Thursday 5 July 2012

நரகத்திற்கு வழிகாட்டும் ஆம்வே வியாபாரம்!

நரகத்திற்கு வழிகாட்டும் ஆம்வே வியாபாரம்!


ஆம்வே ஒரு மோசடி வியாபாரம்
ஆம்வே ஒரு மோசடி வியாபாரம் என்பதை உணர்வு, ஏகத்துவம், மற்றும் தீன்குலப் பெண்மணி இதழ்களில் விரிவாக விளக்கியுள்ளோம்.
தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.
தவ்ஹீத் வாதிகள் என்று சொல்லிக் கொள்வோரில் ஆம்வே உறுப்பினர்களால் மூளைச் சலவை செய்யப்பட்ட சிலர் இந்த ஹராமான வியாபார முறையை ஹலால் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதில் கடையநல்லூர் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே இந்த ஹராமான வியாபாரத்தில் சிக்குண்டு இம்மை மறுமை வாழ்வை நாம் தொலைத்து விடக் கூடாது என்று எச்சரிக்கை செய்வதற்காகவே இந்தப்பதிவு. இது சகோதரரின் பதிவு .
நரகத்திற்கு வழிகாட்டும் ஆம்வே வியாபாரம்
“ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?” இது தான் MLMநண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.
ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று “இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்” என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் “AMWAY“ இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர்.
ஆனால்AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS)மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.
FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.
ஏமாற்றும் வழிகள்:
இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.
நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.
►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 – 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).
►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)
மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.TOOTHBRUSH(1) – 19 ரூபாய்
HAIR OIL(500 ML) – 95 ரூபாய்
SHAVING CREAM(70G) – 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்
FACE WASH -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) – 2929 ரூபாய்
மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.
நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?
► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)
►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)
► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.
இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:
►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.
►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் 
►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.
இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.
►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)
100 x 995 = 99500 ரூபாய்
இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.
3000 x 100 = 300000 ரூபாய்
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).
இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.
இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.
300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.
லட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.
இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்
