Saturday 25 August 2012

அண்ணாநகர் கிளை சார்பாக 234 ஏழைகளுக்கு பித்ரா வழங்கப்பட்டது


திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக 18-08-2012 மற்றும் 19-08-2012 ஆகிய இருநாட்களில் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. இதில் 234 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா வழங்கப்பட்டது  ஒரு பித்ராவின் மதிப்பு 270.84 ரூபாய் ஆகும் 

தவ்ஹீத் நகர் கிளை சார்பாக135 ஏழைகளுக்கு பித்ரா


18-08-2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக135 ஏழை குடும்பங்களுக்கு  பித்ரா விநியோகம் செய்யப்பட்டது ஒரு பித்ராவின் மதிப்பு 262 ரூபாய்.

அண்டை வீட்டாரின் உரிமைகள்!

'இறைவன் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையில்லாதவன்! ' என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்?' என்று வினவப்பட்டது.

'எவனுடைய அண்டை வீட்டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!' என்று பதிலளித்தார்கள் அண்ணலார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்

நான் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்: 'தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருப்பதில்லை'

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல் : மிஷ்காத்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டார் அன்பளிப்பாக ஒரு பொருளை தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்தால், அதனை அவர் அற்பமானதாகக் கருதக் கூடாது, அது ஒரு ஆட்டின் குளம்பானாலும் சரியே!'


அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி, முஸ்லிம்

விளக்கம் : தன் அண்டை வீட்டாருக்குச் சிறு பொருள்களை அன்பளிப்பாக வழங்கக்கூடாது, அன்பளிப்பாய் மதிப்பு வாய்ந்த பெரிய பொருட்களையே அனுப்ப வேண்டுமென்பது பெண்களின் பொதுவான மனப்பான்மையாகும். இதன் காரணமாகத்தான் அண்ணலார் அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு பிரத்யேகமாக கட்டளையிட்டுள்ளார்கள். சிறு சிறு பொருள்களையும் அண்டை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். அவ்வாறே பிறரிடமிருந்து வரும் அன்பளிப்பு சிறியதாக இருந்தாலும் அதை அன்புடன் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை அற்பமானதாய்க் கருதக்கூடாது, அதைக் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது.

நான் அண்ணலாம் பெருமானார் கூறக்கேட்டேன்:

'எனக்கும் இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளனர். அவர்களில் எவருக்கும் நான் அன்பளிப்பு அனுப்புவது?' அண்ணலார் பதிலளித்தார்கள். 'எவருடைய வாசல் உன் வாசலுக்கு மிக அருகில் உள்ளதோ அந்த அண்டைவீட்டுக்காரருக்கு!'

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி

விளக்கம் :அக்கம் பக்கத்திலுள்ள நாற்பது வீடுகள் வரை அண்டை வீடுகள் என்று கருதப்படும். அவர்களில் எவருடைய வீடு மிக அருகில் உள்ளதோ அவரே நம்மீது மற்ற அனைவரையும்விட அதிக உரிமையுள்ளவர் ஆவார்.


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

'எந்த மனிதர் அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் பேசும்போது உண்மை பேசட்டும், அவரிடம் அமானிதமாக (அடைக்கலமாக) ஒரு பொருள் தரப்பட்டால், அந்த பொருள் அவர் தன் உரிமையாளரிடம் பாதுகாப்பாகத் திருப்பித் தந்து விடட்டும், தன் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்! '

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அபீகுராத் (ரலி), நூல் : மிஷ்காத்

ஒரு மனிதர் அண்ணலாரிடம் கூறினார்: 'இன்ன பெண் மிக அதிகமாக நஃபில் (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள், நஃபில் (உபரியான) நோன்புகள் நோற்கின்றாள், ஸதகா (தர்மம்) கொடுக்கின்றாள், இந்த விஷயங்களில் அவள் பிரபலமாக விளங்குகின்றாள். ஆனால், தன் அண்டைவீட்டாருக்குத் தன் நாவால் துன்பம் விளைவிக்கின்றாள்.

'இதைக் கேட்ட அண்ணலார் (ஸல்) அவர்கள் 'அவள் நரகம் புகுவாள்' என்று கூறினார்கள்.

அந்த மனிதர் மீண்டும கூறினார் : 'அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் குறைவாக நஃபில் (உபரியான ) நோன்புகள் நோற்கின்றாள், மிகக் குறைவாக நஃபில் (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள், பாலாடைக் கட்டியின் சில துண்டுகளை தானம் செய்கின்றாள், ஆனால், தன் நாவினால் அண்டை வீட்டாரைத் துன்புறுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.'

இதற்கு அண்ணலார், 'இவள் சுவனம் புகுவாள்' என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), மிஷ்காத்

விளக்கம் : முதல் பெண் மக்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டாள் என்பதற்காக நரகம் புகுவாள். அண்டை வீட்டார் துன்புறுத்தப்படக்கூடாது. இது அவர்களின் உரிமையாகும். அவள் இந்த உரிமையை நிறைவேற்றவில்லை. உலகில் தன் அண்டை வீட்டாரிடம் அவள் மன்னிப்பும் கேட்கவில்லை, ஆகவே, அவள் நரகத்திற்குச் செல்ல வேண்டியதாக இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

'இறுதித் தீர்ப்புநாளில் அனைத்துக்கும் முதலாக (விசாரணைக்கு) வரும் இரு மனிதர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு இரு அண்டை வீட்டார் பற்றியதாகும்.'

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி), மிஷ்காத்

விளக்கம் : மறுமைநாளில் மக்களின் உரிமைகள் தொடர்பாக அனைத்துக்கும் முதலாக இறைவனின் முன் இரு மனிதர்கள் வருவார்கள். உலகில் அவர்கள் ஒருவர் மற்றவருக்கு அண்டை வீட்டாராய் இருந்திருப்பார்கள், ஒருவர், மற்றவருக்குத் தொல்லை கொடுத்து அநீதியிழைத்திருப்பார். இந்த இருவரின் வழக்கு அனைத்துக்கும் முதலாக விசாரணைக்குவரும்.

அன்புள்ளம் கொண்ட அருமை சகோதரர்களே! அண்டை வீட்டினருக்கு எந்த வகையிலும் தொந்தரவு தரலாகாது என இந்நபிமொழிகள் வலியுறுத்துகின்றது. பக்கத்து வீட்டுக்காரர் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் இறைநம்பிக்கையாளர் அல்ல என்பதும் நபிமொழி! அவர்களுக்கு தீங்கு செய்வதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அக்கம் பக்கத்தவரின் நலன் பேணாது வாழ்பவர் சுயநலவாதி ஆவார். ஒருவர் இறந்து ஒருவாரகாலமாய்யும் அக்கம்பக்கத்தவருக்கு தெரியாததால் துர்நாற்றம் எடுத்த பின்னர் வீட்டுக்கதவை உடைத்து எடுத்தார்கள் என்கின்ற மேலை நாட்டு நடப்புகளை தின இதழ்களில் பார்க்கின்றோம். மேற்கத்திய நாகரீகத்தின் அடிப்படையில் சுயநலப்போக்குடனும், சுகபோக வாழ்வையும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதாலேயே இந்த இழிநிலை! இது போண்ற அவல நிலை நீங்க நபிமொழியைப் பின்பற்றி நடப்போமா?
 
.
.

Tuesday 21 August 2012

முத்திரை பதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள்!

முத்திரை பதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள்!

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான், நாம் உம்மை அகிலாத்தாருக்கு ஓர் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம் (21:107)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் ஏற்படுத்தியத் தாக்கம், அவர்கள் ஏற்படுத்திய சமூக புரட்சி, அவர்களிடம் இருந்த நற்பண்புகள் ஆகியவைகளை முஸ்லிம்கள் சொல்லுவிதைவிட முஸ்லிமல்லாத அறிஞர்கள், அறிவுஜீவிகள் போன்றோர் சொல்லுவதே இந்த தலைப்பிற்கு மேன்மையாக இருக்கும் என்று நினைக்கின்றோம்.

மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.

இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார். பின்பு இவ்வாறு கூறுகிறார். இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது நபி(ஸல்) அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் கொள்கை ஒன்றை நிறுவி,அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள்.

அவர்கள் உயிர் நீத்து 14 நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர்.

உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று, கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான் (St. PAUL) .

ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல் (THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள்.

மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும்,கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன.

எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை.

ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை.

கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டுபண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும்.

கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம்.

சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.
Koodal - Michael Hurt (The 100), தமிழில் அந்த 100 பேர்

Monday 20 August 2012

திருவண்ணாமலை நகர ரம்ஜான் பெருநாள் தொழுகை 2012




திருவண்ணாமலை நகர ரம்ஜான் பெருநாள் தொழுகை 2012

Saturday 18 August 2012

2012 ஆம் ஆண்டு TNTJ சார்பாக நடத்தப்படும் பெருநாள் திடல் தொழுகை பட்டியல்!

