Tuesday 23 October 2012

தவ்ஹீத் கிளை சார்பாக பயான்

 14-10-2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் கிளை சார்பாக பயான் நடைபெற்றது இதில் 50 கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் 
உரை :சகோதரர் . இக்ரமுல்லா 

தலைப்பு :இறையச்சம்

Saturday 20 October 2012

கூகுளின் சதி அம்பலம் , அமெரிக்க ஃபெடரல் ட்ரெட் ஆணைய அறிக்கை!


கடந்த ஆண்டு பல்வேறு நிறுவனங்கள் அமெரிக்க ஃபெடரல் ட்ரெட் ஆணையத்திடம் (FTC) கூகுள் மீது மோசடி புகார் அளித்தனர். புகார் என்ன வெனில் ,
கூகுள் தனக்கு போட்டியாக உள்ள நிறுவனங்களை search result ல் வேண்டுமென்றே பின்னுக்கு தள்ளி தனது தயாரிப்புகளை முதன்மைப்படுத்தி கான்பிக்கின்றது. இதனால் பெரும் வியாபார இழப்பு ஏற்படுகின்றது. கூகுள் தன்னிடம் உள்ள ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி google ன் தயாரிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்தும் விதத்தில் search result ஐ உருவாக்குகின்றது.
மேற்கண்ட புகாரை பல்வேறு நிறுவனங்கள்  அளித்ததை தொடர்ந்து ஃபெடரல் ட்ரெட் ஆனையம் கடந்த 19 மாதங்களாக இது குறித்து ஆய்வு செய்தது.
தற்போது தனது ஆய்வறிக்கையின் 100 பக்க நகலை தயாரித்துள்ளது. அந்த நகல் ஆணையத்தில் உள்ள 5 அதிகாரிகளிடம் பரிமாரிக் கொள்ளப்பட்டுள்ளது.
5 அதிகாரிகளில் 4 நபர்கள் கூகுளின மீது கூறப்பட்டுள்ள மோசடி புகாரை உறுதி செய்துள்ளனர். மேலும் கூகுளின் மீது சட்டப்படி வழக்கு தொடர ஆனையம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணையத்தின் தலைவர் Jon Leibowitz கடந்த மாதம் தெரித்தள்ளார்.
FTC சேர்மன்
மேலும் இதற்காக சிறப்பு வழக்கறிஞரை கடந்த ஏப்ரல் மாதம் ஆணையம் நியமித்துள்ளது குறிப்பிடதக்கது.
பொது மக்கள் ஒரு பொருளை தேடும் போது , தனது google shopping மற்றும் google place,goodl adword ல் உள்ள product களையே முதன்மை படுத்தி கான்பிக்கின்றது கூகுள்.
இதன் மூலம் அனைத்து நிறுவனங்களையும் தன்னிடம் விளம்பரம் செய்ய நிர்பந்திப்பதோடு மட்டுமல்லாமல் தனது போட்டியாளர்களை தனது ஆதிக்கத்தின் மூலம் வரள விடாமல் பின்னுக்கு தள்ளுகின்றது என கூகுளின் மீது ஆய்வறிக்கையில் குற்றச் சாட்டு கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து , கூகுள் , ”ஆணையத்தின் எந்த கேள்விக்கும் நாங்கள் பதில் அளிக்க தயாராக” இருப்பதாக கடந்த வெள்ளி அன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் Texas, Ohio, New York, California, Oklahoma, Mississippi ஆகிய மாநிலங்கள் இதே புகாரின் பேரில் google ன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து கொண்டிருப்பது குறிப்பிடதக்கது.
இதே குற்றச்சாட்டு ஈரோப்பிலும் எழுந்து விசாரனை நடந்து வருவதும் குறிப்பிடதக்கது.
புகார் அளித்த நிறுவனங்களில் ஒன்றான மிகப்பெரும் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் NextTag கூறுகையில்,
கூகுள் ஷாப்பிங் சேவையை துவங்கியதிலிருந்து எங்கள் இணையதளத்தின் பார்வையார்கள் பாதியாக குறைந்து விட்டனர். ஆய்வு செய்து பார்த்ததில் google ல் இருந்து வரும் நேயர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து இருந்தது. இதனை சரி செய்யும விதமாக google இடம் விளம்பரம் (Google AdWord) செய்யும் தொகையை இரு மடங்காக்கினோம் பிறகு 60 சதவிகித பார்வையாளர்கள் google மூலம் வர ஆரம்பித்தனர். தனக்கு போட்டியானவர்களை search result ல் கூகுள் வென்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றது இதன் மூலம் தெரிகின்றது.
எனத் தெரிவித்துள்ளது.
Apple iphone மற்றம் ipad ல் உள்ள சஃபாரி browser ஐ பயன்படுத்துவர்களின் privacy தகவல்களை cookies கள் மூலம் திருடி Apple சஃபாரி browser ன் privacy விதிமுறைகளை google மீறியதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றத்திற்காக இதே அமெரிக்க ஃபெடரல் ட்ரெட் ஆனையயம் தான் கூகுளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 2.5 கோடி அமெரிக்க டாலர் அபராம் விதித்தது.
இன்டர்நெட் உலகில் மிக உயரிய தொழில் நுட்பத்துடன் எத்தனை நிறுவனங்கள் வந்தாலும் அவைகள் இன்டர்நெட்ல் முதன்மை இடத்திற்கு வராமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
மக்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ள கூகுள் தன்னை தவிர மற்ற யாரும் இன்டர்நெட் உலகில் முதன்மை இடத்திற்கு வந்து விடக்கூடாது என்பற்காக தனது மிகப்பெரும் அதிக்கமான Search Engine ஐ கருவியாக பயன்படுத்துகின்றது.
தற்போது இதற்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிழப்பியுள்ளதை தொடர்ந்து விரைவில் இந்த நிலை மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. அல்ஹம்துலில்லாஹ்!
தாங்கள் பயன்படுத்தும் Google சேவைக்கு மாற்று சேவையை பயன்படுத்த விரும்புவர்கள் http://www.bing.com/ க்கு சென்று alternative to என தட்டச்சு செய்து இறுதியில் தாங்கள் பயன்படுத்த விரும்பும் சேவையை குறிப்பிட்டு தட்டிப்பாருஙகள். ஏராமாள புதுப் புதுப் மாற்று சேவை நிறுவனங்களின் பட்டியல் கிடைக்கும்.
உதாரணமாக gmail க்கு மாற்று சேவை தேவை எனில் alternative to gmail என தட்டச்சு செய்து தட்டி பாருங்கள்..
ஒவ்வொன்றிற்கும் எந்த ஒன்றையும் வரையறுக்காமல் அவரவர் தனக்கு விருப்பமான மாற்று சேவையை தேர்வு செய்து கொள்வது நல்லது. கூகுள் இன்றைக்கு சர்வாதிகாரித் தனமாக நடந்து கொள்வதற்கு காரணம் அனைவரும் அந்த ஒன்றில் போய் விழுவது தான், தன்னை விட்டால் ஆள் இல்லை என ஆடுகின்றான்.  எனவே அவரவர் தனக்கு விரும்பமானதை பயன்படுத்திக் கொண்டால் google போன்று இன்னோரு சர்வாதிகாரி உருவாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