பொய்யே ஆம்வே வியாபாரத்தின் மூலதனம்
நபியவர்கள் பொய்கூறி வியாபாரம் செய்வதையும், மோசடி வியாபாரத்தையும், ஏமாற்று வியாபாரத்தையும் தடைசெய்துள்ளார்கள்.
ஆனால் இந்த ஆம்வே மோசடி வியாபாரத்தின் மூலதனமே பொய்தான்
பொய் சொல்வதற்கு மிக அற்புதமாக இந்தப் பொய்யர்கள் பயிற்சி அளிக்கின்றனர்
இவர்கள் ஒவ்வொரு பொருட்களையும் பரிந்துரைக்க சொல்லும் வார்த்தை பக்கவிளைவுகள் இல்லை என்பதுதான், இன்னும் ஒரு சிலர் இந்த பொருட்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் விரைவில் நோய் வாய் பட்டு இறந்துவிடுவீர்கள் என்பது போல பயமுறுத்தியும் வருகின்றனர். இவர்கள் அதிகமாக பரிந்துரைக்கும் பொருட்கள் என்று பார்த்தால் NUTRILITE பொருட்கள்தான் அதிலும் இவர்கள் பரிந்துரைக்கும் பொருட்கள் என்று பார்த்தால் ப்ரோட்டின் பவுடர்தான் இந்த ப்ரோடீன் பவுடரை இவர்கள் என்னென்ன சொல்லி விற்க முடியுமோ அவ்வளவு பொய்களையும் சொல்லி விற்று வருகின்றனர்.
எங்கள் உறவுக்கார் சில நாட்களுக்கு முன்பு இனிப்பு வகையை உண்ணும்போது உங்களுக்கு சுகர் இருக்கே ஏன் இவ்வளவு இனிப்பு எடுத்துக்குரிங்க என்று கேட்டபோது அவர் சொன்னபதில் “இல்ல நான் ஆம்வே ப்ரோடீன் பவுடர் சாப்பிடுறேன் அதனால எனக்கு சுகர் வராது” என்றார். இவருக்கு யார் இப்படி பரிந்துரைத்தார்கள் என்று தெரியவில்லை, ப்ரோடீன் பவுடர் சாப்பிட்டால் சுகர் குறைந்துவிடும் என்று. இவர்களுக்கு மாதம் கிடைக்க வேண்டிய PV க்காக கண்ணா பின்னாவென வாயில் வந்ததையெல்லாம் சொல்லி ஏமாற்றி விற்று வருகின்றனர்.
இப்படி இவர்கள் கண்மூடித்தனமாக மருத்துவ பொருட்களை எடுத்துக்கொள்கிரார்களே, இப்படி மருத்துவர் ஆலோசனை இல்லாமலே நம் விருப்பத்திற்கு எடுத்துக்கொள்ளலாமா என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. இது பற்றிய சந்தேகத்தை போக்கிக்கொள்ள இலங்கை மருத்துவர் துமிழ் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்கள் உங்களுக்காக
புரோட்டின் என்றால என்ன ?
நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான உணவில் உள்ள போசனைப் பதார்த்தங்கள் பிரதானமாக கார்போ ஹைட்ரேட் (Carbohydrate), FAT, புரோட்டின, விட்டமின்கள், கனியுப்புக்கள் எனப் பிரிக்கப்படலாம்.இதிலே உடலின் அன்றாடத் தேவைக்குரிய சக்தியை வழங்குவது பிரதானமாக கார்போ ஹைட்ரேட் அதைத் தொடர்ந்து கொழுப்புக்களும் (FAT)ஆகும்.
புரதமானது அன்றாட தேவைக்கான சக்தியை வழங்குவதை விட மிக முக்கியமாக உடலின் கட்டமைப்பை பேணுவதற்கு அவசியமாகும். குறிப்பாக உடலின் வளர்ச்சியின் போது இதன் அளவு வழங்கப்படவேண்டும். மேலும் நோய் வாய்ப்பட்டவர்கள் அந்த நோயில் இருந்து சுகமகிக் கொண்டிருக்கும் போதும் புரத தேவை சடுதியாக அதிகரிக்கும். அதாவது உடலின் கலங்கள் மீள் கட்டமைப்பதற்கும் சீர் செய்யப்படுவதற்கும் புரதம் இன்றி அமையாதது.அதுதவீர ஒருவர் போதியளவு மாப்பொருள் சத்தையும் ,கொழுப்புச் சத்தையும் உட்கொள்ளாவிட்டாலஅன்றாட தேவைகளின் சக்திக்காக உடலில் சேமிக்கப்பட்டுள்ள புரதங்கள் பாவிக்கப் படும். இதனால் உடலின் கட்டமைப்புச் சீர் குழைந்து மெலிந்த தோற்றமுடையவர்களாக மாறுவார்கள்.
அதாவது ஒருவர் உண்ணும் உணவில் அனைத்துவிதமான போஷாக்குப் பதார்த்தங்களும் தேவையான அளவிலே இருக்க வேண்டும். மாறாக தனியே புரதத்தினை மட்டும் அதிகம் உட்கொள்ளுவதால் நன்மையில்லை .
புரோட்டின் பவுடர்கள் எனப்படுபவை யாவை?