2012 ஆம் ஆண்டு TNTJ சார்பாக தமிழகம் கர்நாடாக ஆந்திரா மற்றும் புதுவை உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு இடங்களில் நோன்பு பெருநாள் திடல்  தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடைபெறும் இடம் மற்றும் உரையாற்றுபவர்களின் பெயர் பட்டியல்:
Print This page

தர்காக்களின் நடப்பது என்ன? – ஒரு புலனாய்வு ரிப்போர்ட்! பாகம் 1

தர்காக்களின் நடப்பது என்ன? – ஒரு புலனாய்வு ரிப்போர்ட்! பாகம் 1

ரமலான் மாதம் முழுவதும் மெகா டிவியில் ஒளிபரப்பான, “தர்காக்களின் நடப்பது என்ன?” நிகழ்ச்சியின் டிவிடி வெளியாகிவிட்டது!
ஒரு டிவிடி விலை ரூ 30 மட்டும்
கொரியர் செலவு தனி
குறிப்பு : இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சி இமயம் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிறகு இரண்டாவது பாகம் டிவிடியாக வெளிவரும். இன்ஷா அல்லாஹ்……
தொடர்புக்கு :
டிஎன் டிஜே வீடியோ விஷன் – 9500168989

இங்கிலாந்தில் எழுச்சி பெறும் இஸ்லாம்



2030-ல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு குறித்து பிரபல டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்தவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கை யினராக ஆகிவிடுவார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டிலும் 5 லட்சம் நம்பிக்கையாளர்களை கிறித்துவ மதம் இழந்து வருகிறது. ஆண்டுக்கு 7,50,000 பேர் என்ற அளவுக்கு இறை நம்பிக்கை அற்றவர்களின் எண்ணிக்கைப் பெருகி வருகிறது என்று டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவிக்கிறது.
கிறித்தவ மதத்தவரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மற்ற மதத்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று (காமன்ஸ்) நூலக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் 39 சதவிகிதம் உயர்ந்து 30 லட்சத்தை எட்டியுள்ளது.
சீக்கியர்களும், யூதர்களும் சிறிதளவு குறைந்துள்ளனர் என்றும் டெய்லி மெயில் தெரிவிக்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் 7.6 சதவிகிதமாக கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து 2010ல் 4. 11 கோடி கிறித்தவர்கள் மட்டுமே இருப்பதை நான் கண்டேன். அதே கால கட்டத்தில் இறை நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை 49 சதவிகிதம் உயர்ந்து 1.34கோடி மக்கள் இருக்கின்றனர் என்று பிரிட்டன் டோரி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நீதித்துறை அமைச்சர் கேரி ஸ்டிரீட்டர் தெரிவித்த செய்தியையும் டெய்லி மெயில் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வாறாக ஒரு பக்கம் கிறித்தவம் தேய்ந்து கொண்டு போக போக மறுபக்கம் இங்கிலாந்தில் இஸ்லாம் எழுச்சி பெற்று சென்று கொண்டே உள்ளதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி வரும் கிறித்தவர்கள்:
பிரிட்டனில் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.
இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent”
என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. (பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)
கிறித்துவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதைப் பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லிம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸைக் காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.
2001-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000வரை இருக்கலாம் என கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்று கணக்கெடுத்துள்ளனர். அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லிம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாகவும், தனி நபர் மூலமாகவும் இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கணக்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். (அல்ஹம்துலில்லாஹ்).
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்தப் புது ஆய்வின்படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள்தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர் கூறுகையில் நாங்கள் இந்தத் தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், இது முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் எனத்தெரிவித்தார் .
ஏன் முஸ்லிம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தைப் பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருகின்றது. இந்த பொய்ப் பிரச்சாத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி tntj.net

Tuesday 14 August 2012

நியாயப்படுத்தப்படும் பஸ் பயணம்

நியாயப்படுத்தப்படும் பஸ் பயணம்


பாக்கர் அன்னியப் பெண்ணுடன் பயணம் செய்த விஷயம் மின்னஞ்சல் வழியாக மீண்டும் விவாதிக்கப் படுகிறது. அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்படுவதால் அது குறித்து விளக்கும் அவசியம் ஏற்படுகிறது.

பாக்கர் பகல் நேரத்தில் 4 அல்லது 5 மணி நேரம் பயணம் செய்தார் என்றும் இது தவறா என்றும் அவர் சார்பில் எழுதுபவர்கள் சொல்கிறார்கள்.

அது குறித்த உண்மைகள் வருமாறு:
1-பாக்கர் பயணம் செய்தது பகலில் அல்ல. இரவில் தான். பயணம் செய்த நேரம் 10 மணி நேரத்துக்கும் அதிகமாகும். 4 மணி நேரத்தில் சென்னையில் இருந்து கோவில்பட்டிக்குச் செல்லும் விரைவு வாகனம் இன்னும் இந்தியாவில் அறிமுகமாகவில்லை.
2- ரதிமீனா பேருந்து ஆங்காங்கே நிறுத்தி மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்து அல்ல. அப்படி இருந்தால் விளக்குகளை எறிய விட்டு பயணம் செய்வார்கள். முன் பதிவு செய்தவர்களை மட்டுமே ஏற்றிச் செல்வதால் புறப்பட்ட உடன் விளக்கு அணைக்கப்பட்டு விடும்.
3-அந்நியப் பெண் தற்செயலாக பாக்கர் அருகில் அமர வைக்கப்படவில்லை. மாறாக அந்தப் பெண் பாக்கரால் சென்னைக்கு வரவழைக்கப்படுகிறார். பாக்கர் தனது காரை எடுத்துச் சென்று பேருந்து நில்லையத்தில் இருந்து அழைத்து வந்தார்.
4- அந்தப் பெண்ணுக்கும் பாக்கருக்கும் சேர்த்து பாக்கரின் ஊழியர் மைதீன் தான் பாக்கர் செலவில் டிக்கெட் எடுத்தர்.
5- வீராணம் நிகழ்ச்சிக்கு செல்லும் போது அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்றார். அந்தப் பெண் கோவில்பட்டியில் இறக்கி விட்டார்.
6- அவர் மங்கலான வெளிச்சத்தில் சில்மிஷம் செய்ததை அந்தப் பேருந்தில் பயணம் செய்த ஒரு சகோதரர் பார்த்து விட்டு எழுத்து மூலம் புகார் செய்தார்.
பாக்கரை நேரில் விசாரித்த் போது தான் ஒன்றும் செய்யவில்லை என்றும் அந்தப் பெண் தான் தன்னிடம் வரம்பு மீறி நடந்ததாகவும் ஒப்புக் கொண்டார். இன்னும் பல விஷயங்க்ளையும் ஒப்புக் கொண்டார்.
உண்மைக்கு மாற்றமாக மின்னஞ்சலில் பொய்களைப் பரப்பினால் முழு விபரத்தையும் ஆதாரத்துடன் சொல்லும் நிலை ஏற்படும் என்பதைத் தெரிவிக்கிறேன்.
ஒரு பெண் தன்னந்தனியாக பயணம் செய்வது வேறு. இது வேறு.
அன்னிய் ஆணுடன்
ஏற்கனவே அறிமுகமான ஆணுடன்
முன் கூட்டியே திட்டமிட்டு
10 மணி நேரம்
கும்மிருட்டில்
அருகருகே ஒட்டி உரசிக் கொண்டு
பயணம் செய்வது வேறு
இது பயணம் செய்வது தொடர்பான பிரச்ச்னை அல்ல. அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பது தொடர்பானது.
இந்தக் கேவலத்தை நியாயப்படுத்தி யாராவது பேசினால் இதை நீங்கள் உங்கள் விஷயத்தில் கடைப்பிடிப்பீர்களா? அல்லது உங்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் இனி அப்படி நட்ப்பதற்கு அனுமதிப்பீர்களா? என்பது தான் கேள்வி.
மார்க்கத்தில் அப்பட்டமாக அறியப்பட்ட ஒரு அசிங்கத்தை நியாயப்படுத்த முயன்றால் அதன் விளைவு கடுமையாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இது பற்றி முழு
 விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும் 
நன்றி http://www.onlineintj.com

மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -1)

இந்த உலகில் உள்ள ஏராளமான மதங்களில் இஸ்லாமிய மார்க்கம் 120 கோடிக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கம் எந்த வகையில் ஏனைய மார்க்கங்களிலிருந்து வேறுபட்டிக்கிறது? இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கொள்கை என்ன? என்பவற்றையெல்லாம் அறிந்துகொள்ள நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இஸ்லாமிய மார்க்கம் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை உலகத்திற்குச் சொல்கிறது.

முதலாவது கொள்கை: வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை.

இரண்டாவது கொள்கை: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள்.

இவ்விரு கொள்கைகள் தாம் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள். இந்த கொள்கையை ஒருவன் நம்புகின்ற காரணத்திணால் ஏனைய மார்க்கங்களிலிருந்து தனித்தவனாக, ஏனையமார்க்கங்களைத் தவிர்த்து வித்தியாசமான ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டவனாக மாறிவிடுகின்றான்.

இந்த இரண்டு அடிப்படைக் கொள்கைகளில் அடிப்படைக் கொள்கைகளில் அப்படியென்ன சிறப்பு இருக்கின்றது? இந்த இரண்டு கொள்கைகளை ஏற்றவுடன் ஒருவன் முஸ்லிம் என்றும் இக்கொள்கைகளை ஏற்கவில்லையென்றால் அவன் முஸ்லிம் இல்லையென்றும் சொல்லகூடிய அளவுக்கு அப்படி என்ன தத்துவம் அதில் இருக்கின்றது? என்றால் இந்த இரண்டு கொள்கைகள் ஒரு மனிதன் உள்ளத்தில் பதிந்து விடுமானல், அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மனிதனுடைய வாழ்க்கையில் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன.

