாக வளர்ச்சி பெற்றுள்ளது உங்களுக்குத் தெரியும்.இந்த நாட்டின் அடக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. எல்லாச் சமுதாய மக்களும் உயர் கல்வி கற்று பதவிகளையும் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பையும்,அரசியல் அதிகாரத்தை மற்றவர்களுக்குச்  சமமாகப் பெற்றுள்ளதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் உங்களின் நிலை என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்திய நாட்டை உருவாக்கியதிலும் அதை வளப்படுத்தியதிலும் வெள்ளையனிடம் இருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களை விட நாம் அதிக உழைப்பு செய்தோம்.

வெள்ளையனை எதிர்ப்பதற்காக அவனுடைய மொழியைப் படிக்கக் கூடாது என்றோம். படிப்பைப் பாதியில் நிறுத்தினோம். வெள்ளையனுடைய அரசாங்கத்தில் வேலை பார்க்கக்கூடாது என்று முடிவு எடுத்து அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளினோம்.

வழிபாட்டுத் தலங்களைக் கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தபோது வெள்ளையனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் மேடையாக பள்ளிவாசல்களை நாம் பயன்படுத்தினோம். வெள்ளையன் கொடுத்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மற்ற சமுதாய மக்கள் முன்னேறிய போது அதையும் பயன்படுத்த மறுத்தோம்.

உடலாலும் பொருளாலும் உயிராலும் தியாகம் செய்வதில் மட்டும் அனைவரையும் நாம் மிஞ்சினோம். நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலைவாய்ப்பு களையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்று விட்டார்களே அது பற்றிச் சிந்தித்தீர்களா?

கூலித் தொழலாளியாகவோ, இறைச்சிக் கடைக்காரராகவோ, நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப் பட்டறையில் கடின வேலை செய்பவராகவோ, தோல் பதனிடும் தொழிலாளியாகவோ, பெட்டிக்கடை நடத்துபவராகவோ, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவர்களாகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?

ஒட்டகம் மேய்த்தல், சாலை போடுதல், கழிவுகளைச் சுத்தம் செய்தல், உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டிடப் பணிகளில் கூலித் தொழில் செய்தல், தனியாருக்குக் காரோட்டும் வேலை, வீடுகளைச் சுத்தம் செய்தல், சமையல் வேலை இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?

மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்?இதை மாற்றியமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா? இல்லையா?

88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்க வேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் மட்டும் தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறதே! இந்த நிலை இனியும் தொடரலாமா?

பாதுகாப்பு தொடர்பான பணிகளில் மூன்று சதவிகிதம் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையை விட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறதே? அதை மாற்றியமைக்க வேண்டாமா?

முஸ்லிம்களின் கல்வி அரசியல் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உங்களை கவலையில் ஆழ்த்தவில்லையா?

முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம். அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 35பேர் ஐந்தாம் வகுப்பு கூட படிக்கவில்லை.

ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்பு வரை படிக்கவில்லை.

எட்டாம் வகுப்புக்கு மேல் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 10.96 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11 பேர் தான் பத்தாம் 
வகுப்பு படித்தவர்கள்.பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரண்டு வரை படித்தவர்கள் 4.53 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் ஐந்து பேர் தான் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்.பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் மூன்று பேர் தான் பட்டப்படிப்பு படித்தவர்கள்.

 இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் எந்தச் சமுதாயமும் இல்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இந்த அவல நிலை என்றால், பொருளாதார நிலையிலாவது நமது நிலை உயர்ந்து இருக்கிறதா? அல்லது மற்ற சமுதாயங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறதா? பொருளாதாரத்தில் கடைசி நிலையில் இருக்கும் தலித் மக்களுடன் போட்டியிடும் அளவுக்குத்தான் நமது நிலை உள்ளது.

முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் இருபது காசுகளும் தான் என்கிறது அந்த அறிக்கை.அது மட்டுமின்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.

மற்ற சமுதாய மக்களில் நூற்றுக்கு இருபது பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் போது நமது சமுதாயத்தில் நூற்றுக்கு 31 பேர் வறுமையில் உள்ளனர் என்றால் இந்த நிலையை உயர்த்திட நாம் பாடுபட வேண்டாமா?

வறுமைக்கோடு என்பதன் அர்த்தம் தெரிந்தால் இட ஒதுக்கீட்டை நம்மால் அலட்சியப்படுத்தவே முடியாது. கீழ்க்காணும் தகுதியில் இருப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்று நிர்ணயித்துள்ளனர்.