இவை உடலுக்குத் தேவையான அமைனோ அமிலங்களை செறிவாக்கி உருவாக்கப் பட்டவை. இவற்றின் மூலம் உடலுக்குத் தேவையான புரதங்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லப் படுகிறது. இவற்றில் உள்ள அமைனோ அமிலங்களும் இலகுவாக உள்லேடுக்கப் படக் கூடியதென சொல்லப் படுகிறது. இவற்றை உண்பதால் உண்மையில் நன்மைகள் ஏற்படுமா? ஏற்கனவே சொன்னது போல நமக்குத் தேவையான போஷாக்குகள் அனைத்தும் தேவையான அளவிலே கிடைத்தால் மட்டுமே நமது உடலின் தொழிற்பாடுகள் சரியாக நடைபெறும். அவ்வாறு நாமக்குத் தேவையான அனைத்து போஷாக்குகளையும் பெற்றுக்கொள்ள சிறந்த வழி போஷாக்கான உணவுகளை உட்கொள்ளுவதே. தனியே புரோட்டின் பவுடர்களை உட்கொள்ளுவதால் புரோட்டினும் சில கனியுப்பு,விட்டமின்களும் கிடைத்தாலும் நமது அன்றாடத் தேவைக்கான சக்தியை வழங்கும் மாப்பொருள் கொழுப்பு என்பவற்றிற்காக நாம் உண்ணும் உணவையே நம்பியிருக்கு வேண்டும். இவ்வாறு உண்ணும் உணவில் முட்டை, இறைச்சி, மீன் போன்றவற்றை சேர்த்து விட்டாலே போதும் தேவையான புரதத்தையும் சுவையான சாப்பாடுடன் பெற்று விடலாம். பிறகேன் தேவை இல்லாமல்புரட்டின் பவுடர்களுக்காக காசினைச் செலவு செய்ய வேண்டும்?
உண்மையில் யாருக்கு புரோட்டின் பவுடர் தேவைப்படும்?
படுக்கையிலே இருக்கும் அல்லது உணவு வாய் வழியாக உட்கொள்ள முடியாமல் குழாய் மூலம் உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளவர்களுக்கு புரட்டின் பவுடர் வழங்குவது இலகுவாக இருக்கும். சில நோய்கள் ஏற்பட்டு சுகமாகும் காலத்தில் புரோட்டின் தேவை சாதாரண அளவை விட அதிகரிக்கும் போது புரட்டின் பவுடர் உதவும் என்றாலும் அந்த நேரத்திலும் உணவின் மூலம் புரதத்தினைப் பெற்றுக் கொள்ள கூடியவர்கள் உணவில் புரதம் கூடிய உணவுகளை அதிகரிப்பது புரோட்டின் பவுடர் பாவிப்பதை விட சிறந்தது.
உடற் கட்டலகுக்காக தசைகளை புடைக்கச் செய்யும் நோக்கோடும் புரோட்டின் பவுடர்களை ஆண்கள் பாவிப்பதுண்டு. இந்த நோக்கத்திற்காக பாவிக்கும் ஆண்கள் கட்டாயமாக மாப்பொருள் கொழுப்பு போன்றவற்றையும் சற்று அதிகமாக உட்கொள்ள வேண்டியதோடு போதிய உடற்பயிர்ச்சியிலும் ஈடுபட வேண்டியது அவசியம்.
ஆக , சுகதேகியான ஒருவர் அல்லது உணவுகளை உட்கொள்ளக் கூடிய ஒருவர் தனக்குத் தேவையான புரத்தைத்தினை உணவின் மூலம் பெருக் கொள்ள முடியும் போது அனாவசியமாக எதற்காக புரோட்டின் பவுடர்களை நம்பி காசை செலவழிக்க வேண்டும். சந்தையில் உள்ள புரோட்டின் பவுடர்கள் அனைத்துமே ஆயிரத்திற்கும் அதிகமான விலை கொண்டவை.அந்த காசிற்கு நல்லஉணவினை வாய்க்கு ருசியாக சமைத்துச் சாப்பிடலாமே.
அதற்கும் மேலாக சந்தையில் இப்போது ஏராளமான புரோட்டின் பவுடர்கள் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. அதிக விளம்பரம் உள்ள புரோட்டின் பவுடர் நல்ல தரமானது என்ற பெயருடன் அதிகமான விலைக்கு விற்கப்படலாம். ஆகவே புரோட்டின் பவுடர் பாவிக்கத்தான் போகிறேன் என்று அடம் பிடிப்பவர்கள் விளம்பரத்தில் ஏமாறாமல் மற்றைய புரோட்டின் பவுடர்களின் விலைகளை பார்த்து நியாயமான விலையில் இருப்பதை தெரிவு செய்யுங்கள். சந்தையில் உள்ள புரோட்டின் பவுடர்களின் தரம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். முக்கியமாக நாட்பட்ட நோய்கள் குறிப்பாக சிறுநீரக நோயாளிகள் வைத்தியரின் அனுமதி இன்றி புரோட்டின் பவுடர்களை பாவிக்க வேண்டாம்.
நான் ப்ரோடீன் பவுடரை மட்டும் குறிப்பிட்டு சந்தேகங்களை கேட்க்க காரணம் ஆம்வே நிறுவனம் NUTRILIRE என சொல்லப்படும் மருத்துவ குணங்கள் உள்ள பொருட்களில் இதை தான் முன்னிறுத்தி விற்பனை செய்துவருகின்றனர்.