இவை எப்படி ஏற்படுகின்றன, ஏன் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
.
.
மனித குல ஒருமைப்பாடு

கடவுளை மனிதர்கள் வழிபட வேண்டும் என்றால் அந்த உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலையைக் காண முடியாதவர்கள் கடவுளையே மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட குலத்தில் பிறிந்த ஒருவன் குளித்து முழுகி புத்தாடை அணிந்து கடவுளைப் பூஜிப்பதற்காகச் செல்கிறான். இவன் கடவுளைப் பூஜை செய்யும் போது இவனைப் போன்ற இன்னொருவன் தடுத்து நிறுத்துகிறான்.
'நாங்கள் மட்டும் தான் பூஜைசெய்யவேண்டும்' எனக் கூறினாலும் 'நானும் சுத்தமாகக் குளித்துவிட்டுத்தான் வந்துள்ளேன்' எனக் கதறினாலும் அவன் ஒரு குறிப்பிட்ட குளத்தில் பிறந்ததால் தடுக்கப்படுகிறான்.

இப்படிப்பட்ட ஒரு கடவுள் தேவை தானா என்ற சிந்தனைக்கு அவன் ஆளாகிறான்.

மனிதனின் முயற்சியால் பெறுகின்ற கல்வி, பதவி, புகழ் போன்ற காரணங்களால் உயர்வு கற்பிக்கப்படுவதை ஏற்கலாம். மனித முயற்சியால் கிடைக்கப் பெறாத, குலத்தின் பெயரால் மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டால் அதைக் கடவுளும் ஏற்றுக்கொள்வாரானால் அந்தக் கடவுளை மறுப்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

'வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை' என்று ஒருவன் சொல்லி, அவன் ஓரே ஒரு கடவுள் தான் இந்த உலகத்திற்கு இருக்கின்றான் என்பதை ஓப்புக் கொள்கின்றான். உலத்திற்கு ஓரே ஒரு கடவுள் தான் இறுக்கின்றான் என்று மனிதன் நம்பக்கூடிய நேரத்தில் அவனிடையே மொழியால் இருந்த பிளவுகள், இனத்தால் இருந்த பிளவுகள், தேசத்தால் இருந்த பிளவுகள், கோத்திரத்தின், குலத்தின் அடிப்படையில் அவன் உண்டாக்கிக் கொண்ட பிளவுகள் எல்லாமே இந்த ஓரிறைக் கொள்கையால் அடிபட்டுப் போகிறது.

மொத்த உலகத்திற்குமே இறைவன் ஒருவன் தான், மொத்த உலகத்ததைப் படைத்த பரிபாலித்து, காத்துக் கொண்டு இருப்பவன், மொத்த உலகத்தில் வாழக்கூடிய அத்தனை மக்களுடைய தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு இருப்பவன் ஓரே ஒரு இறைவன் தான் என்று சொல்லும் போது, நான் தழிழன், நீ மலையாளி, அவன் கன்னடத்துக் காரன் என்றெல்லாம் மனிதன் மொழியின் பெயரால் கூறுபட்டுப் போவதை இந்த கொள்கைப் பிரகடனம் தடுத்து வீடுகின்றது.

நான் இந்தியன், அவன் பாகிஸ்தானியன், நீ அமெரிக்கன் என்றெல்லாம் தேசத்தின் பெயரால் மனிதன் மனிதனைப் பிரித்துப் பார்க்கின்ற நிலையையும் ஏகத்துவக் கொள்கை மாற்றிவீடுகின்றது.

அதைப் போல் நான் இந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன், நீ அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன் என்றெல்லாம் மனிதன் வேறுபட்டுப் போவதையும் இந்தக் கொள்கைப் பிரகடனம் தடுத்து விடுகின்றது.

மொத்த உலகத்திற்கும் ஒருவன் தான் படைப்பாளன், மொத்த உலகத்தில் உள்ளவர்களும் அந்த இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறும் போது அனைவரும் அந்த ஓரே இறைவனின் அடிமைகளாகி, 'அடிமைகள் என்ற வட்டத்துக்குள் ஒன்று பட்டு விடுகின்றனர்.

ஆக ஏக இறைவனுக்கு அடிமைகள் தான் நாம், என்று நம்பும் போது, தமிழனும் அவனுக்கு அடிமை, மலையாளியும் அவனுக்கு அடிமை, கன்னடக்காரனும் இறைவனுக்கு அடிமை என்று எல்லோரும் 'அடிமை' என்று ஒன்று பட்டு விடுகின்றோம்.

ஓரே ஒரு கடவுளுக்குத் தங்களை அடிமைகள் என்று அத்தனை பேரும் ஒன்று பட்டுக் கூறும் போது மனிதன் இன்னொருவனை விட உயர்ந்தவன் என்று கருதமாட்டான்.

என் தாய் மொழி 'தமிழ்' என்பதால் நான் சிறந்தவன் என்று தமிழனோ, தன் தாய் மொழி 'மலையாளம்' என்பதால் தான் உயர்ந்தவன் என்று ஒரு மலையாளியோ, இன்னும் யாருமே தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லவே மாட்டார்கள், சொல்லவும் முடியாது. நாம் எல்லோரும் கடவுளுக்கு அடிமை என்று நம்புகின்ற போது, நம்மையெல்லாம் படைத்து, பரிபாலித்து வரக்கூடிய ஒரு சர்வசக்தன் நம் அனைவரின் எஜமான் என்று நம்புகின்ற போது மனிதனுக்கிடையேயுள்ள வேற்றுமை களையெடுக்கப் படுகின்றன.

இப்படிப்பட்ட ஒற்றுமை 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று அரபியில் சொல்லக்கூடிய 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை' என்று தமிழில் மொழிபெயர்க்கக்கூடிய இந்த தத்துவத்தினால் ஏற்படக்கூடிய பயன் ஆகும்.

அடுத்தப்படியாக நாம் நம் இந்தியாவில் பார்க்கக்கூடிய ஜாதிப்பிரிவுகள் எங்ஙனம் இந்திய சமுதாயத்தைக் கூறுபோட்டுக் கொண்டு இக்கின்றது என்பதையும் மதத்தின் பெயரால், உயர்வு, தாழ்வு கற்பித்துக் கொண்டு மக்கள் சின்னாபின்னமாகி விடுவதையும் நம் நாட்டில் மட்டுமின்றி ஏனைய உலக நாடுகளிலும் பரவலாக நம்மால் காணமுடிகின்றது.

ஒரு மனிதனின் தோலின் நிறத்தை வைத்து அவன் தாழ்ந்தவன் என்றும் மற்றவன் உயர்ந்தவன் என்றும் சொல்லப் படுவதைப் பார்க்கின்றோம். இத்தகைய வேறுபாடுகள் ஓழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த வேறுபாடுகள் ஓழியும்? இத்தகைய வேறுபாடுகள் ஒழிவதற்காக உலகத்தில் இதுவரை தீட்டப்பட்டு வந்துள்ள திட்டங்கள் வெற்றியடைந்திருக்கின்றனவா எனில் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்.

இத்தகைய வேறுபாடுகள் ஒழிய வேண்டுமானால் மனிதன், தான் கடவுளுக்கு 'அடிமை' என்பதை உணர வேண்டும். ஒப்புக் கொள்ளவும் வேண்டும். அடிமை என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒருவன் தான் இன்னொருவனைவிடச் சிறந்தவன் என்று கூறமாட்டான் கூறவும் முடியாது.

நானும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றேன், நான் யாரைத் தாழ்ந்தவன் என்று நினைக்கின்றேனோ, அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கிகன்றான். நான் யாரை உயர்ந்தவன் என்று கருதுகின்றேனோ அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றான். ஆக எல்லோரும் கடவுளுக்கு அடிமை என்று நம்பும் போது பிறப்பின் அடிப்படையில் ஒருவன் சிறந்தவன் என்றும், மற்றொருவன் கீழானவன் என்றும் சொல்லக்கூடிய ஏற்றதாழ்வுகள் முற்றாகவே அடிபட்டுப் போகின்றன.

இங்ஙணம் அடிப்பட்டுப் போகச் செய்யக் கூடிய கொள்கைத் தத்துவம் தான் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லக் கூடிய வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை என்ற கொள்கைப் பிரகடனமாகும்.

இன்றைக்கு நம் சமூகத்தில் ஒரு மனிதன் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்று விட்டாலோ அல்லது சிறந்த பதவியை அடைந்துவிட்டாலோ அல்லது அதிகாரம் அவன் கைக்குள் வந்துவிட்டாலோ அல்லது மற்றவர்களைவிட ஏதாவது திறமை அதிகப்படியாக அவனிடம் இருந்துவிட்டாலோ, இவைகளெல்லாம் இல்லாத இன்னொருவன் அவனுக்கு சரணாகதி அடைகின்றான். அவனுடைய கால்களில் வீழ்ந்து கடக்கின்றான்.
ஆரசியல் தலைவரகளுடைய கால்களில் வீழ்ந்து கிடக்கும் கட்சிகளின் தொண்டர்களையும் செல்வந்தர்களின் பிடிகளில் வீந்திருக்கும் ஏழைகளையும் நாம் கண்கூடாகவே காண்கின்றோம்.