சொந்தமாக இடம் இல்லாதவர்கள்,இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணங்கள் (டிவி. ரேடியோ மின் விசிறி குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள் நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள்.இத்தகைய நிலையில் நம் சமுதாயம் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லையா? பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துக்கான ஒப்பான வாழ்க்கை வாழும் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கண்டிப்பாக உழைக்கும் கடமை நமக்கு உள்ளதா? இல்லையா?

இதன் பின்னரும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை இயற்றாமல் காங்கிரஸ் இழுத்தடிக்கப் பார்க்கிறது. ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கபடும் என பிரதமர் கூறியுள்ளார்.

பாஜக இதை எப்படி ஒப்புக் கொள்ளும்? ஒருமித்த கருத்து எப்படி ஏற்படும்? ஒருமித்த கருத்து உருவான பின்னர் தான் இட ஒதுக்கீடு என்றால் மிஸ்ரா கமிஷன் அமைத்தது எதற்காக? முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதை தான் பிரதமர் வேறு வார்த்தையில் சொல்லி இருக்கிறார். முஸ்லிம் சமுதயாத்தை ஏமாளிகளின் சமுதாயம் என்று பிரதமர் தப்புக் கணக்குப் போட்டுள்ளதையே இது காட்டுகிறது.

ஆனால் இத்தகைய பிரதமரையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளை அழைத்து இட ஒதுக்கீடு சம்பந்தமாக காங்கிரஸ் தலைவி சோனியாவுடன் சேர்ந்து பேச வைத்தது நம் சமுதாய மக்கள் சென்னை தீவுத்திடலில் திணற வைத்ததால் தான். 

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அவர்களும்,நம்முடைய கட்டுக்கடங்காத போராட்டங் களால் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

குடந்தையை குலுங்கச் செய்த பேரணி மாநாடு தான் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு ராஜசேகர ரெட்டியினால் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்த்த கண்டித்த ஜெயலலிதாவை கமிஷன் அமைக்க வைத்தது. 

ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் கொடுத்த வாக்குறுதியை மறந்து விடலாம் என்று எண்ணிய கலைஞரைக்கூட நம்முடைய தொடர் போராட்டங்களும், ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டமும் தான் மாநிலத்தில் 3.5; சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இதன் காரணமாக இட ஒதுக்கீட்டின் பலனை ஓரளவு பெற்றுள்ளோம். இருப்பினும் நம் முஸ்லிம் மக்கள் தொகைக்கேற்ப இந்த 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு போதாது என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

இதன் காரணத்தினால் தான் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவிகிதமும் மத்தியில் 15 சதவிகிதமும் கேட்டு பெற வேண்டி இன்ஷாஅல்லாஹ் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக இடஒதுக்கீடு கோரி முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற உள்ளது. 

திரும்பவும் எழுச்சியை காட்டும் நிலைக்கு சமுதாயம் தள்ளப்பட்டு விட்டது. 
தலைவர்களின் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க உன்னைக் காட்டி விலைபேசுவோருக்கு உன்னை அறியாமல் உதவ பல களங்களைச் சந்தித்துள்ளாய்!

இப்போது உனக்காக மானத்தோடும் மரியாதையோடும் நீ வாழ்வதற்காக உனக்கு ஏற்பட்ட நிலை உன் சந்ததிகளுக்கும் ஏற்படாமல் தடுத்து நிறுத்திட!

நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்ல மாட்டோம் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய!

64 ஆண்டுகள் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற மாட்டோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட! 

இட ஒதுக்கீடை அடைய எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்திட!

குடும்பத்துடன் புறப்பட்டு வா!
அலை அலையாய் திரண்டு வா!
புயலென புறப்பட்டு வா!
இறைவன் உதவியால் வென்று காட்டுவோம்!

மாவட்ட தலைநகரங்களை குலுங்க வைக்க!  இன்ஷாஅல்லாஹ் இன்னும்
சில் நாட்களே...

வெளியீடு எண்: 303                                              தேதி:16.12.2011
அன்புடன் வெளியிடுவோர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

 திருவண்ணாமலை மாவட்டம் 


Is Jesus the Son of God?


சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர். இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர். உத்தர பிரதேச மாநில தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- தினமலர் 22-12-2011 செய்தி
இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

உணவில் உப்பு குறைக்கிறீர்களா? கவனம்!