இன்னொரு விஷயத்தில் ஆம்வே நிறுவனத்தில் கவனிக்க வேண்டும் என்றால் இவர்களுடைய பொருட்களை வாங்குபவர்கள் எப்படியாவது முதல் முறை ஏமாற்றப்பட்டு வாங்கிவிடுகின்றனர், பின்பு அந்த பொருளை பயன்படுத்தும்போது விலை உயர்ந்த பொருள் என்று மனதில் நினைத்துக்கொண்டே பயன்படுத்துவதால் இதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்(உளவியல் ரீதியில் இதுதான் நடந்து வருகிறது).
சில நாட்களுக்கு முன்பு எங்கள் உறவுக்காரர் ஊரில் இருந்து ஒரு திருமண விழாவிற்கு வந்திருந்தார். அவர் எப்போதும் ஹமாம் சோப்புதான் பயன்படுத்துவார், நாங்கள் வேறு ஏதேனும் ஒரு சோப்பை கொடுத்தால் வேண்டாம் எனக்கு ஹமாம் பழகிவிட்டது என்று சொல்வார். ஆனால் இந்த முறை அவருக்கு ஹமாம் சோப்பு கொடுக்கும்போது அவர் சொன்ன பதில் “ஆம்வே சோப்பு தவிர வேறு சோப்பு போட்டால் உடல் அரிக்கிறது” என்று. எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை பல ஆண்டுகளாக ஹமாம் சோப்பு பயன்படுத்தியவர் இப்போது இந்த விலை உயர்ந்த சோப்பை பயன்படுத்தவில்லை என்றால் உடல் அரிக்கிறது என்று கூறுகிறார் என்றால் பாருங்கள் இவர் எந்த அளவுக்கு உளவியல் ரீதியாக மனம் மாறிவிட்டார் என்று.
அதேப்போல்தான் இவர்கள் விற்பனை செய்யும் முகத்தை அழகுப்படுத்தும் க்ரீமும் , யாராவது ஒருவர் தன் கண் முன் கருப்பாக தெரிந்துவிடக்கூடாது உடனே இரண்டாயிரம் மூன்றாயிரம் என்று ஏதாவது ஒரு க்ரீமை பரிந்துரைத்து பணத்தை கரந்து விடுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் இதுவரை ஒருநாளைக்கு ஒருமுறை முகம் கழுவியவன் இந்த க்ரீம் தடவுவதர்க்காகவே மூன்று நான்கு முறை தன் முகத்தை கழுவுகிறான். இதனால் முகம் கொஞ்சம் வெள்ளையாக தெரிந்தாலும் க்ரீம் மூலம் தான் வெள்ளை கிடைத்தது என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களிடமும் பரிந்துரைக்கின்றார். சாதாரணமாக எந்த ஒரு க்ரீமும் போடாமல் ஒருநாளைக்கு காலையும் மாலையும் முகத்தை கழுவினாலே முகம் பளிச்சிடும். ஆனால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே முகம் கழுவும் நபர்களை இப்படி விலைஉயர்ந்த பொருட்களை வாங்கவைத்து தனக்குள்ளேயே இவர்கள் பொருட்கள்தான் குணப்படுத்துகிறது என்று நினைக்கவைத்து மேலும் மேலும் ஏமாற்றி வருகின்றனர்.
அதே போல் இவர்கள் விற்பனை செய்யும் பேஸ்ட், பிரஷ் போன்றவற்றுக்கும் இவர்களைவிட விலைகுறைந்த தரமான இந்தியபொருட்க்கள் பலவற்றை கூறலாம். ஆனால் பரிந்துரைப்பவர் உறவினர் நண்பர் என்பதால் முகத்தாட்ச்சனைக்காக வாங்கிவிட்டு பிறகு விலை உயர்ந்த பொருள் என்பதால் தனது மனதுக்குள்ளேயே தான் இதற்க்கு முன் பயன்படுத்திய பொருளை விட நன்றாக உள்ளது என்று தன்னை தானே ஏமாற்றி கொள்கின்றனர்.
ஆம்வே மோசடி என்று அமெரிக்க ஆணையமே கூறியுள்ளது.
அமெரிக்க அரசின் தன்னாட்சி அமைப்பான ‘கூட்டாட்சித் தொழில் ஆணையம்’ ( Federal Trade commision) என்ற அமைப்பு வணிக நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதைப் பற்றியும், அவை கடைபிடிக்கும் வணிக முறைகள் பற்றியும் ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து அளிக்கும். அவ்வாறான பட்டியலில் சங்கிலித் தொடர் நிறுவனங்களை இந்த ஆணையம் சேர்க்க மறுத்துவிட்டது. தொழில் வாய்ப்பு விதிகளின் கீழ் (Business rules and oppurtunities) சங்கிலித் தொடர் வணிகத்தை அங்கீகரிக்க முடியாது என மேற்கண்ட ஆணையம் கூறிவிட்டது. மார்ச் 2008-இல் இந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் சங்கிலித் தொடர் வணிகம் வாடிக்கையாளர்களை வணிகம் செய்யத் தூண்டுவதை விட மூளைச் சலவை செய்கிறது. மத நம்பிக்கையை போல விசுவாசத்தை பரப்புகிறது. இந்த