இப்படி எல்லா வகையிலும் சிறந்த ஒருவனை தன் முன்னால் காணும் போது, அவனுடைய கால்களில் போய் வழவேண்டும் என்று மனிதன் நினைக்கின்றான். இப்படி விழுவது அவனுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்பது தெரிந்தும் கூட அவன் இவ்வாறு செய்து கொண்டுதான் இருக்கின்றான்.

ஆக இப்படிச் செய்வதிலிருந்து மனிதனைத் தடுத்து நிறுத்தி அவன் ஒரு கடவுளுக்கு மாத்திரம் தான் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும் கடவுளைத் தவிர அத்தனை பேரும் சமமானவர்கள் தாம் என்ற எண்ணத்தை இந்தக் கொள்கைப் பிரகடனம் ஏற்படுத்துகின்றது. அனைவரும் நம்மைப் போலவே மல, ஜலத்தைச் சுமந்து கொண்டு இருப்பவர்கள் தாம், தாய் வயிற்றிலிருந்து உருவானவர்கள் தாம் என்று எல்லா மனிதனும் நினைக்க ஆரம்பித்து விட்டால், இவைப்போல உள்ள எந்த மனிதனின் காலிலும் விழமாட்டான் மற்றவர்கள் தம் காலில் விழவேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டான்.
இதைத்தான் திருமறைக்குர்ஆன் மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் பின்வருமாறு கூறுகின்றது.

'மனிதர்களே! உங்கள் அனைவரையும் ஒரு ஆண் பெண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம்!' (அல்குர்ஆன் 49:13)

'மனிதர்களே!' என்று உலக மக்கள் அனைவரையும் அல்லாஹ் அழைத்து தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்.

உங்கள் அனைவரின் மூலபிதா யார் எனில் ஒரு ஆண்தான், உங்கள் அனைவரின் மூலத்தாயும் ஒரு பெண்தான். இன்னும் தொடர்ந்து அல்லாஹ் கூறுகின்றான்.

ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து படைக்கப்பட்ட உங்களை குடும்பங்களாகவும் (கிளைகளாகவும்), கோத்திரங்களாகவும் ஆக்கியிருப்பது நீங்கள், உங்களை ஒருவரையொருவர் அடையாளம் காண்பதற்காகத்தான்.(அல்குர்ஆன் 49:13)

'உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கு அல்ல' என்று குர்ஆன் பிரகடனம் செய்கிறது.
இதனை லாயிலாஹா இல்லல்லாஹ்'வின் விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

இப்படி ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வந்து விடுமேயானால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இந்த உலகத்தில் இல்லாது அழிந்து ஓழிந்து போய்விடும்.

இதனை இஸ்லாம் ஒரு தத்துவமாக மட்டும் சொல்வதாக நீங்கள் எண்ணிவிடக் கூடாது. இன்றைக்கும் இஸ்லாம் இதை நடைமுறைப்படுத்திக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
.
.
நடைமுறைப்படுத்தப்படும் சமத்துவம்

கேட்பதற்கு இனிமையான தத்துவம் என்று மாத்திரம் அல்லது நடைமுறைப்படுத்தப்பட முடியாத வறட்டு தத்துவம் என்று மாத்திரம் நினைத்துவிடக்கூடாது. இந்தக் கொள்கை ஒருவனுடைய உள்ளத்தில் நுழைந்த பிறகு ஒருவனுடைய ஜாதியையும் அவனுடைய கோத்திரத்தையும் அவனுடைய பூர்வீகம் என்ன என்பதையெல்லாம் கவனிக்கவே மாட்டான். இந்தக் கொள்கையை ஏற்றுவிட்டால் என்னுடைய சகோதரன் என்று ஒவ்வொரு முஸ்லிமும் எண்ணி அவனிடம் கண்ணியமாக நடந்து கொள்வான்.

பள்ளிவாயில்களுக்கு யார் முதலில் தொழ வருகின்றாரோ அவர் தான் முதல் அணியில் நிற்க முடியும். இந்த நாட்டினுடைய ஜனாதிபதியே ஆனாலும் அவர் பின்னால் வந்தால் பின் வரிசையில் தான் நிற்க வேண்டும். வருவது ஜனாதிபதியாயிற்றே என்று மக்கள் நினைக்க மாட்டார்கள். அந்த ஜனாதிபதியும் நினைக்கமாட்டார். நான் ஜனாதிபதி என்னை முதல் வரிசையில் நிறுத்தங்கள் என்று அவரும் கேட்க முடியாது. அப்படி கேட்டால் வெளியே போ! என்று சொல்லும் அளவிற்கு இந்த சமுதாயம் பண்பட்டு இருக்கிறது.
  • இந்த பண்பாட்டைக் கொடுத்தது எது?
  • அவர்களை இப்பழ உருவாக்கியது எது?
எவனுக்கு தலை வணங்காமல் எல்லோரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கக் கூடிய பக்குவத்தை ஏற்படுத்தியது எது? என்ற கேள்வியெல்லாம் கேட்டால் ஒரே பதில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை' என்ற கொள்கைதான் அவர்களை இப்படி மாற்றியது.
.
.
சுயமரியாதையைப் போதித்த ஒரே மார்க்கம்

இதற்குச் சான்றாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மூஆத் (ரலி) என்ற ஒரு நபித்தோழர் இருந்தார். அவர் ஒரு நாட்டிற்குச் சென்றிருந்த போது அங்கே அரசவையில் ஒரு காட்சியைக் காண்கின்றார். அதாவது, அங்குள்ள மன்னருக்கு மக்கள் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து மரியாதை செய்யக் கூடிய காட்சியைப் பார்க்கின்றார். உடனே அவர் நாமும் நபி (ஸல்) அவர்களை சந்தித்த உடன் இதே போன்று செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு மதீனாவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க விரைகிறார்.

'அல்லாஹ்வுடைய தூதரே! நான் பல நாடுகளுக்கும் சென்றிருக்கின்றேன். அங்குள்ள மக்கள் அங்குள்ள மன்னர்களுக்கு சாஷ்டாங்கம் செய்யக் கூடிய நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கக் கூடிய காட்சியை நான் கண்டிருக்கின்றேன் என்று மூஆத் (ரலி) கூறினார்கள். மேலும் அந்த மன்னர்களைவிட உங்களுக்கு அதிகமான தகுதி இருக்கின்றது. அவர்களைவிட நாங்கள் அதிகமாகவே மதிக்கிறோம். உங்களுக்கும் நாங்கள் அதே மரியாதையை செய்கிறோம்'. என்று கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) கூடாது. அல்லாஹ்வுடைய தூதராக இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடைய காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதை மார்க்கம் தடுக்கின்றது. படைத்த இறைவனுக்கு மட்டும் தான் இந்த மரியாதையை செய்ய வேண்டுமென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்த வரலாற்றை நாம் இன்றும் காண்கின்றோம்.

இது மட்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர் அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள். 'நாங்கள் ஒரு அவையில் அமர்ந்திருப்போம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வருவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் யாருமே எழந்து நிற்கமாட்டோம். காரணம் இப்படி எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். மேலும் எழுந்து நிற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆகவே நாங்கள் அமர்ந்திருக்கும் ஒரு சபைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தால் நாங்கள் எழுந்து நிற்பதில்லை' என்று அனஸ் (ரலி) கூறுகிறார்கள் (நூல்: அஹ்மத்).
ஆக மனிதன் பிற மனிதனை மதிக்ககூடிய, எல்லோரும் சமமானவர்கள் என்று நடைமுறைப்படுத்திய ஒரு சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கூட எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்ற அளவுக்கு சுயமரியாதை மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இதற்கு அடிப்படைக் காரணம் 'லாயிலாஹ இல்லல்hஹ்' (வணக்கத்திற்கு சொந்தக்காரன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்ற ஏகத்துவ அடிப்படைக் கொள்கைதான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வளவு உயர்ந்த அந்தஸ்தை அடைந்த பின்னரும் அவர்கள் மன்னராகவும், மார்க்கத்தின் தலைவராகவும் இருந்தார்கள். அன்றைய நிலையில் அவர்கள் தாம் மிகப் பெரிய வல்லரசாகவும் இருந்தார்கள். அவர்களுடைய சாம்ராஜ்யம் தான் அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்களிலெல்லாம் வலுமிக்கதாக இருந்தது.

ஆக இவ்வளவு உயர்நத நிலையில் இருந்தும் கூட தம்முடைய தோழர்கள் தமது காலில் விழுவதையும் - ஏன் தமக்காக எழுந்து நிற்பதையும் கூட நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை என்று சொன்னால் அதற்கு காரணம் என்ன? 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை' என்று அவர்கள் பிரச்சாரம் செய்ததே. அந்த பிரச்சாரத்தில் மாறு செய்யக் கூடாது என்பதற்காக இப்படி நடந்தது கொண்டார்கள் என்பது தான் உண்மை.
நன்றி :  http://egathuvam.blogspot.in
.

Monday 13 August 2012

தமிழக முஸ்லீம்களின் தற்போதைய நிலை குறித்து BBC-யில் P.J பேட்டி!