உணவில் உப்பின் அளவைக் குறைக்க ஆரம்பித்துள்ளீர்களா? கவனம் தேவை! குறிப்பிட்ட அளவுக்குக் கீழே உணவில் உப்பின் அளவைக் குறைப்போருக்கு இதயத் தொடர்பான நோய்கள் வரும் என சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமாக உணவில் உப்பின் அளவு அதிகமாக பயன்படுத்துவோருக்கு இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள் உருவாவதோடு அதுவே மாரடைப்பு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைகிறது என்ற கருத்து மருத்துவர்களிடையே உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களுடன் வரும் நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை கூறுவர்.
ஆனால், மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக அவ்வாறு உப்பைக் குறைத்துக்கொள்வதே மாரடைப்பு முதலான இதய நோய்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுத்தகவல் பெரிய வெடிகுண்டை வீசியுள்ளது.
டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையில் 40,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தோரின் சிறுநீரகத்தில் ரெனின் என்ற புரதமும், அல்டோஸ்டிரோன் என்ற ஹோர்மோனும் அதிகளவில் சுரந்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளஹ்டு.
இந்த ஆய்வு தொடர்பாக மருத்துவ ஆய்வாளர் நீல்ஸ் கிரெடல் கூறுகையில், "உப்பைக் குறைத்தால் அது இருதய நோயை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
"நாளொன்றுக்கு உணவில் சராசரியாக 6 கிராம் அளவு உப்பைச் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்" என்று இருதய நிபுணர்கள் சங்கத்தின் அறிவியல் ஆலோசகர் கெய்த் பெர்டிணாண்ட் தெரிவித்துள்ளார். இது மேற்படி ஆய்வு முடிவிற்குச் சாதகமானதாகவே உள்ளது.
அதே சமயம், "உணவில் உப்பைக் குறைப்பதால் இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை" என்று பேராசிரியர் கிரஹாம் மெக்கிரிகோர் தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருந்தாலும் உணவில் தொடர்ச்சியாக உப்பின் அளவினைக் குறைத்துக் கொண்டு வருவது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானதில்லை என்பது மட்டும் உறுதி. அவரவர் உடல் எடைக்கேற்ப, தினசரி ஒரு குறிப்பிட்ட அளவாவது உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

அனைத்துவித தளங்களில் இருந்தும் வேகமாக வீடியோக்கள் தரவிறக்க

நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம்.

 எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்வோம்.  இதில் உள்ள அனைத்திலும் ஒரு பிரச்சனை நேரம் மற்றும் தரவிறக்கும் வேகம் தான்.  ஒரு தளங்களில் ஒரு கோப்பினை தரவிறக்கம் செய்ய முயற்சி செய்தால் முதலில் தரவிறக்க 60 விநாடிகள் வரை காத்திருக்க வேண்டும்.  அதன் பிறகு தரவிறக்கம் செய்ய வேண்டும்.  அது மட்டுமல்லாமல் தரவிறக்க வேகம் மிகவும் குறைவாகவும் இருக்கும்.  

இதை தீர்க்க ஒரு இலவச தளம் உள்ளது.  அதன் பெயர் fetch.io  இது ஒரு Cloud Computing முறையில் இயங்ககூடிய தளம்.

இந்த வலைத்தளம் மூலம் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் நேரக் காத்திருப்பு இல்லாமல் தரவிறக்க முடியும்.


இதில் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட தளங்களிலுருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.

தரவிறக்கப்படும் வீடியோ கோப்புகள் நேரடியாக MP4 ஆக மாற்றி தரும்.



இந்த வலைத்தளத்தில் மூலம் நான் பத்து எம்பி உள்ள வீடியோ கோப்புகள் ஓரு மூன்று விநாடிகளுக்குள் தரவிறக்கித்தந்தது.