வழிமுறையைத் தொழில் வழிமுறையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ஆணையம் கூறியது. புகழ் பெற்ற அமெரிக்க சங்கிலித் தொடர் வணிக நிறுவனமான ஆம்வே(Amway) நிறுவனத்தை இந்த “மூளைச்சலவை” வழிமுறைக்கு எடுத்துக்காட்டாக ஆணையம் கூறியது. (பார்க்க: http://www.ftc.gov/opa/2008/03/busrule.shtm) அமெரிக்காவின் வணிக ஆணையத்தின் கண்டனத்திற் குள்ளான ஆம்வே சங்கிலித் தொடர் வணிக நிறுவனம் தமிழகத்தில் எந்த தடையும் இன்றி கொடிகட்டி பறக்கிறது. சங்கிலித் தொடர் வணிக நிறுவனங்கள் வாங்குவோரிடம் பொருள் பற்றிய முழுத் தகவல்களை சொல்லாமல் திரித்துக் கூறி வணிகம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் அதனை ஞாயமான வணிகமாக அங்கீகரிக்க முடியவில்லை என்று அமெரிக்க ஆணையம் கூறுவது கவனிக்கத்தக்கது.
திறந்தப் பொருளாதாரமும் தனியார்மயமும் கோலோச்சுகிற அமெரிக்காவிலேயே சங்கிலித் தொடர் வணிகம் ஐயத்தோடு பார்க்கப்படும் போது இந்தியாவில் இந்த மோசடி வணிகத்திற்கு எந்தக் கண்காணிப்பும் இல்லை என்பது வெட்கக் கேடானது. ‘கோல்ட் க்வெஸ்ட்’; நிறுவனத்தில் ஒருவர் ரூ 30,000 கொடுத்து உறுப்பினராவார். அந்நிறுவனம் அவருக்கு தங்கக் காசு ஒன்றைக் கொடுக்கும்.
அவ்வாறு சேர்ந்த பின்பு அவர் 3 பேரை உறுப்பினர்களாக இதே போல் சேர்க்க வேண்டும். சேர்த்து விடப்பட்ட மூவரும் அவரவர்கள் 3 பேரை உறுப்பினர்களை சேர்த்து விட்டுக் கொண்டே போவர். எத்தனை பேரை சேர்க்கின்றனரோ அதற்கு ஏற்றாற் போல் முதல் முதலில் சேர்ந்தவர் முதல் அவருக்கு பின் சேர்பவர்கள் அனைவருக்கும் தரகு பணம் கொடுக்கப்படும். இதன் மூலம் எளிதில் பணம் பார்த்துவிடலாம் என்று கவர்ச்சிகரமாக விளம்பரப் படுத்திய பல ‘பிரபல’ங்களை யெல்லாம் பேசவிட்டு மூளைச்சலவை செய்து உறுப்பினர்களை சேர்த்து வந்தது இந்நிறுவனம். இப்படி இந்நிறுவனத்தில் சேர்பவர்கள் அனைவரும் 3 பேரை சேர்த்து விட முடியாது. ஒரு சிலர் தான் சேர்ப்பர். எவரையும் சேர்க்க முடியாதவர்கள் அவர்கள் கொடுத்த பணத்தை இழந்திட வேண்டியது தான். அவர் கட்டிய பணத்தை நிறுவனம் அப்படியே எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு இந்நிறுவனம் சுமார் ரூ.100 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித் துள்ளனா;. இந்நிறுவனத்தின் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் காவல்
துறையினரால் முடக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் ஏமாந்த பலரும் இந்நிறுவனம் பன்னாட்டு நிறுவனம் என சொன்னதால் தான் இதில் இணைந்தோம் என்று செய்தி ஊடகங்களுக்கு பேட்டியும் கூட அளித்தனர். பன்னாட்டு நிறுவனம் என்றால் அவ்வளர் கவர்ச்சி.

4 comments:

  1. neengal solvathu unmai than. amway is a frad company

    ReplyDelete
  2. தீர ஆராயாமல் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம் நண்பரே.....

    ReplyDelete
  3. All network marketing companies are not illegal .....

    ReplyDelete
  4. உண்மை தெரியாமல் விளக்கம் சொல்லக்கூடாது. உதாரணம் ஒருமனிதன் நோய்வாய் படுகிறான் என்றால் அவன் உடேன பார்மசிடிகள் மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகுமா?,நோய்வாய்பட்டவன் ஆரோக்யம் குறைபாட்டால் நோய்வாய்படுகிறான்(சத்து குறைபாட்டால்) இபோது ஆரோக்யம் உண்டுபண்ணா சத்து கலவைகளை கொடுக்கிறார்கள் இது 100% இயற்கையானது.மார்க்கெட்டில் உள்ள பொருள்களை விட MRP அதிகமாக தெரியும் ஆனால் அதில் உள்ள உள் பொருள்கள் அடர்த்தி அதிகம் இன்னும் நிறைய இருக்கு இது எப்படி ஹராம் ஆகும்

    ReplyDelete