தமிழக முஸ்லீம்களின் தற்போதைய நிலை குறித்து BBC தமிழோசை நடத்தி வரும் ஆய்வுத் தொகுப்பில் தமிழக முஸ்லீம்களின் வாழ்வுரிமைக்காக பல வருடங்களாக பல விதமான போராட்டங்களையும் இட ஒதுக்கீடுக்கான விழிப்புணர்வு மாநாடுகளையும் தொடார்ந்து நடத்தி வரும் தமிழக முஸ்லீம்களின் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் சகோ.பீ.ஜைனுல்  ஆபிதீன்  அவர்கள் 05.08.2012 அளித்த சிறப்பு பேட்டி.
(BBC வெளியிட்ட செய்தியை பார்க்க கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்)

http://www.bbc.co.uk/tamil/india/2012/08/120805_tnmuslimpart1.shtml
                                                                          படத்தை  கிளிக் செய்யவும்

"இஸ்லாம் இறைவனின் மார்க்கமே"

"இஸ்லாம் இறைவனின் மார்க்கமே"

இஸ்லாம் இறைவனின் மார்க்கமே – நிரூபித்த அமெரிக்க – இஸ்ரேல் ஆய்வு முடிவுகள்!


மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு மன அழுத்தத்தின் காரணமாக ஞாபக மறதி நோய் அதிகரித்து வருவதை நாம் கண்டு வருகின்றோம்.

இந்த நோய் ஐவேளைத் தொழுகையை குறித்த நேரத்தில் தொழும் தொழுகையாளிகளாக உள்ள முஸ்லிம்களை தாக்குவதில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்காலக் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஞாபக மறதி நோயால் 4 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்க, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் இது குறித்த ஆய்வில் இறங்கினர்.

டெல் அவீவ், யாஃபா, மற்றும் அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் கிளிவ்லேண்டில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒத்துழைப்புடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப டெக்னியான் என்ற இஸ்ரேல் நிறுவனம், மற்றும் ஐக்கிய சுகாதார அமெரிக்க தேசிய நிறுவனம் (ழிமிபி) ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஐவேளைத் தொழுகையை குறித்த நேரத்தில் தொழுபவர்களுக்கு இந்த ஞாபக மறதி நோய் தாக்குவதில்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது.

ஐவேளைத் தொழுகையை குறித்த நேரத்தில் தொழும் நபர்களுக்கு நோயின் கடுமை 24 சதவீதம் குறைவாக இருக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. அல்ஸிமர்ஸ் நோயை தடுக்க இதர பயிற்சி வகைகளை விட குறித்த நேரத்தில் தொழுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக ஆய்வு கூறுகிறது.

குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் ரிவேகா இஜெல்பெர்க் கூறுகிறார்.

65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை; ஐவேளை தொழும் முஸ்லிம்களை இது பாதிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இயந்திரத்தனமான வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் பல்வேறு வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாகத்தான் தன்னைத்தானே மறக்கக்கூடிய அளவிற்கு ஞாபக மறதி நோய் மனிதனை ஆட்கொள்கின்றது.

இத்தகைய நிகழ்வுகளினால் அல்லல்படும் மனிதனுக்கு அழகான தீர்வை இஸ்லாம் மட்டுமே வழங்குகின்றது. தொழுகையை முறையாகப் பேணித் தொழுவதால் மறுமையில் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்ற போதிலும் இந்த உலகத்திலும் எண்ணற்ற நன்மைகளை அல்லாஹ் மறைமுகமாக வைத்துள்ளான் என்பதையும் இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான்என்ற பேருண்மையும் இந்த ஆய்வின் மூலமாகத் தெரியவந்துள்ளது.

அல்லாஹ் தனது திருமறையில் கூறிக்காட்டுகின்றான் மனிதன் பதறக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான்.அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் திடுக்கிடுகிறான்.அவனுக்கு நன்மை ஏற்பட்டால் கொடுக்காமல் தடுப்பவனாக ஆகிறான்.தொழுகையாளிகளைத் தவிர.அவர்கள் தமது தொழுகையில் நிலைத்திருப்பார்கள்

அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும்.அவர்கள் தீர்ப்பு நாளை நம்புவார்கள்.அவர்கள் தமது இறைவனின் வேதனைக்கு அஞ்சுவார்கள்.

அல்குர்-ஆன் 70 : 19-27

இந்த ஆய்வின் முடிவில் என்ன சொல்லியுள்ளார்களோ அதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் தெளிவுபடுத்திவிட்டது.

பதறக்கூடியவனாக உள்ள மனிதனுக்குரிய மருந்து அவன் தொழுகையாளியாக மாறுவதுதான். அதைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து தற்போது கண்டுபிடித்துள்ளார்கள். இதன் மூலம் இஸ்லாம் இறைவனின் மார்க்கமே என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

தகவல் : காரைக்குடியிலிருந்து ஹக்கீம் சேட்

மின்சக்தியி​ல் இயங்கும் BMW எனும் எலிக்ட்ரானிக்கல் மோட்டார்வண்​டி

மின்சக்தியில் இயங்கும் ஆற்றல் கொண்ட BMW எனும் நவீன எலிக்ட்ரானிக்கல் மோட்டார் வண்டியினை ஜெர்மன் நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. சூழலுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைக்கப்பட்டுள்ள இவ்வண்டி அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சிறப்பு மின்கலத்தினைக் கொண்டே இயங்குகின்றது. இம்மின்கலத்தினை ஒரு முறை சார்ச் செய்வதன் மூலம் 62 மைல்கள் தூரம் பயணிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும், இதன் அதி உச்ச வேக வரையறையாக மணிக்கு 75 மைல்கள் என்ற வேகத்தில் பயணிக்கக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெருநாள் கொண்டாட்டமும், கொலைவெறி சுடிதாரும்.

பெருநாள் கொண்டாட்டமும், கொலைவெறி சுடிதாரும்.

புனிதமிக்க ரமழான் மாதம் முடிவுறும் தருவாயில் ஈகைத் திருநாளான நோன்புப் பெருநாளை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த சந்தர்ப்பத்தில் பெருநாள் சந்தோஷத்தைக் கழிப்பதற்காக இஸ்லாமியர்கள் புத்தாடை வாங்கும் படலத்தை நோன்பின் ஆரம்பத்திலேயே துவக்கிவிட்டார்கள். பெருநாளைக்காக புத்தாடை அணிவதை இஸ்லாம் தாராளமாக வரவேற்கின்றது. புத்தாடை அணிய வேண்டும்.
ஆனால் பெருநாள் சந்தோஷத்தைக் கழிப்பதற்காக ஆடை வாங்குவதாகக் கூறிக் கொண்டு புனிதமிக்க இறுதிப் பத்தின் புனிதமான நேரங்களை வீனடிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பதில்லை.
ரமழானின் இறுதிப் பத்தை எடுத்துக் கொண்டால் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் குடும்பத்துடன் இரவு, பகல் என்று பாராமல் ஆடைக் கடைகளில் நிறம்பி வழிவதைக் காண முடிகின்றது. இறுதிப் பத்தென்றாலே பெருநாள் ஆடை வாங்குவதற்குறிய நாட்கள் தான் என்பதைப் போல் மக்கள் மத்தியில் ஒரு நிலைபாடு உருவாகியிருக்கிறது.
கொலைவெறி சுடிதார் தான் எனக்கு வேண்டும்.
இதே நேரம் இஸ்லாத்தை படித்து அதன்படி குழந்தைகளை வளர்க்க வேண்டிய பெற்றோர் சினிமாவின் நிழலில் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதின் விளைவு, பெருநாள் ஆடையைக் கூட சினிமாக்காரனின் ஆடையாக இருக்க வேண்டும் என்று நம் பிள்ளைகளும், பெற்றோர்களும் விரும்புகின்றார்கள்.
பெருநாள் தினம் நெருங்கிவிட்டாலே சினிமா திரைப்படங்களின் பெயர்களிலும், ஹீரோ, ஹீரோயின்களின் பெயர்களிலும் தான் ஆடைகள் கூட வெளியிடப்படும். காரணம் மக்கள் சினிமா மேல் வைத்துள்ள மோகத்தை வியாபாரமாக்குவதுதான் வியாபாரியின் யுக்தி.
இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள இரு பெருநாட்களிலும் பெருநாள் அல்லாத நாட்களிலும் இஸ்லாம் காட்டித் தந்த அடிப்படையில் தான் நமது ஆடைகள் இருக்க வேண்டுமே தவிர நாம் நினைப்பதைப் போல் மார்க்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாக இருக்கக் கூடாது.
முழு கையையும் மணிக்கட்டு வரை மரைக்க வேண்டிய பெண்கள் முழுக் கையையும் திறந்து கொண்டு, இறுக்கமாக ஆடை அணிந்து மறைக்க வேண்டிய பகுதிகளையும் திறந்து கொண்டு திரியக் கூடிய காட்சியை அன்றாடம் காண முடிகின்றது.
திருமறைக் குர்ஆன் நமக்கு சொல்லும் அறிவுரையைப் பாருங்கள்.
விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும்  அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
(அல்குர்ஆன் : 57 : 20)
மேற்கண்ட திருமறைக் குர்ஆன் வசனம் உலக வாழ்வின் யதார்த்தத்தை மிகத் தெளிவாக விளக்குகின்றது. உலகத்தை மழைக்கு ஒப்பாக்கிக் காட்டுவதின் மூலம் உலக வாழ்வு எப்படிப்பட்டது என்பதைப் பற்றி தெளிவாகின்றது.
இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?
(அல்குர்ஆன் : 29 : 64)
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?
(அல்குர்ஆன் : 6 : 32)
பெருநாள் தினத்தை இஸ்லாம் எந்த முறையில் கொண்டாடும் படி பணித்துள்ளதோ அந்த முறையில் மார்க்கத்திற்கு உட்பட்டு கொண்டாடி மகிழ்வோமாக!
நன்றி Rasmin misc