இணையத்தள சுட்டி

இணைய வேகத்தை அதிகரிக்க…


இணைய வேகத்தை அதிகரிக்க…

உங்கள் இணையத்தின் வேகத்தை சற்றேனும் அதிகரிக்கவேண்டுமா? அப்படியாயின் உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும்.
உங்கள் இணையத் தொடா்பின் பட்டை அகலத்தை (Bandwidth) முழுமையாக விண்டோஸ் இயங்கு தளம் கொண்ட கணினிகள் பயன்படுத்துவதில்லை.
விண்டோஸ் தனது தேவைக்காக (உ+ம்- விண்டோசை புதுப்பித்தல்) 20% பட்டை அகலத்தை தானாகவே ஒதுக்கிக் கொள்கிறது.
இதனை மாற்றுவதன் மூலம் உங்கள் இணையத்தின் பட்டை அகலத்தை முழுமையாக நீங்கள் பயன்படுத்தமுடியும்.
இதற்கு நீங்கள் செய்யவேண்டியது…
Start –> Run சென்று gpedit.msc என்பதை தட்டச்சு செய்து Local Group Policy Editor என்ற சாளரத்தை திறந்துகொள்ளுங்கள்.
பின்,  நீங்கள் செல்லவேண்டியது Local Computer Policy –>Computer Configuration –> Administrative Templates –> Network –> QoS Packet Scheduler –> Limit reservable bandwidth என்பதை இரட்டைக் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.
image
அதனைத் தொடா்ந்து வருகின்ற உரையாடல் பெட்டியில் (Dialog Box) இல் Enabled என்பதை தெரிவு செய்வதன் மூலம் நீங்கள் விரும்பிய பட்டை அகலத்தை(Bandwidth) கொண்டுவரலாம்.
image
மாற்றங்களை செய்த பின் OK பொத்தானை அழுத்தி மாற்றங்களைச் சேமியுங்கள். இனி உங்கள் இணைய பட்டை அகலத்தை 100% முழுமையாக நீங்கள் பயன்படுத்தலாம்.

                                                                                                       நன்றி ; கம்ப்யுட்டர் உலகம் 

Saturday 24 December 2011

Does Islam Snatch the Rights of Women?


was Allah’s Apostle Affected by Black Magic?


This is the Bible




சத்தியம் சொல்வோம் அசத்தியம் ஒழிப்போம்


சத்தியம் சொல்வோம் அசத்தியம் ஒழிப்போம் 

கருஞ்சீரகம் பற்றிய ஹதீஸ் ஸஹீஹானதா?


கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும் .கருன்ஜீரகத்தில் மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்க்கும் மருந்து இருப்பதாக நபி( ஸல்) அவர்கள் சொன்னதாக உள்ள ஹதீஸ் சஹிஹான ஹதிசா ஆதாரத்துடன் விளக்கவும்.


farjana farvine - paris

பதில் : கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் மருத்துவம் இருக்கிறது என்ற கருத்தில் ஸஹீஹான ஹதீஸ்கள் நிறையவே இருக்கின்றன.புகாரி, முஸ்லிம் போன்ற பல கிரந்தங்களில் இந்தத் தகவல்கள் பதியப்பட்டுள்ளன.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ مَنْصُورٍ عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ قَالَ خَرَجْنَا وَمَعَنَا غَالِبُ بْنُ أَبْجَرَ فَمَرِضَ فِي الطَّرِيقِ فَقَدِمْنَا الْمَدِينَةَ وَهُوَ مَرِيضٌ فَعَادَهُ ابْنُ أَبِي عَتِيقٍ فَقَالَ لَنَا عَلَيْكُمْ بِهَذِهِ الْحُبَيْبَةِ السَّوْدَاءِ فَخُذُوا مِنْهَا خَمْسًا أَوْ سَبْعًا فَاسْحَقُوهَا ثُمَّ اقْطُرُوهَا فِي أَنْفِهِ بِقَطَرَاتِ زَيْتٍ فِي هَذَا الْجَانِبِ وَفِي هَذَا الْجَانِبِ فَإِنَّ عَائِشَةَ حَدَّثَتْنِي أَنَّهَا سَمِعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ هَذِهِ الْحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا مِنْ السَّامِ قُلْتُ وَمَا السَّامُ قَالَ الْمَوْتُ (خ:5687)

காலித் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களுடன் ஃகாலிப் பின் அப்ஜர் (ரலி) அவர்கள் இருக்க நாங்கள் (பயணம்) புறப் பட்டோம். வழியில் ஃகாலிப் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப் (ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக் (ரலி) அவர்கள் உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.

அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதி-ருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவருடைய மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், "நபி (ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; "சாமை'த் தவிர என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்'' எனத் தெரிவித்தார்கள். நான், "சாம் என்றால் என்ன?'' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் "மரணம்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி – 5687)
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُمَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا السَّامَ قَالَ ابْنُ شِهَابٍ وَالسَّامُ الْمَوْتُ وَالْحَبَّةُ السَّوْدَاءُ الشُّونِيزُ (خ :5688)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கருஞ்சீரக விதையில் "சாமை'த் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று கூறினார்கள். (புகாரி – 5688)
"சாம்' என்றால் "மரணம்' என்று பொருள். "அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) "ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள்.