”உலக அதிசயம்” – தவ்ஹீத் கிளை தஃவா


திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் கிளை சார்பாக கடந்த 07-10-2012 அன்று உலக அதிசயம் எது என்ற தலைப்பில் சொற்பொழிவு ப்ரோஜக்ட்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது.

மாநில தலைமையின் முக்கிய அறிவிப்பு..

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.
வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.
இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
10.10.2012
சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்
மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.
ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது.
நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரியவரும் போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.
புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.
அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்
10.10.2012

Tuesday 9 October 2012

செங்கம் கிளையின் சார்பாக ராமலிங்கம் என்ற மாற்றுமத சகோதரருக்கு திருக்குர்ரான் வழங்கப்பட்டது

5/10/2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிளையின் சார்பாக ராமலிங்கம் என்ற மாற்றுமத  சகோதரருக்கு  மாநிலத்தின் மூலம்,கிளையின் நிர்வாகி முன்னிலையில் திருக்குர்ரான் வழங்கப்பட்டது.

Sunday 7 October 2012

அண்ணாநகர் கிளை சார்பாக தனி நபர் தாவா

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக 26-09-2012 அன்று தனி நபர் தாவா மூலம் கயிறு  அறுக்கப்பட்டது. இதில்  சகோதரர் நிசார் அவர்கள் உரையாற்றினார்.

Monday 1 October 2012

தவ்ஹீத் நகர் கிளை சார்பாக ப்ரொஜெக்டர் பயான்

23-09-2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத்  நகர் கிளை சார்பாக ப்ரொஜெக்டர் மூலம் பயான் செய்யப்பட்டது இதில்( உலகமே திரும்பிபார்க்கும் உன்னதமார்க்கம் ) என்ற தலைப்பில்  பயான் நடை பெற்றது  இதில் 50 மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர் 

வங்கி மோசடி வழக்கின் பினைக்கால விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக Nakoula Basseley Nakoula கைது


நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி திரைப்படம் தயாரித்த Nakoula Basseley Nakoula என்பவன் அமெரிக்க போலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளான்.
இவன் நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி படத்தை தயார் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்படவில்லை.
கடந்த 2010 ஆம் ஆண்டு வங்கி மோசடியில் இவன் கைதாகி பினையில் வெளிவந்தான்.
கோர்ட் இவனை அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் இன்டர்நெட்டை பயன்படுத்தக் கூடாது புனைப் பெயர் வைக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் பினையில் விட்டது.
தற்போது இந்த படத்தை தயாரித்து அதை Youtube ல் புனைப் பெயரில் அப்லோடு செய்து கோர்ட் விதித்த நிபந்தனைகளை மீறி உள்ள குற்றத்திற்காக ஃபெடரல் கோர்ட் நீதிபதிமன்றம் பினையில்லாத கைது உத்தரவை  நேற்று பிறப்பித்துள்ளது.
மேலும் அதிகாரிகளிடம் நான் இந்த படத்தை தயாரிக்க வில்லை Youtube ல் அப்லோடு செய்யவில்லை என பொய் கூறிய காரணத்திற்காகவும் அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.