பாபா ராம்தேவ் கைது, பாஜக முழு ஆதரவு




நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்ட பாபா ராம்தேவ் சற்று முன் புது டில்லி காவல் துறையினரால் கைது செய்யபட்டார். கைதுக்கு முன் தனது ஆதரவாளர்களிடம் பேசிய ராம்தேவ், ”மத்திய அரசின் பொம்மையாக டில்லி காவல் துறை செயல்படுகிறது” என்றும், ”நாங்கள் அமைதியான முறையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி புறபட்டதற்காக கைது செய்யப்படுவது ஜனநாயக படுகொலை” என்றார்.
கறுப்பு பணத்தை கொண்டு வர தைரியமில்லாத காங்கிரஸ் அரசை அகற்றுவதே தனது தலையாய பணி என்று கூறிய ராம்தேவ், அடுத்த நாடாளுமண்ற தேர்தலில் குற்றவாளிகள் யாரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்றார். பேரணி புறப்படும் முன் பாஜக தலைவர் நிதின் கட்காரியும், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவும் ராம்தேவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். கறுப்பு பணத்திற்கெதிராகவும், இலஞ்ச ஊழலுக்கெதிராகவும் போராடும் ராம்தேவிற்கு, பாஜக முழு ஆதரவளிக்கும் என நிதின் கட்காரி உறுதியளித்தார். கூடியிருந்த ராம் தேவ் ஆதரவாளர்களிடம் பேசிய நிதின், ஊழல் கறைபடிந்த காங்கிரஸ் ஆட்சியை அகற்ற அனைவரும் பாடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
 செய்திகள் at www.inneram.com

மும்பை வன்முறை : ரஸா அகாடமி விளக்கம்


மும்பையில் சனியன்று திடீரென்று ஏற்பட்ட கலவரத்தால் இரு உயிர்கள் பலியாகின. காவலர்கள் உட்பட 55 பேர் காயமடைந்தனர். தற்போது மும்பையில் இயல்புநிலை திரும்பியுள்ளது.
மியான்மரில் இனப் படுகொலைகளுக்கு ஆளாகிவரும் முஸ்லிம்களுக்கு ஆதரவு வேண்டியும், அஸ்ஸாம் கலவரத்தைக் கண்டித்தும் ரஸா அகாடமி என்னும் முஸ்லிம் நல்லிணக்க அமைப்பு பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.  ரஸா அகாடமி அமைப்பு அழைப்பு விடுத்திருந்த இந்த பேரணி, மியான்மரில் ஹிந்துக்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைக் கண்டித்தும் கோஷம் எழுப்பியது. இந்த பேரணியில்  மும்பை காவல்துறை முன்னாள் உயரதிகாரியான ஷம்ஷீர்கான் பதான் என்பவரின் அவாமி விகாஸ் கட்சியும் இணைந்திருந்தது.

பேரணிக்கு சுமார் 2000 பேர் வரக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில், 20,000க்கும் மேல் மக்கள் திரண்டு வந்தனர் என்றும், தாங்கள் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றும்  ரஸா அகாடமி தலைவர் முஹம்மது சயீத் நூரி தெரிவித்தார். "நிச்சயமாக, முஸ்லிம்கள் குறிப்பாக, இந்தப் புனித ரமளான் மாதத்தில்  இதுபோன்ற நாசகார செயல்களில் ஈடுபட மாட்டார்கள். எங்கள் பேரணியை சில சமூக விரோதிகள் பயன்படுத்திக்கொண்டு நாசகார செயல்களைச் செய்துவிட்டனர். அதற்காக முஸ்லிம்கள் சார்பாக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறோம்; வருந்துகிறோம் " என்றார் அவர்.

ஏவிபி எனப்படும் அவாமி விகாஸ் பார்ட்டி தலைவரும், காவல்துறை முன்னாள் உயரதிகாரியுமான ஷம்ஷீர் கான் பதான் கூறுகையில்,பேரணியில் வன்முறையைத் தூண்டும் வகையில் எவரேனும் பேசினரா என்பது குறித்தும் ஆராயப்படுவதாகச் சொன்னார். "பரவுவதற்கு வாய்ப்பாக இருந்த கலவர நெருப்பை காவல்துறை திறமையாக தொடக்கத்திலேயே அணைத்துவிட்டது" என்றார் ஷம்ஷீர்கான் பதான்.

சனிக்கிழமை நிகழ்ந்த வன்முறைக்குக் காரணமான 20 பேர் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு, திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின்கீழும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். " காவல்துறையினர் தேவையான இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது" என்றார் அவர்.

செய்திகள் at www.inneram.com

ஃபாஸ்ட் டிராக் ஓட்டுநர்கள் – தாடி வைக்க தடையா? – ‎களத்தில் டிஎன்டிஜே

ஃபாஸ்ட் ட்ராக் என்னும் நிறுவனம் வாடகைக்கு கார் மற்றும் டாக்ஸிகளை ‎இயக்கும் ஒரு நிறுவனம். இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ‎இதன் கிளைகள் உள்ளன. 4000 வாகனங்களுக்கு மேல் இவர்களது ‎கட்டுப்பாட்டில் உள்ளது. எந்த நேரத்திலும் வாடகைக்கு கார்களை பிடிப்பதற்கு ‎ஏதுவாக 24மணி நேர சேவையைச் செய்து வருகின்றனர்.‎

இந்த நிறுவனத்தின் சென்னை கிளையின் கீழ் இயங்கும் பிரிவில் ‎ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் ஓட்டுநராக பணியாற்றுகின்றனர். சிலர் ‎தங்களது சொந்த வாகனங்களை அந்த நிறுவனத்தில் பணி ஒப்பந்த ‎அடிப்படையிலும் இயக்குகின்றனர். ஃபாஸ்ட் ட்ராக் நிறுவன தொலைபேசி ‎எண்ணைத் தொடர்பு கொள்ளும் பயணிகளுக்கு ஓட்டுநர்களுடைய ‎தொலைபேசி எண்ணைக் கொடுத்து பிக்அப் செய்து பயணிகளின் ‎தேவையைப் பூர்த்தி செய்வது இவர்களது நிறுவனம் செய்யும் தொழில் ‎நடைமுறையாகும்.‎
‎ 
கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் சார்பாக சென்னை விமான நிலையத்தில் ‎உள்ள அவர்களது அலுவலகத்தில் ஓர் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது. சில ‎ஒழுங்குமுறைகளை பேணக்கூடிய ஓட்டுநர்களுக்கு மட்டும்தான் பயணிகளை ‎ஏற்றிச் செல்ல பிக்அப் தருவோம் என்று கூறி சில விதிமுறைகளை ‎அறிவித்து அறிவிப்பு பேனரும் வைத்துள்ளனர் அந்த நிறுவனத்தினர். அந்த ‎அறிவிப்பு பேனரில், “ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் ‎அனைவரும் முகச்சவரம் செய்திருக்க வேண்டும்” என்ற அறிவிப்பைப் பார்த்த ‎முஸ்லிம் ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்தனர்.‎
‎ 
முகச்சவரம் செய்யாமல் தாடி வைத்திருக்கும் ஓட்டுநர்களுக்கு பிக்அப் ‎தரப்படமாட்டாது என்று அலுவலகத்திலும் சொல்லப்பட, அதிர்ச்சியடைந்த ‎முஸ்லிம் ஓட்டுநர்கள் நீதிகேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ‎தலைமையகத்திற்கு கடிதம் எழுதினர்.‎
‎ 
அந்த கடிதத்தில் தாடி வைத்துள்ளதால் தங்களுக்கு பிக்அப் தர ‎மறுக்கின்றார்கள். எனவே எங்களுக்கு நீதி வேண்டும் என்று பல முஸ்லிம் ‎ஓட்டுநர்கள் கையெழுத்திட்டுக் கடிதம் கொடுத்தனர்.‎
‎ 
இந்த விஷயத்தில் நீதிகேட்டு உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ‎மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுக்க களத்தில் குதித்தது.‎
‎ 
மாநிலச் செயலாளர் மாலிக், மாநிலச் செயலாளர் ஜப்பார் மற்றும் ‎தென்சென்னை மாவட்டச் செயலாளர் கமர்தீன் ஆகியோர் அடங்கிய ‎குழுவினர் நுங்கம்பாக்கத்திலுள்ள ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தின் தலைமை ‎அலுவலகத்திற்குச் சென்று அங்கு அந்த நிறுவனத்தின் சென்னை நகரத்தின் ‎மேனேஜிங் டைரக்டர் அம்பிகாபதி அவர்களைக் கடந்த 27.07.12 ‎வெள்ளிக்கிழமை அன்று மாலை 5மணிக்கு சந்தித்தனர்.‎
‎ 
உங்களது நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லிம் ஓட்டுநர்கள் தாடி வைக்கக் ‎கூடாது என்று உத்தரவு போட்டிருப்பதாகவும், அவ்வாறு தாடி வைத்திருந்தால் ‎பிக்அப் தரமாட்டோம் என்று அலுவலகத்தில் சொல்வ தாகவும் கூறப்படும் ‎செய்தியை அவரிடம் தெரிவிக்க, சில ஒழுங்குமுறைகளைப் பேணி, சுத்தபத்த ‎மாகவும், அழகாகவும் ஓட்டுநர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான் ‎அவ்வாறு அறிவிப்பு செய்யப்பட்டதாகவும், முஸ்லிம்கள் மீது தங்களுக்கு எந்த ‎வெறுப்புணர்வும் இல்லை என்றும், யாராவது அலுவலக பொறுப்பாளர்கள் ‎பிக்அப் தர மறுப்பதாகச் சொன்னால், என்னிடத்தில் உடனடியாக அந்த ‎ஓட்டுநர்களைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். உடனே நான் அந்த ‎குறையை சரிசெய்து விடுகின்றேன் என்றும் சென்னை நகரத்தின் மேனேஜிங் ‎டைரக்டர் அம்பிகாபதி அவர்கள் நமது நிர்வாகிகளிடம் தெரிவித்து, 98410 ‎‎29250 என்ற தனது தொலைபேசி எண்ணையும் நம்மிடம் வழங்கினார்.‎
‎ 
மேலும், இந்து, முஸ்லிம், கிறித்தவ, சீக்கிய மதத்தவர்களும் வாழும் ‎இந்நாட்டில் சீக்கியர்கள் ஓட்டுநர்களாக வரும்போது அவர்களிடத்தில் ‎தலைப்பாகையையும், தாடியையும் எடுக்க வேண்டும் என்று சொன்னால் அது ‎சரியா? சட்டதிட்டங்கள் அனைத்துமே மத சுதந்திரத்திலும், மத ‎உரிமைகளிலும் தலையிடாதவாறுதானே அமைக்கப்பட்டுள்ளது என்று நாம் ‎சுட்டிக்காட்டியவுடன் அதை அவர் ஏற்றுக் கொண்டார்.‎
‎ 
இந்தத் தகவலை ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லிம் ‎ஓட்டுநர்களிடத்தில் தெரிவித்தவுடனேயே அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி ‎அடைந்தனர். மேலும் ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ‎அம்பிகாபதி அவர்களது தொலைபேசி எண் அனைத்து முஸ்லிம் ‎ஓட்டுநர்களிடத்திலும் வழங்கப்பட்டது.‎
‎ 
ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அம்பிகாபதி அவர்கள் ‎நம்மிடத்தில் மேற்கண்டவாறு கூறியவுடனேயே அவர்கள் நிறுவனத்தார் ‎வைத்த அறிவிப்பில் முகச்சவரம் செய்தால்தான் பிக்அப் வழங்கப்படும் என்ற ‎அறிவிப்பை அகற்றிவிட்டனர் என்பது பாராட்டத்தக்க விஷயம்.‎
‎ 
தங்களது உரிமையை பெற்றுத்தந்ததற்காக ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தில் ‎பணியாற்றும் முஸ்லிம் ஓட்டுநர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ‎நன்றி தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.‎
நன்றி tntj.net