கருஞ்சீரகத்தை மருத்துவப் பொருளாக நாம் தாராளமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் இன்று நமக்கு மத்தியில் சிலர் மிஸ்வாக் என்ற பெயரில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு அலைவதைப் போல் கருஞ்சீரகத்தையும் பாக்கட்டுக்குள் வைத்துக் கொண்டு அலைவதைப் பார்க்கக் கிடைக்கிறது. இப்படி பாக்கட்டுக்குள் வைத்துக் கொண்டு அலையும் படியோ அல்லது ஒவ்வொரு தொழுகையின் பின்னும் அதை உண்ணும் படியோ அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ எந்த இடத்திலும் வழிகாட்டவில்லை.

பதில் : ரஸ்மின் MISc

மாதவிடாய் முடிந்த பெண்கள் குளிக்கும் முறை என்ன?


கேள்வி : madavidai kalam mudintha piragu kulippadu eppadi. vilaakamaga kooravum...

fathima muzniya – usa

பதில் ; மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் மாத விடாய்க் காலம் முடிகின்ற வரை தொழக் கூடாது. மாதவிடாய் காலம் முடிந்ததின் பின்னர் குளித்துவிட்டு தொழுது கொள்ள முடியும்.
மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டு தொழுதுகொள்!'' என்றார்கள்.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (228)
குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை தொழுகையை நெருங்காதீர்கள். (அல்குர்ஆன் (4 : 43))
குளிப்பை நிறைவேற்றும் முறை

நிய்யத் என்ற பெயரில் குளிப்புக்காக பெண்கள் நவைத்து அனிஃதஸல குஸ்லன் மினல் ஹைலி வதஹாரத்தன் லில் பதனி வ இஸ்திஹ்பாபன் லிஸ்ஸலாத்தி என்ற வார்த்தைகளை சொல்கிறார்கள். இதைச் சொல்லிக் குளித்தால் தான் குளிப்பு நிறைவேறும் என்றும் எண்ணுகின்றனர். இது தவறாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லுமாறு நமக்குக் கட்டளையிடவில்லை.

குளிக்கும் போது சில வாசகங்களை கூற வேண்டும் என்றும் ஆயத்துல் குர்ஸியை ஓத வேண்டும் என்றும் பலவிதமான நடைமுறைகள் சில ஊர்களில் உள்ளன. இதற்கும் நபிவழியில் எவ்வித ஆதாரமும் இல்லை.
அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (552)
மாதவிடாய் குளியல் குளிக்கும் போது தண்ணீரோடு இலந்தை இலையை சேர்த்துக் குளிக்கும் படி சொல்கிறார்கள். இலந்தை இலை என்பது தூய்மையை வலியுறுத்தி சொல்லப்படுவதாகும். நாம் வாழும் தற்காலத்தில் இலந்தை இலைக்கு பதிலாக சவர்க்காரத்தை (சோப்) பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பின்னர் தலையின் அனைத்துப் பகுதிகளும் நனையும் வண்ணம் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். அதன் பின்னர் உடம்புக்குத் தண்ணீர் ஊற்றிக் குளிக்க வேண்டும். இறுதியாக கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத் துண்டொன்ரை எடுத்து சுத்தம் செய்யும்படி நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கஸ்தூரி என்பதும் வாசனைக்காக சொல்லப்பட்டதுதான் அதனால் கஸ்தூரி கிடைக்காதவர்கள் அதற்கு பதிலாக அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சடைபோட்டுள்ள பெண்கள் சடையை அவிழ்க்க வேண்டியதில்லை.

சடைபோட்டுள்ள பெண்மணிகள் அதை அவிழ்த்துத் தான் குளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அல்லாஹ்வின் தூதரே நான் அதிகம் சடையுடைய பெண்ணாக இருக்கிறேன். கடமையான குளிப்பிற்காக அதை நான் அவிழ்க்க வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு தேவையில்லை. உன் தலைக்கு இரு கையளவு தண்ணீரை எடுத்து மூன்று முறை உன் தலையில் ஊற்றிக் கொள். பின்னர் உன் (உடல்) மீது ஊற்றிக்கொள். நீ தூய்மையடைந்து விடுவாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி), நூல் : முஸ்லிம் (497)
மேற்கண்ட முறையைப் பேணி குளிப்பதுதான் நபி வழியாகும்.

