பர்மா (மியன்மார்) வில் தினமும் அழிக்கப்படும் முஸ்லீம்கள். – உலக நாடுகள் மவுனம் காப்பது ஏன்?
மியன்மார்
என்று தற்போது அழைக்கப்படும் பர்மாவில் கடந்த சில நாட்களாக அங்கு வாழும்
முஸ்லீம்களை அங்குள்ள அரசு துட்டுக் கொண்டு குவித்து வருகின்றது.
பர்மாவில் வாழும் மக்களில் சுமார் 15 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் முஸ்லீம்கள் அதில் 10 லட்சம் பேர் பர்மாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பர்மியர்கள் 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வங்காலத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள்.
“அல் வதனுல் மிஸ்ரிய்யா” என்ற பத்திரிக்கைக்கு ஆயிஷா ஸூல்ஹி அளித்துள்ள பேட்டியில் பின்வரும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பர்மாவில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானம்,
பன்றி இறைச்சி அல்லது மரணம் இந்த மூன்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு
செய்து கொள்ள முடியும் என்று துன்புறுத்தப் படுகின்றார்கள். ஆனால் அங்குள்ள
முஸ்லீம்கள் மரணத்தைத் தான் தங்கள் தேர்வாக எடுத்துக் கொள்கின்றார்கள்.
பர்மாவில் முஸ்லிம்கள் அனுபவிக்கும்
கொடுமைகளை கண்டும், கேட்டும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். எனது
நாட்டைச் சார்ந்தவர்கள் கூட்டாக கொலைச் செய்யப்படும் பொழுது எவ்வாறு நாம்
மெளனமாக இருக்கமுடியும்?
பர்மா முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளை மற்றவர்களுக்கு கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் மிக முக்கிய செய்தியாகும்.
பல தினங்களாக நான் எனது குடும்பத்தினரை
தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால், தாக்குதலில்
அவர்களுடைய வீடுகள் தகர்க்கப்பட்டு பங்களாதேசுக்கு அகதிகளாக அவர்கள்
சென்றுள்ளனர். எனது சில உறவினர்களும், நண்பர்களும் கொடூரமாக கொலைச்
செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு
கொடுமை இழைக்கப்படுகின்றனர்.” இவ்வாறு ஆயிஷா ஸூல்ஹி கூறியுள்ளார்.
முஸ்லீம்கள் பற்றி வாய் திறக்காத ஆங் சாங் சூகி.
ஜனநாயக ரீதியில் போராடியமைக்காக பல
ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்
விடுதலை செய்யப்பட்டவரும், பர்மாவின் முக்கிய எதிர்க் கட்சியான நேசனல்
லீக்ஃபார் டெமோக்ரெஸியின் (என்.எல்.டி) தலைவரும் சமாதானத்திற்கான நோபல்
பரிசு வென்றவருமான “ஆங் சாங் சூகி” முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை
தொடர்பில் இது வரைக்கும் மவுனம் சாதித்து வருவது அங்குள்ள முஸ்லீம்கள்
மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆங் சாங் சூகியின் மவுனம் தொடர்பில்
பங்காஷ் பிரஸ் டி.வி யில் கருத்து வெளியிட்ட “ஷஹீத் சுல்ஃபிகர் அலி பூட்டோ
இன்ஸ்ட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியின் பேராசிரியரும், பிரபல அரசியல்
பகுப்பாய்வாளருமான குலாம் தாகி” அவர்கள் “ஆங் சாங் சூகி” யின் மவுனம்
குற்றகரமானது என சாடுகின்றார்.
கடந்த மாதம் ஜெனீவாவில் வைத்து
பத்திரிக்கையாளர்களை சந்தித்த “சூகி” பர்மா முஸ்லீம்கள் அந்நாட்டு
குடிமக்கள் தானா? என்ற கேள்விக்கு தெரியாது என்று லாவகமாக பதிலளித்து
தப்பித்துக் கொண்டார்.
சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவர்
தனது நாட்டின் குடிமக்கள் தாக்கப்படுவது குறித்து அமைதியாக இருப்பதும்,
அவர்கள் தனது நாட்டினர் தானா என்பதே தெரியாது என்று சொல்வதும் ஆச்சரியமாக
இருக்கிறது.
இந்த கொடூர நிகழ்வுகள் தொடர்பில் இது
வரைக்கும் எந்த உலக நாடுகளும் வாய் திறக்காமல் மவுனம் காக்கின்றன.
குறிப்பாக எந்த அரபு நாடும் இது தொடர்பில் கருத்துக்களோ கண்டனங்களோ
தெரிவிக்கவில்லை. என்பது மிகவும் வருந்தத் தக்க விஷயமாகும்.
அன்பின் இஸ்லாமிய உறவுகளே!
பர்மாவில் நமது சகோதரன்
கொல்லப்படுகின்றான், நம் சகோதரிகள் கற்பழிக்கப்படுகின்றார்கள்,
இவர்களுக்காக நமது இரு கரங்களையும் ஏந்தி ஏக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு
அன்பாய் வேண்டுகின்றோம்.
No comments:
Post a Comment