டிஎன்டிஜே வின் ஸஹர் நேர நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்த ‎ஜமாஅத்துல் உலமா!‎

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் டிஎன்டிஜேவினரால் விளம்பரம் ‎செய்யப்படுகின்றதோ இல்லையோ, நம்மை எதிர்க்கும் எதிரிகளால் நல்ல ‎முறையில் இலவசமாக விளம்பரம் செய்யப்பட்டு அதனால் நமக்கு நல்ல ‎பலன் கிடைக்கின்றது.‎
‎ 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தக்கூடிய பல பிரச்சாரக்கூட்டங்கள் ‎பற்றிய செய்திகள் சுன்னத்வல் ஜமாஅத் மக்களுக்கு முழு அளவில் ‎சென்றடைவதில்லை. அவற்றை தடுத்து நிறுத்துகின்றேன் பேர்வழி என்று ‎சொல்லிக் கொண்டு நமது எதிரிகள் நமக்கு எதிராகக் கூட்டம் போட்டு, ‎‎“டிஎன்டிஜேவினர் இந்த தேதியில், இந்த இடத்தில் கூட்டம் போடுகின்றார்கள்; ‎யாரும் அங்கு போக வேண்டாம்” என்று பிரச்சாரம் செய்ய அதற்குப் ‎பிறகுதான் இப்படி ஒரு பிரச்சாரம் நடத்தப்படுவதை அறிந்துகொண்டு ‎வெள்ளமென தவ்ஹீத் ஜமாஅத் நடத்தக்கூடிய நிகழ்ச்சியைக் காண மக்கள் ‎அலைமோதி வருகின்றார்கள்.‎
‎ 
இதுதான் தொடர்ச்சியாக அனைத்து ஊரிலும் நடந்து வருகின்றது. ஒரு ‎வகையில் இப்படி நமது நிகழ்ச்சிக்கு இலவச விளம்பரம் செய்து தரும் ‎இவர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.‎
‎ 
பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைக்கூட்டம் என்று நாம் நடத்தும் ‎பிரச்சாரக்கூட்டங்களுக்கு இத்தகைய எதிர்ப்பு தெரிவித்து இலவச ‎விளம்பரங்கள் செய்து தந்தவர்கள், டிஎன்டிஜே நடத்தக்கூடிய ஸஹர் நேர ‎நிகழ்ச்சிக்கும் இப்படி இலவச விளம்பரம் செய்து அனைத்துத் தரப்பு ‎மக்களையும் நமது மெகா டிவி நிகழ்ச்சியைப் பார்க்கத் தூண்டியுள்ளனர்.‎
‎ 
ரமலான் முழுவதும் மெகா டிவியில் அதிகாலை 3.30 மணி முதல் மாநிலத் ‎தலைவர் பீஜே அவர்கள் உரையாற்றக்கூடிய, “மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் ‎கூறும் மகத்தான தீர்வு” என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. அதைத் ‎தொடர்ந்து, “தர்காக்களில் நடப்பது என்ன?” என்ற சிறப்பு புலனாய்வு தொடரும் ‎ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. மெகா டிவியில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ‎இந்த நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‎இந்நிலையில் கரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினர் ஒரு துண்டுப் ‎பிரசுரத்தை வெளியிட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிக்கு இலவச ‎விளம்பரம் செய்து தந்துள்ளனர். ‎
‎ 
“ஸஹர் நேரத்தில் மக்களைக் குழப்பும் விதமாக நடத்தப்படும் நிகழ்ச்சியை ‎யாரும் பார்க்க வேண்டாம்; அவர்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிக்கு வர்த்தக ‎ரீதியாக எந்த விளம்பரமும் கொடுக்க வேண்டாம்” என்று வயிறெரிந்து போய் ‎துண்டுப்பிரசுரம் அடித்து வெளியிட்டு தங்களது வயிற்றெரிச்சலைக் ‎காட்டியுள்ளனர். ‎
‎ 
“தெளிவாக இஸ்லாத்தை எடுத்துச் சொல்கின்றோம் என்று கூறி மக்களை ‎குழப்பி, ஏன்தான் இந்த ரமளான் மாதம் வருகின்றதோ என்று மக்கள் ‎நினைக்கக்கூடிய அளவிற்கு நாம் நிலைமையை ஏற்படுத்திவிட்டோம்” என்று ‎தங்களது எரிச்சலை கொட்டித் தீர்த்துள்ளனர் அந்த போலி சுன்னத் வல் ‎ஜமாஅத்தார்கள்.‎
‎ 
ஜமாஅத்துல் உலமா சபையினர் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தை ‎பார்த்துவிட்டு பல சுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்கள் நம்முடைய ‎நிர்வாகிகளை அணுகி தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நிகழ்ச்சி எந்த டிவியில் ‎நடத்துகின்றீர்கள் என்று கேட்க, ஜமாஅத்துல் உலமா சபையினர் அடித்த ‎துண்டுப் பிரசுரத்தின் வாயிலாக சுன்னத் வல் ஜமாஅத் மக்களிடத்தில் நமது ‎நிகழ்ச்சி குறித்த செய்தி செவ்வனே சென்றடைந்துள்ளது என்பதை நமது ‎நிர்வாகிகள் விளங்கிக் கொண்டனர். ‎
‎ 
போதாக்குறைக்கு நம்முடைய கரூர் நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சி குறித்த 3500 ‎துண்டுப் பிரசுரங்களை அக்கம்பக்கத்திலுள்ள கிராமங்கள் உட்பட கரூர் ‎மாவட்டத்தின் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்ல தவ்ஹீத் ‎ஜமாஅத்தின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி பல்வேறு தரப்பு மக்களின் ‎மனக்குழப்பத்தைத் தீர்த்து வருகின்றது. ‎
‎ 
ஸஹர் நிகழ்ச்சி பார்க்க வேண்டாம் என்று நாம் அடித்து வெளியிட்ட ‎துண்டுப் பிரசுரம்தான் தவ்ஹீத் ஜமாஅத்தினரின் நிகழ்ச்சி குறித்து பரபரப்பை ‎ஏற்படுத்திவிட்டது. இதற்கெல்லாம் நாம் தான் காரணமோ? என்றும், நாமே ‎இவர்களுக்கு இலவச விளம்பரம் செய்து கொடுத்துவிட்டோமே! என்றும் ‎ஜமாஅத்துல் உலமா சபையினர் தற்போது மனக்குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக ‎தகவல்கள் வருகின்றன.‎
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!‎