பதில் : ரஸ்மின் MISc

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


கேள்வி : குர்ஆனைத் தொட்டு முத்தமிடலாமா?


syed yusuf - dubai

பதில் : திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள்.

குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது. இதே நேரத்தில் நபியவர்களுக்கு குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கியருளப்படவில்லை. மாறாக ஓசை வடிவில்தான் இறக்கப்பட்டது.

குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நமது வசதிக்காக அதை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம். இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களுக்கு எந்தப் புனிதமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதால் அவர்கள் குர்ஆனைப் பார்த்து ஓதி இருக்க முடியாது, அதனால் அவர்கள் குர்ஆன் எழுதப்பட்ட ஏடுகளை முத்தமிட்டிருக்கவும் முடியாது.

ஆனாலும் அவர்கள் காலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களும் குர்ஆனை எழுதி வைத்துக் கொண்டவர்களும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல எழுதியவர்களும் இருந்தனர். குர்ஆன் எழுதப்பட்ட ஏட்டை முத்தமிடுமாறு இவர்களில் யாருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக்கட்டளையும் பிறப்பிக்கவில்லை. அல்லது தமது முன்னிலையில் மற்றவர்கள் முத்தமிட்டு அவர்கள் அங்கீகரிக்கவும் இல்லை.

குர்ஆனை மதிக்கும் வழிமுறைகளில் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடாததால் குர்ஆனை முத்தமிடுவது அதிகப் பிரசங்கித்தனமாகும். நபிக்குத் தெரியாதது எனக்குத் தெரிந்து விட்டது என்று காட்டி நபியை அவமதிப்பதாகும்.

குர்ஆன் இடும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவதும், அது தடை செய்த காரியங்களை விட்டு விலகுவதும் தான் நாம் குர்ஆனுக்குக் கொடுக்கும் மரியாதையாகும். இவ்வாறு செய்தாலே நாம் குர்ஆனுடைய புனிதத்தைக் காத்தவர்களாக முடியும். எனவே குர்ஆன் பிரதிகளை முத்தமிடுவது கூடாது. அதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.


பதில் : ரஸ்மின் MISc

Friday 23 December 2011

சேத்பட் கிளையின் சார்பாக தனிநபர் தாவா



23 - 11 -2011 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்பட் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் அவர்கள் மொஹரம் மற்றும் தர்கா வழிபாடு என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ் 

சேத்பட் கிளையில் இஸ்லாம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் பயான்


20 - 12 - 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்பட் கிளையில் இஸ்லாம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் சகோதரர் தஸ்லீம் அவர்கள் உரையாற்றினார்கள் இதில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

Monday 19 December 2011

ராதாபுரம் கிளையின் சார்பாக கிரகண தொழுகை


10 - 12 - 2011 அன்று ராதாபுரம் கிளையின் சார்பாக கிரகண தொழுகை நடைபெற்றது பின் சிறிய உறையும் நிகழ்த்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

தவ்ஹீத் கிளையில் கிரகண தொழுகை

10 - 12 - 2011 அன்று திருவண்ணாமலை நகரத்தில் உள்ள தவ்ஹீத் கிளையில் கிரகண தொழுகை நடைபெற்றது ,தொழுகைக்கு பிறகு சிறிய உறையும் நிகழ்ந்தது அல்ஹம்துலில்லாஹ் 

ராதாபுரம் கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

16 - 12 - 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ராதாபுரம் கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் ஏகத்துவம் எங்கள் உயிர் முச்சி என்ற தலைப்பில் சகோதரர் தொவ்பிக் அவர்கள் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

Friday 16 December 2011

பில்லிசூனியம் மாந்திரீகம் என மக்களை ஏமாற்றியவரின் தலை துண்டிப்பு – சவுதி கோர்ட் அதிரடி தீர்ப்பு!


பில்லிசூனியம் மாந்திரீகம் என மக்களை ஏமாற்றியவரின் தலை துண்டிப்பு – சவுதி கோர்ட் அதிரடி தீர்ப்பு!

சவுதி அரேபியாவில் வடக்கு ஜாவ்ப் மாகாணத்தை சேர்ந்த பெண் அமீனாபிந்த் அப்துல்கலாம் நாசர். இவர் பில்லிசூனியம் மற்றும் மாந்திரீகம் செய்து வந்தார்.   இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சவுதிஅரேபியாவில் மாந்திரீகத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அமீனா மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட அமீனாவின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நேற்று அவர் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மாலைமலர் 13-12-2011