நன்றி tntj.net

Sunday 12 August 2012

நபி வழியை அழிக்கத் துடிக்கும் இஸ்லாமிய போராளிகள்(?)‎

முஸ்லிம்களின் நலன் காக்கும் கட்சி என்று தங்களைச் சொல்லிக் கொண்டு ‎இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் அழிப்பதை ஒன்றை மட்டுமே ‎அஜெண்டாவாக வைத்து செயல்படும் ம.ம.கட்சியினரின் அட்டூழியம் வர வர ‎எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது.‎
‎ 
இஸ்லாமியர்களை கருவறுக்கத்துடிக்கும் பிஜேபி இல.கணேசனுடன் ‎கைகோர்த்து போஸ் கொடுத்ததாகட்டும், கொலைக்கு கொலைதான் தீர்வு ‎என்ற அல்லாஹ்வின் சட்டத்தை அழிக்கத்துடித்து தீர்மானம் ‎நிறைவேற்றியதாகட்டும். இப்படி இவர்களது போக்கு அதளபாதாளத்தை ‎நோக்கியும், நரகப்படுகுழி நோக்கியும் சென்று கொண்டிருக்கும் ‎இதேவேளையில், நபி வழி அடிப்படையில் ஒரு ஜனாஸாவை நல்லடக்கம் ‎செய்யவிடாமல் இவர்கள் தடுத்து, அங்கு கலவரம் செய்து நபி வழி ‎அடிப்படையில் ஜனாஸாவை நல்லடக்கம் செய்த டிஎன்டிஜேவினர் மீது ‎கொலைவெறித் தாக்குதல் நடத்தி தாங்கள் எத்தகைய கொலைவெறியர்கள்; ‎இஸ்லாமிய எதிரிகள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.‎
‎ 
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் இவர்களது இந்த ‎கொலைவெறிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.‎
‎ 
கடந்த 04.08.12 அன்று லெப்பைக்குடிக்காடு டிஎன்டிஜே கிளைச் செயலாளர் ‎நாசர் அவர்களின் தாயார் ஆயிஷா கனி (வயது 60) அவர்கள் நள்ளிரவு 1.30 ‎மணியளவில் வஃபாத்தாகி விட்டார். ‎
‎(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).‎
‎ 
லெப்பைக்குடிக்காடு சுன்னத் வல் ஜமாஅத் மேற்கு ஜாமிஆ பள்ளிவாசலில் ‎இந்த செய்தியைச் சொல்லி அறிவிப்பு செய்யச் சொல்ல, நபி வழிக்கு ‎மாற்றமான முறையில் அடக்கம் செய்ய ஒப்புக் கொண்டால்தான் நாங்கள் ‎மரணச் செய்தியை அறிவிப்பு செய்வோம். அதற்கு நீங்கள் ‎சம்மதிக்காவிட்டால் நாங்கள் அறிவிப்புச் செய்ய இயலாது என்று அவர்கள் ‎கூறியுள்ளனர்.‎
‎ 
மேலும், அப்படி நபி வழி அடிப்படையில் பள்ளிவாசலில் வைத்துத் ‎தொழுகை நடத்தவும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். நீங்கள் வேறு ‎எங்காவது தொழுகை நடத்திக் கொள்ளுங்கள். எங்களது மையவாடியில் ‎அடக்கம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி, அடக்கம் செய்வதற்கு மட்டும் ‎அனுமதியளித்தனர்.‎
‎ 
ஆனால், இவர்கள் எப்படி நமது பள்ளிவாசல் மையவாடியில் ஜனாஸாவை ‎அடக்கம் செய்யலாம் என்று கூறி பெரம்பலூர் மாவட்ட த.மு.மு.க. வின் ‎தலைவர் மீரான் மைதீன் மற்றும் த.மு.மு.க. குண்டர்கள் எப்படியாவது ‎நல்லடக்கத்தைத் தடுத்து நிறுத்தி இவர்கள் நபி வழிக்கு உயிர் கொடுப்பதை ‎மவுத் ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் ‎இறங்கியுள்ளனர்.‎
‎ 
04.08.12 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு லெப்பைக்குடிக்காட்டில் உள்ள ‎அலி அக்பர் தெருவில், நடுத்தெருவில் ஜனாஸா தொழுகை நடைபெற்றது. ‎அடக்கம் செய்தபிறகு நமது பெரம்பலூர் மாவட்ட பேச்சாளர் முயினுத்தீன் ‎அவர்கள் ஒரு உரை நிகழ்த்தியுள்ளார்.‎
‎ 
அப்போது திடீரென்று புகுந்த பெரம்பலூர் மாவட்ட த.மு.மு.க வின் ‎தலைவர் மீரான் மைதீன் மற்றும் த.மு.மு.க. குண்டர்கள் மற்றும் இந்திய ‎யூனியன் முஸ்லிம் லீக்கின் பம்பாய் அப்துல் சுப்ஹான் ஆகியோர் அடங்கிய ‎கொலைவெறிக் கும்பல் பெரம்பலூர் மாவட்டப் பேச்சாளர் முயினுத்தீன், ‎லெப்பைக்குடிக்காடு கிளைச் செயலாளர் நாசர், மற்றும் உறுப்பினர் அலாவுதீன் ‎ஆகியோரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளனர். தாக்கும் போது ‎உங்களைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று கொலைவெறியுடன் ‎தாக்கியுள்ளனர். காயமுற்ற நமது சகோதரர்கள் பெரம்பலூர் அரசு ‎மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.‎
‎ 
உடனடியாக தமுமுக தலைவர் மீரான் மைதீன் மற்றும் அந்தக் ‎கொலைவெறிக் கும்பல் மீது மங்கலம் மேடு காவல்நிலையத்தில் புகார் ‎அளிக்கப்பட்டது.‎
‎ 
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மங்கலம் மேடு காவல்நிலையத் ‎துணை ஆய்வாளர் அவர்கள் நேரில் வந்து காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு ‎உள்ளான நமது சகோதரர்களிடத்தில் வாக்குமூலம் பெற்றுச் சென்றார்.‎
‎ 
நல்லடக்கம் செய்வதற்கு பள்ளிவாசல் ஜமாஅத்தார்களே அனுமதி ‎கொடுத்தபிறகு அதை தடுக்கும் ம.ம.கட்சியினர் இஸ்லாத்தின் அடிப்படையை, ‎நபி வழியை ஒழிப்பதையே இவர்கள் முழு மூச்சாகவும், முழு ‎நேரப்பணியாகவும் செய்து வருகின்றனர் என்பது இந்த நிகழ்வின் ‎வாயிலாகவும் வெட்ட வெளிச்சமாகியது.‎
‎ 
நாம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவுடன், வழக்கம்போல ‎நம்முடைய சகோதரர்களைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், நம் ‎சகோதரர்களைத் தாக்கிவிட்டு, தாங்கள் தாக்கப்பட்டதாகவும் பொய்ப் புகார் ‎கொடுத்துள்ளது இந்த சதிகாரக்கும்பல்.‎
‎ 
05.08.12 அன்று காலை 11மணியளவில் மங்கலம் மேடு காவல் ‎நிலையத்தில் தற்காலிக பொறுப்பு வகிக்கும் பொறுப்பு ஆய்வாளர் ‎கோவிந்தராஜன் அவர்கள் தலைமையில் தமுமுக குண்டர்களை அழைத்து ‎அவர் விசாரணை நடத்தினார். விசாரணையில் டிஎன்டிஜேயினர் தங்களது ‎விருப்பப்படி மதச் சடங்குகளை செய்வதற்கு நீங்கள் எப்படித் தடை ‎போடலாம் என்று ஆய்வாளர் கேட்டதற்கு விழிபிதுங்கிய குண்டர்கள் தாங்கள் ‎செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிக் கொடுத்து, இனிமேல் ‎தவ்ஹீத் ஜமாஅத்தினரின் எந்தப் பிரச்சனையிலும் தலையிட மாட்டோம் ‎என்று கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர்.‎
‎ 
ரமளான் மாதமாக இருந்த காரணத்தினாலும், பிரச்சனையை பெரிதுபடுத்த ‎வேண்டாம் என்பதாலும் நமது நிர்வாகிகள் அவர்கள் திருந்தினால் சரிதான் ‎என்று கூறி பெருந்தன்மையுடன் மன்னிப்பளித்தனர்.‎
‎ 
நம்மை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் ஏகத்துவத்தை எதிர்க்கும் தாருஸ் ‎ஸலாம் என்ற டிரஸ்ட்டைச் சேர்ந்த ரஃபீ என்பவன் இந்த விஷயத்தில் ‎தமுமுகவினருடன் சேர்ந்து கொண்டு நம் சகோதரர்களைப் பார்த்து செருப்பை ‎எடுத்துக்காட்டியது இந்தக்கூட்டம் எந்த அளவிற்கு வழிகேட்டில் ஒன்று ‎கூடுகின்றது என்பதைத் தெள்ளத் தெளிவாக படம்பிடித்துக்காட்டுவதாக ‎அமைந்தது.‎

ஈரானில் பயங்கர பூகம்பம்

வடமேற்கு ஈரானில் அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள் தாக்கியதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 180 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1300 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது

தாப்ரிஜ் நகரின் அருகிலும் மற்றும் அஹார் டவுனை அடுத்துள்ள கிராமங்களயும் பூகம்பம் தாக்கியுள்ளது இது ரிக்டரில் 6.4 மற்றும் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

பூகம்பத்தை தொடர்ந்து இக்கிராமங்களில் உள்ள தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் கடினமாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
செய்திகள் at www.inneram.com